A எனது நாட்குறிப்பு: 2010

Friday, November 12, 2010

கண்கலங்க வைத்தக் கட்டுரை.




"வள்ளியின் பிள்ளை நான்!"


குறப்புத்தி' என்கிறீர்கள். 'குறப்பய மாதிரி முழிக்கிறான்' என குழந்தையைக்


கொஞ்சுகிறீர்கள். 'குறவன் புத்தி சும்மா இருக்குமா?' என்கிறீர்கள். அன்றாட வாழ்வில், குற்ற உணர்ச்சி எதுவும் இன்றி நீங்கள் உதிர்க்கும் சொற்கள் ஒவ்வொன்றும், சமூகத்தின் அடிமட்டத்தில் வாழும் குறவர் இன மக்களைக் குறிவைத்துக் காயப்படுத்துவதை நீங்கள்அறி வீர்களா?"-தீர்க்கமாகக் கேட்கிறார் மணிக்கோ. பன்னீர்செல்வம். குறவர் இனத்தில் இருந்து படித்து, முன்னேறி வந்திருக்கும் வெகு சிலரில் ஒருவர். 'சனங்களின் பாட்டு', 'தொடரும் காலனிய குற்றம்', 'குறவர்-பழங்குடி இன வரைவியல் ஆய்வு' என்ற கவனிக்கப்பட்ட நூல்களை எழுதியவர். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலை ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்து வரும் பன்னீர்செல்வம், அடிமட்ட சாதியில் பிறந்து, ஆதிக்க சாதிகளின் உலகத்தில் பிரவேசிப்பதன் உளவியல், உலக சிக்கல்களை மையமாகக்கொண்டு நாவல் ஒன்றை எழுதிக்கொண்டு இருக்கிறார்.

"தமிழ்நாட்டில் குறவர் என்றாலே, எல்லோருக்கும் நினைவில் வருவது நரிக்குறவர்கள்தான். அவர்கள் வட இந்தியாவின் ஆரவல்லி மலைத்தொடரில் இருந்தும், குஜராத் பகுதிகளில் இருந்தும் நாடோடிகளாக இடம் பெயர்ந்து வந்தவர்கள். இவர்களைத் தவிர, தமிழ்நாட்டில் 28 வகையான குறவர்கள் இருக்கிறார்கள். கல்குறவர், கறிவேப்பிலை குறவர், கூடைமுறம் கட்டிக் குறவர், உப்புக் குறவர், பூனைக்குத்தி குறவர்... என்ற இவர்கள் அத்தனை பேரும் தமிழ்நாட்டின் பூர்வீகப் பழங்குடிகள். மலைக் காடுகளில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தவர்கள். திருச்செந்தூர் கோயிலில் கையில் மந்திரக்கோல் வைத்துக்கொண்டு சோதிடம் பார்க்கும் பெண்ணிடம் 'நீங்கள் யார்?' எனக் கேளுங்கள், 'நாங்கள் வள்ளிமக்கா' என்பாள். நாங்கள் வள்ளியின் வழி வந்தவர்கள். குறிஞ்சி நிலத்தில், தேனும் தினை மாவும் உண்டு வளர்ந்த ஆதித் தமிழர்கள். எங்களிடம் இருந்து வனம் பிடுங்கப்பட்ட பின்பு, மெள்ள மெள்ள சமவெளிப் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தோம்.



நான் 'கூடைமுறம் கட்டிக் குறவர்' பிரிவைச் சேர்ந்தவன். சாலை ஓரங்களில் அமர்ந்து கூடைமுறம் கட்டுவதே எங்கள் தொழில். திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்பட்டி, சொந்த ஊர். தந்தைக்கு அரசு நிறுவனத்தில் வாட்ச்மேன் வேலை கிடைத்ததால், தஞ்சாவூருக்கு இடம் பெயர்ந்தோம். புதிய ஊரில் எங்கள் சாதி யாருக்கும் தெரியாது என்பதால், எங்களை 'மதுரைப் பக்கத்தில் இருந்து வந்த பிள்ளைமார்' என்றே நினைத்தார்கள். பிறப்பால் தலித்தாக இருந்துகொண்டு, நடைமுறை வாழ்க்கையில் உயர்சாதியாக நடிக்க ஆரம்பித்தோம். ஆனால், அது பெரிய துயரமானதாக இருந்தது. எந்த நேரமும் சாதி வெளியில் தெரிந்துவிடுமோ என்று பதற்றமாக இருக்கும். யாராவது 'குறப்பய மாதிரி இருக்கான் பாரு!' என்று யாரையேனும் திட்டினால், அப்போது நான் உயர்சாதி மனநிலையில் அதைச் சகித்துக்கொள்ள வேண்டும். ஒருநாள், என் அப்பாயி இறந்துபோன சேதி கேட்டதும், அப்பா வாய்விட்டு அழுதார். பதறிப்போன அம்மா, 'மெதுவா அழுங்க' என அப்பாவைத் தடுத்தார். ஏனெனில், விஷயம் தெரிந்தால் சுற்றி உள்ளவர்களும் துக்கத்துக்கு ஊருக்கு வருவதாகச் சொல்வார்கள். வந்தால் சாதி தெரிந்துவிடும். சாவு தெரிந்தாலும் சாதி தெரியக் கூடாதே!

கல்லூரிப் படிப்பு முடித்து 'தமிழய்யா'வாக தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே இருக்கும் கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்தேன். சுற்று வட்டாரத்தில் 'தமிழய்யா' என்று எனக்கு நல்ல பெயர். நான் தஞ்சாவூரில் இருந்து வந்துஇருந்ததால், என்னை 'கள்ளர்' என்று நினைத்துக் கொண்டார்கள். ஒருமுறை என் மாணவன் ஒருவன் யதேச்சையாக என் சான்றிதழில் 'இந்து-குறவன்' என்று எழுதி இருந்ததைப் பார்த்துவிட்டான். கதவை மூடிக்கொண்டு, 'இதை எல்லாம் வெளியில் சொல்லாதடா' என்று கேட்டுக்கொண்டாலும், அவன் பேச்சுவழக்கில் சொல்லிவிட்டான். 'தமிழய்யா ஒரு குறவர்' என்ற விஷயம் மெதுவாகத் தெரிய ஆரம்பித்தது. உடன் தங்கியிருந்த ஆசிரியரின் பணம் திருட்டு போனபோது, 'குறவன் புத்தி சும்மா இருக்குமா?' என்று தொடர்பே இல்லாத என் மீது திருட்டுப் பட்டம் சுமத்தப் பட்டது. இதை எல்லாம் கடந்து, சம்பள உயர்வுக்காக மட்டுமே ஆசிரியர்கள் போராடிய சமயத் தில், மாணவர்களின் உரிமைகளுக்காக நான் போராடினேன். அதனால், சில மாதங்களுக்கு முன்பு அங்கிருந்து விடைபெறும் வரையிலும் மாணவர்கள் என் மீது அன்பாகவே இருந்தார்கள்!" என்கிற பன்னீர்செல்வம்,

ஏற்கெனவே ஒரு பி.ஹெச்டி முடித்தவர். தற்போது, 'தமிழக கறுப்பின இலக்கியப் படைப்புகள் கட்டமைக்கும் அடையாள அரசியல்' என்ற தலைப்பில், இரண்டாவது பி.ஹெச்டி. செய்துகொண்டு இருக்கிறார்.

"இப்போதும் திருடர்கள் பற்றி எச்சரிக்க போலீஸ் கொடுக்கும் அறிவிப்பு என்ன? 'திருடர்கள் எந்த வடிவிலும் வரலாம். பச்சைக் குத்து வதுபோல, அம்மி கொத்துவதுபோல, பூனைக் குத்துவதுபோல, கூடை முடைவதுபோல... எந்த வடிவிலும் வரலாம், ஜாக்கிரதை!' என போலீஸ் எச்சரிப்பது முழுக்க குறவர்களைக் குறிவைத்துதான். இது எல்லாம் சேர்ந்து, மக்கள் மனதில் குறவர்கள் என்றாலே, திருடர்கள் என்ற உளவியலை விதைக்கிறது. ஆனால், உண்மை அதுஅல்ல. என்னைப் போன்ற வெகு சிலரைத் தவிர, இன்னமும் குறவர்கள் அத்தனை பேரும் பன்றி மேய்த்துக்கொண்டும் துப்புரவு வேலைகள் செய்துகொண்டும் விளிம்பு நிலையில்தான் வாழ்கிறார்கள். இப்படியான எனது வாழ்க்கை அனுபவங்களை, ஒரு குறவர் இனத்துக்காரன் உலகத்தை எதிர்கொள்ளும்போது நடக்கும் உண்மைகளை அப்படியே எழுதி இருக்கிறேன். குறிஞ்சி நிலத்தில், தேனும் தினைமாவும் தின்று வளர்ந்த வள்ளியின் பிள்ளைகள், சமவெளியில் சாக்கடையோரம் தள்ளப்பட்ட கதை அது!"


நன்றி: ஆனந்த விகடன்

டிஸ்கி: படித்து முடித்ததும் மனதை பிசைந்ததால் கட் அண்ட் பேஸ்ட், விகடன் படிக்காதவர்களுக்காக.

Thursday, November 11, 2010

என்கவுண்டரும் என் கொஸ்டினும்..

ஒரு பத்து வருசத்தக்கு முன்னால, பாண்டியம்மான்னு ஒரு பொம்பளயக் காணாமுன்னு அந்தம்மா வீட்டுக்காரரு போலீஸ் ஸ்டேசன்ல கம்ப்லெய்ண்டு பண்றாரு. நம்ம எவர் ப்ரக்னண்ட் நெவர் டெலிவரி போலிஸு "எலேய் நல்லாத் தேடி பாருலே, எவிங்கூடயாச்சும் ஓடிகீடி போயிறக்கப்போறா"ன்னு அட்வஸ்வேறக் கொடுக்குது.

போனவாரம், ஸ்கூலுக்கு அனுப்புன பிள்ளைங்களக் காணோமுன்னு பதறிப்போயி, போலீஸ்கிட்ட கம்ப்ளெயிண்ட கொடுத்துட்டு, பாவம் அவங்களும் முடிஞ்சளவுக்குத் தேட்றாங்க. நம்ம தீயணைப்பு வண்டிமாதி, போலிஸும் மெதுவா தொப்பைய தூக்கிகிட்டு கெளம்புது.

பொண்டாட்டிய தேடி அலுத்துப்போன பாண்டியம்மா புருசன், கோர்ட்டுக்குப் போயி " சாமி.. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும், எம் பொண்டாட்டி உசுரோட வேணும்"ன்னு சொல்ல, நீதிபதி அய்யாவும் கெடு கொடுத்து உசுரோடக் கொண்டாங்கய்யான்னு சொல்லிட்டாரு.

பிள்ளைங்களக் கடத்திட்டாங்கங்ற செய்தி, தீயாப் பரவி எதிர்க்கச்சிக்காரங்கெல்லாம் எடக்கு மடக்கா மடக்கவும் தமிழினத் தலைவருக்கும் கோபம் பொத்துகிட்டுவர, "என்ன செய்வீங்களோத் தெரியாது, இன்னக்கிக்குள்ள பிடிச்சாகனுமுன்னு சொல்லிட்டாரு.

ஊரோரமாப் கரிக்கட்டையாய் ஒருப் பொம்பளப் பொணம். பாண்டியம்மாதான்னு போலீஸ் பாண்டியம்மா புருஷங்கிட்ட சொல்லுது. கரியாக் கெடக்கு. ராஜ்கிரன் கணக்கா சாம்பல முகத்துல பூசிகிட்டு அழுதுகுமிக்கிறாரு பாண்டியம்மா புருஷன். யாருமேலெல்லாம் சந்தேகமுன்னு ஒரு லிஸ்ட்ட பாண்டியம்மா புருஷன் சொல்றாரு. தேடிக் கிளம்புது ஸ்காட்லாண்டு போலிஸ்.

அங்கயிங்க தேடி அலுத்துப் போன நேரத்துல, கொழந்தங்க ரெண்டும் ஓட்ற தண்ணியில பொணமா ஒதுங்குது. கோயமுத்தூரே அழுகுது. கோபம் கொப்பளிக்குது. போலிஸு, கடைசியாப்பாத்த பாட்டிகிட்ட க்ளூக் கேக்குது. தொப்பையத் தூக்கிகிட்டு கெளம்புது போலிஸு.

பாண்டியம்மாளக் கொன்னுட்டு அதே ஊர்ல தெனாவெட்டாத் திரிஞ்ச "அந்த" பத்துப் பேர அள்ளிகிட்டு கோர்ட்டுக்குப் போகுது. விசாரனையப்போ, "பாண்டியம்மாளக் கற்பழிச்சதையும், கொலை செஞ்சதையும், எரிச்சதையும்" அப்படியே தத்ரூபமா ஜட்ஜ் முன்னாடி நடிச்சுக்காட்றாங்க. ஜட்ஜ் கண்ணுல நெருப்பு.

கொழந்தைகளைக் கொன்னுட்டு தெகிரியமா கோயமுத்தூருக்கே திரும்பி வந்துகிட்டு இருந்த மோகனக் கிருஷ்ணனையும், கூட்டாளியயும் அழகா கோத்துப் பிடிக்கிறாங்க போலிஸு. கெடுத்ததையும், கொலை பண்ணுனதையும் வாக்குமூலமா தர்றான் கொலகாரப்பாவி மோகனக் கிருஷ்ணன். கோவை மக்கள் மட்டுமில்ல தமிழக மக்க எல்லாத்துக்குமே கோவமுன்னா அப்படியொருக் கோவம்.விட்டா சாவடிக்கிற வெறி.

ஜட்ஜ் ஆயுள் தண்டனைக் கொடுத்து பேனா நிப்ப ஒடச்சிக் கெடாசுறாரு. பாண்டியம்மா புருஷன் ஜட்ஜப் பாத்து " யெய்யா நீங்கதேன் எங்க கொல தெய்வம், நீதி பொழச்சிருச்சுய்யா, இன்னக்கிதான் தீபாவளி"ன்னு ஓன்னு கண்ணீர் விட்றாரு.

எதிர்கச்சி ஏடாசி, மக்களோடக் கொந்தளிப்பு "சுட்டுத்தள்ளுய்யா"ன்னு ஆர்டரு. விசாரிக்கப்போன விடிகால அஞ்சு மணிக்கு பொட்டு பொட்டுன்னு மூனு தோட்டா மோகன கிருஷ்ணன் உடம்புல. பொணமானப் போட்டோ. எல்லா மக்களும் ஆனந்தக் கண்ணீரு. நரகாசூரன் செத்தான்யான்னு கோசம். கொழந்தைகளப் பெத்தவங்க " எங்களுக்கு இன்னிக்கிதான் தீபாவளி"ன்னு கண்ணீர்விட. ஒரு நல்லத் தீர்ப்பு!!!?

பாண்டியம்மாளக் கடத்தி கொலை செஞ்சு ஒரு பத்து வருசம் கழிச்சு, பாண்டியம்மா உயிரோட வந்து, "யெய்யா ஜஜ்ஜு, என்ன யாரும் கடத்தல, நாந்தேன் இஷ்டப்பட்டு இதோ.. இந்தாளுகூடப்போயி, மக்கமாறப் பெத்துட்டு உசுரோட இருக்கேன்"ன்னு சொல்லுச்சு. ஸ்காட்லாண்டு தமிழ் போலீஸுக்கு ஒரு மசுரும் வெளங்கல.

அப்போ அந்த எரிஞ்சுப்போண அந்தப் பொம்பளப் பொணம் யாரு?
அவளக் கொண்டத யாரு?
இத்தன வருசமா கொலையே செய்யாம ஆயுள்கைதியா ஜெயிலுல இருந்தாங்களே அவங்களக்கு என்னத்த கொடுத்தா சரியான நஷ்ட ஈடாகும்?
அப்ப நம்ம போலீஸ் நெஜமாலுமே ஸ்காட்லாண்டு போலிஸு இல்லையா ?
வெரும் சிரிப்பு போலிஸா?

அப்படின்னா, இந்த மோகனக்கிருஷ்ணனையும் நாளக்கி யாராவதும் நிரபாதின்னு சொல்லிடுவாங்களா?
ஒரு வேள நெஜமான குத்தவாளிங்க மிடுக்கா வெளியில அலையுறாங்களா?
அய்யய்யோ ஒன்னுமே புரியலயே...

ஏங்க ஒங்களுக்கு எதாச்சும் வெளங்குது...?

Tuesday, November 2, 2010

குழந்தைகள் கடத்தலும் பெற்றோர்களின் கதறலும்.

கடந்த தினங்களில் பொதுவாக எல்லா தினசரிகளிலும் கோவையில் நடந்த குழந்தைக் கடத்தலையும், கொலை செய்ததையும் போட்டு அனைத்துப் பெற்றோர்களின் பி.பி யை எகிறவைத்தது.

படிக்கும்போதே மனது கனத்துவிடுகிறது. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பாவிகளுக்கு பணம்தான் தேவையென்றால் திருடியாவதும் சாதித்துக்கொள்ளலாம். அதைவிடுத்து ஒன்னுமே அறியாத அந்த பச்சை மண்ணுகளை பலவிதங்களில் துன்புறுத்தி தண்ணீரில் தள்ளிவிட்டுள்ளனர். மேலும் அந்தப் பெண்னை அவர்கள் பலாத்காரம்படுத்தியிருக்கலாம் என்று கேள்விப்படும்போது அந்த பாதகனின் "அதை" வெட்டி எறிந்தால்தான் என்ன என்று இருக்கிறது.

பாவம் அந்தப் பெற்றோர்களுக்கு இனி ஒவ்வொரு நாளும் நரகமே. இருந்த இரண்டு குழந்தைகளையும் அள்ளிக்கொடுத்துவிட்டார்கள். இனி எப்படிதான் அந்த நரகத்திலிருந்து அந்த பெற்றோர்கள் வெளியே வரப்போகிறார்களோ? யாரு என்ன ஆறுதல் சொன்னாலும் அதெல்லாம் ஈடாகிவிடுமா?

இது முதல் சம்பவமும் இல்லை. விட்டுவிட்டு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. பெற்றோர்களும் அரக்கப்பறக்க ஓடும் வாழ்க்கையில் நிதானம் தவறுகின்றனர். இனி அரசாங்க எந்திரத்தை நம்பி எந்த ப்ரோயோஜனமும் இல்லை. நாமே நம்மைக் காத்துகொண்டால்தான் உண்டு. என்ன செய்யலாம்?

எக்காரணம்கொண்டும் குழ்ந்தைகளை ஓட்டுனரை நம்பியோ ஆயாக்களை நம்பியோ அனுப்பாதீர்கள். குழ்ந்தைகளுக்காகத்தான் நாம் இத்தனை இன்னல்களிலும் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். எனவே அவர்களுக்காக நாம் மெனக்கெட்டே ஆகவேண்டும். மேலும் ஓட்டுனர்களும்,ஆயாக்களும் சாதாரண மனிதர்களே. அவர்கள் அடுத்தவரிடம் வேலை செய்யும் நிலையை நோக்கினாலே அவர்களின் பொருளாதாரத்தின் நிலமை புரியும். அவர்களுக்கும் கடன்சுமை, பிக்கல் பிடுங்கல் நெஞ்சை அழுத்தும். அது என்றாவது ஒரு நாள் பொல்லாத சிந்தனையில் தள்ளி, நமக்கும் நரகமாக மாறலாம். எனவே ஓட்டுனரையோ, ஆயாக்களையோ ஆழ்ந்து கவனித்துகொள்வது நலம்.

குழந்தைகளை தனிக்காரிலோ அல்லது தனி ஆட்டோவிலோ பள்ளிக்கனுப்புவதைவிட பள்ளிப்பேருந்தில் எல்லாக் குழந்தைகளுடன் அனுப்புவது சிறந்தது.அதுவும் நம் கண்முன்னே ஏற்றிவிடுதல் நலம்.

குழந்தைகளுக்கு எதாவது தேவைப்படும்பொழுது தனியாக ஓட்டுனருடனோ அல்லது ஆயாக்களுடனோ அனுப்பி பழக்கக்கூடாது. ஏனென்றால் அவர்கள் கூலிக்கு வேலை செய்பவர்கள். என்றாவது ஒரு நாள் அவர்கள் வேறு வேலைக்கோ அல்லது வேறு வீட்டுக்கோ செல்லலாம். அப்பொழுது நீங்கள் செய்த எதோ ஒரு விசயம் அவர்களுக்கு உங்களை எதிரியாக்கலாம். அது குழந்தைகளுக்கு வினையாக முடியலாம்.

என்னதான் ஆயாவோ ஓட்டுனரோ குழந்தைகளை நன்றாகக் கவனித்தாலும் என்றைக்கும் அது பெற்றோர்களுக்கு ஈடாகாது. நமது வேலையை எளிதாக்க பொதுவாக எல்லாப் பெற்றோர்களும் ஓட்டுனரை நம்பி குழந்தைகளை ஒப்படைப்பதை பரவலாக காண்கிறோம். வேண்டாமே, அந்த தேவையில்லாதப் பழக்கத்தை ஒழித்துவிட்டு நாமே கவனித்துகொள்வோம்.

மேலும் நண்பர்கள், நண்பிகள் மற்றும் அலுவலக நட்புகள் என்று நமது குழந்தைகளை எல்லோர்க்கும் அங்கிள் ஆண்டி என்று பழக்கிவிடுவோம். ஆனால் எல்லோரும் எப்போதும் ஒரே மாதிரி இல்லைதானே. இந்த கலிகாலத்தில் சின்ன சின்ன விசயங்களுக்குக்கூட மிகப்பெரியதாக சிந்தித்து நம்மை நரகத்தில் தள்ளக்கூடிய வாய்ப்புகள் அதிகம்தானே.


எனவே பெற்றோர்களே வரும் முன் காப்போம். ஈடில்லா இழப்பை தவிர்ப்போம்.

Monday, November 1, 2010

கத்தி போயி வாலு வந்தது டும் டும் டும்..

பதிவர் ராஜனுக்கு திருமண வாழ்த்துக்கள். மிகத் தாமதமாகிவிட்டது. நம்மக்கும் வேலையிருக்கும்தானே. அதனால என்ன, லேட்டா சொன்னாலும் லேட்டஸ்ட்டா சொல்லிடுவோம்.

பதிவர் ராஜன் புரட்சிகரக் கருத்துக்களை யாருக்கும் பயப்படாமல் சொல்பவர் என்ற ஒரு எண்ணங்கள் பலருக்கும் உண்டு. ஆனால் எனக்கென்னமோ அவ்வளவாக ஈர்த்ததில்லை. தெளிவில்லா டாஸ்மாக் வார்ததையாகவே இருக்கும். அதிலும் நடுநிலை போல காட்டிக்கொண்டாலும் ஒரு பக்கம் மட்டும் சறுக்குவது தெளிவாகவே இருக்கும். அதிலும் தெரிந்தே ஜாதியை கையிலெடுத்து ஆடுபவர்க்கு வக்காலத்து வாங்கவில்லையென்றாலும் கேள்வி கேட்க வாய்ப்பிருந்தும் நழுவிய நேரம் பல.

அதே போல, பார்வதி அம்மாளின் மருத்துவ அனுமதி மறுப்புக்கு திருவாளர் சந்தோசம் காட்டும்போதும் தலையோ வாலோ ஆடவில்லை என்பதும் தெளிவு. கேட்டால் எல்லோரும் சொல்லும் விசய்த்தில் சொல்ல என்ன இருக்கிறது என பதிலாக வந்திருக்கலாம்.

இப்பொழுது ராஜன் திருமணம் நல்லதாக நடந்தேறியது.வாழ்த்துக்கள். ஆனால் அதில் சில கேள்விகள். ஆனா ஊனா என்றால் பகுத்தறிவு பகலவனாக காட்டும்போது வகைதொகையில்லா கேள்விகள் கேட்டதை நானே கண்டதுண்டு. ஆனால் இப்பொழுது அந்த பகுத்தறிவை தூக்கி பரணில் போட்டுவிட்டு, வினாயகர் போட்டோ, தாலி, நல்ல நேரம்,மந்திரம் ஓதுதல் என அத்துனையும் கடைபிடிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இருக்கட்டும். மனைவியின் நம்பிக்கைக்கு மரியாதை கொடுப்பதை வரவேற்போம். மேலும் மாமனாரின் மனதை புண்படாதவாறு நடந்துகொண்ட ராஜனுக்கு வாழ்த்துக்கள்.

இப்பொழுது என் கேள்விகள்.

மனது என்பது உங்கள் உறவுகளுக்கு மட்டும்ந்தான் பட்டா போட்டிருக்கிறதா? அப்படியில்லை என்றால் கீழே இருக்கும் தங்கள் பதிவில் இருக்கும் வார்த்தைக்கு என்ன அர்த்தம்?

பிறைபார்த்தல் என்னும் பிற்ப்போக்குதனம் என்பதை பக்கம் பக்கமாக எழுதினார். ஏன் அந்த மார்க்கத்தை சேர்ந்தோர்க்கு மனமில்லையா? வலி இருக்காதா? நேற்று உங்கள் சொந்தங்களுக்காகப் பொறுத்துகொண்ட நீங்கள் மற்றவர்களுக்கு அனுசரித்துபோக வலிக்குமா?

என்னமோப் போங்க, மனுசனால எப்பயும் ஒரே மாதி இருக்கமுடியாதுதானே? மனுசப் பயலுகளே வேசத்துக்கு வேசம்போட்றவங்கெதானே.

Friday, October 22, 2010

ஞானிகள் எல்லோரும் ஞானிகளா?

திரும்ப திரும்ப தெரிந்தே ஞானியப் பற்றி பேசுவதில் அயற்சி ஏற்ப்பட்டாலும் ஒன்றுமே வெளங்காத சிலர் இதை உண்ணமயென்று எண்ணும் அபத்தம் இருப்பதால் அடைப்புக்குள் ஞானியின் வார்த்தையும் அடைப்புக்கு வெளியே நமது எண்ணத்தையும் சொல்லியுள்ளோம். NDTV-HINDU நடந்தது என்ன என்பதைப் படிக்க க்ளிக்கவும்.


//நண்பர்களே,
நான் எம்.ஜி.ஆரின் அன்றைய அசல் வயதைக் குறிப்பிட்டேன். அதிகாரப்பூர்வமான வயதை அல்ல.//


அசல் வயது என்று எதை எப்படி நிர்ணயிக்கிறார். அதற்கான எதாவது ஆதாரம் கொடுக்க முடியுமா? இல்லை எம்.ஜி.ஆரின் ஊர்க்காரரா அன்றில் அசலை தெரிந்துகொள்ளும் அளவிற்கு நெருங்கிய நண்பரா? நானறியேன் பராபரமே. ஞானியென்றதாலா?

//முத்து படத்தைப் பார்த்துவிட்டு ஜப்பானியர்கள் சென்னை வந்தார்கள் என்பது பற்றி வெளியான முதல் செய்தியில், பழைய பத்திரிகைகளைத்தேடினால் பார்க்கலாம், அவர்கள் நடிகை மீனாவைக் காண்பதற்காக வந்ததாகத்தான் குறிப்பிடப்பட்டது. அதன் பின்னரே ரஜினியைக் காணச் சென்றார்கள். ரஜினிக்காக இயங்கும் மார்க்கெட்டிங் டீம், அதை சிரப்பாக பயன்படுத்திக் கொண்டது. மீனாவுக்கு அப்படிப்பட்ட டீமும் தேவையும் இருக்கவில்லை.//

நீங்கள் தினமும் செய்திதாள் படிப்பவராக இருந்தால், இது எவ்ளோ பெரிய அபத்தமென்று சட்டென ஞாபகத்துக்கு வரும். நமது பிரதமரின் ஜப்பான் பயணத்தின் போது, ஜப்பான் பிரதமர் சொன்னாராம், "எங்கள் மக்களுக்கு ரஜினியைப் பிடிக்கும்" என்று. இதன் அர்த்தம் பச்சைக் குழந்தைக்கும் தெரியும். ஒரு வேளை ஞானக் குழந்தைகளுக்கு தெரியாதோ?


//ரஜினி நல்ல நடிகர்.//

காலம் கடந்த ஞானம். ஒரு வேளை எல்லா ஞானிகளுக்கும் இப்படித்தானோ?

//ஆனால் நடிகரைக் கொன்றுதான் இங்கே ஸ்டார் உருவாக்கப்படுகிறார். இதைப்பற்றிய என் விரிவான கட்டுரை இந்தியா டுடே ரஜினி சிறப்பிதழில் வெளியாகியிருக்கிறது.//

ஒவ்வொரு நடிகனுக்கு ஆரம்பகாலப் படங்கள் பள்ளி படிப்பை போல. அதற்கப்புறம்தான் ஃப்ரொபஷ்னலா இல்ல ஆர்ட்ஸாங்கிறது. ஒரு சிலக் குழந்தைகள் 15 வயதில் IIT யில் படிக்கலாம், ஒருவேளை அவங்க நெஜமாலும் ஞானிகளோ?

//அந்தக் கட்டுரையை ரஜினியும் பாராட்டியிருக்கிறார்.//

எப்பயும் உண்மையான ஞானிங்க, தன்னைக் தவறாக குறை சொல்வர்களையும் மதிப்பார்கள். அப்ப ரஜினி உண்மையான ஞானியோ?

//மார்க்கெட்டிங் இல்லாமல் உலகம் சுற்றும் வாலிபன் பெரும் வெற்றியடைந்தது.( போஸ்டர் கூட கிடையாது. அப்போது டி.வியும் இல்லை.)//

அப்போ சென்னையில ஒரு 10 தியேட்டர். CD இல்ல, DVD இல்ல. ஒருத்தனுக்கு புள்ளப் பொறந்தா ஊருக்கே தெரியும். சினிமான்னா சொல்லவா வேணும். அதுவும் எம்.ஜி.ஆர் அன்றைய ரஜினி.(இதெப்படி இருக்கு) இதெல்லாம் தெரிய பெரிய ஞானியா இருக்கனுமா என்ன?


//எந்திரன் சன் குரூப்பின் மார்க்கெட்டிங் இல்லாவிட்டால் சாதாரண படமாகவே ஓடியிருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.//

ஆமா, சொல்லிகிட்டாங்க. குசேலன யாருக்கும் தெரியாம நைட்டோட நைட்டா ரிலீஸ் பண்ணிட்டாங்க. அதனாலதான் ஃபெயிலியர். இல்லன்னா பிண்ணி பெடலெடுத்த்ருக்கும். சை ஞானியை ஒரு வார்த்தை கேக்காமப் போயிடாங்களே. பாலசந்தர் ஞானி இல்லையோ?


//உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக எதையும் அணுகுவதே நமக்கு நல்லது. அப்புறம் உங்கள் விருப்பம். என்னைத்திட்டுவதால் உண்மைகள் மாறிவிடாது.//

ரஜினி விசயத்துக்கு மட்டுமா, இல்லை ஈழப்பிரச்சினைக்கும் சேர்த்தா? இதுக்கெல்லாம் ஞானம் கடையில் கிடைக்குமா?

//ஒரு கூடுதல் தகவல்: ரசிகர் மன்றங்கள் எல்லாமே எம்.ஜிஆர் காலத்திலிருந்தே, நடிகரும் தயாரிப்பாளரும் கொடுக்கும் பணத்தில்தான் இயங்குகின்றன என்பது மீடியாவில் உள்ளவர்கள் எல்லாரும் அறிந்த உண்மை. மன முதிர்ச்சி எற்படாத பருவத்தில் ஒரு சிலர் மட்டுமே சொந்தச் செலவில் சூன்யம் வைத்துக் கொள்வார்கள். நடிகர்கள் பலரும் வருமானவரிக்கு தரும் கணக்கில் ரசிகர் மன்ரத்துக்கு கொடுத்த பணத்தை பிரமோஷன் செலவுக் கணக்கில் காட்டுகிறார்கள். பழவேற்காடு பகுதியில் ஒரு நடிகர் படப்பிடிப்புக்குச் சென்ரபோது அவரை அசத்த விரும்பிய தயாரிப்பாளர் அந்தப் படத்தின் ஆர்ட் டைரக்டரை வைத்தே ரசிகர் மன்ற போர்டுகளை முன்னிரவே வழி நெடுக அமைத்து கூட்டத்தைத் திரட்டிய கதை எல்லாம் பத்திரிகைகளில் வெளிவராது. ஆனால் சினிமா , மீடியா துரையில் இருப்பவர்களுக்கு இதெல்லாம் நன்றாகத் தெரிந்தவை.//

அப்படியென்றால் எம்.ஜி. ஆரை தூக்கிவைத்துப் பேசக் காரணம் என்ன? அன்று எம்.ஜி.ஆர் தங்களுக்கு கொடுத்த பணம் இன்னும் பேலன்ஸ் இருக்கிறதா? அப்போ இன்னும் கொஞ்ச நாட்களில் அண்ணன் ரித்தீஸ் சூப்பர் ஸ்டார். சில விஷயங்கள் புரிய ஞானியாக இருக்க வேண்டுமோ?


//இந்தியாவின் குறிப்பாக தமிழ் வர்த்தக சினிமாவில் ஸ்டார் என்பவன் வேறு. நடிகன் என்பவன் வேறு. இரண்டுமாக ஒருவரே இருக்க முயற்சிப்பது மிகக் கடினம் என்பதுதான் சினிமா உலகத்தின் வியாபார விதி.//

எங்களைப் பொருத்து, பிடித்த மாதிரி படங்கள் கொடுத்தால் படம் ஓடும். அவர் நடிக்கும் படங்கள் தொடர்ந்து ஓடினால் அதிக படம் கிடைக்கும். அதிகப் படம் ஓடினாலே தானாகவே ரசிகர் வட்டம் கூடும். ரசிகர் கூட்டம் கூடக்கூட ஸ்டார் வேல்யூ கூடும், சம்பளம் கூடும். ராமராஜனையே தூ.......க்கி வெச்சு தொபக்கடீர்னு போட்டவங்க நாங்க.இது ஞானிகளுக்கு மட்டும் தெரியாதோ?

//இந்த விதியின்படி தனக்குள் இருந்த நடிகனைக் கொன்று ஸ்டாரானதுதான் சிவாஜிராவ் என்கிற ரஜினிகாந்த்தின் 32 வருட சினிமா வாழ்க்கைக் கதையின் ஒன் லைன்.//

நல்ல கதை. தயாரிப்பாளர்கள் கிடைப்பார்களா பார்ப்போம். ஒரு பெரிய புத்தகத்தைப் படிக்கக் கொடுத்தால், ஞானிகள் மட்டும் முதல் பக்கமும் இறுதிப் பக்கமும் மட்டும் படிப்பார்களோ?

//பள்ளிப் படிப்பைத் தாண்டாமல், ஒரு சாதாரண பஸ் கண்டக்டராக வாழ்க்கையைத் தொடங்கியவர் இன்று இந்தியாவிலேயே அதிகமான சம்பளம் வாங்கும் நடிகராக ஆனது முதல் பார்வையில் பிரமிப்பூட்டுவதாக இருக்கலாம். ஆனால் ஆழ்ந்து யோசித்தால், வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், எல்லா சினிமா ஸ்டார்களும் அப்படிப்பட்டவர்கள்தான். ரஜினியை விட ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்தவர்கள் எம்.ஜி.ஆரும் சிவாஜியும். உலக அளவில் சார்லி சாப்ளின் முதல் இந்தியாவின் பிருத்விராஜ் கபூர், எம்.ஆர்.ராதா, கமல்ஹாசன் வரை ஸ்கூல் டிராப் அவுட்டுகள்தான்.கலை உலகத்தின் வலிமையே அது முறையான கல்வியை விட அனுபவத்தில் உருவான செழுமைப்படுத்தப்பட்ட திறமைக்கே அதிக முக்கியத்துவமும் வாய்ப்பும் தருவதுதான். முறையான படிப்பாளிகள் இன்றைய வணிக சினிமா இயந்திரத்தின் வீல் பெல்ட், நட்டு, போல்ட்டுகளாக மட்டுமே இருக்க முடியும். மெஷின் ஆபரேட்டர் ஆகிறவர்கள் குறைவு//

நல்ல கண்டுபிடிப்பு. அடுத்து முதலைமைச்சர் பதிவியையும் விட்டுவிட்டார். படிக்காதவர்கள் மாவட்ட கலெக்டர் ஆகமுடியாது என்பது தெரிந்ததால் முயற்சி செய்யவில்லை. படிக்காதவனுக்கு எல்லாமே ஆப்சன்.தோல்வி பொருட்டல்ல. முயற்சி செய்யலாம். வெற்றி பெறாத படிகாதவர்கள் எத்தனை எத்தனை பேர்கள் கோடம்பாக்காத்தில்.ஆனால் நல்லாப் படிச்சவனுக்கு அது ஒன்னுதான் ஆப்சன். அதனால்தான் ஒரே நேர்கோடு. இது பெரிய சப்ஜெக்ட். வாய்ப்புக் கிடைத்தால் தனிப்பதிவாக ஞானிக்கு டெடிகேட் பண்ணலாமோ?


//ரஜினி 1975ல் நடிக்க வந்த போது சென்னையில் ஒரு பிலிம் இன்ஸ்ட்டியூட்டில் படித்தார். ஆனால் அது அடையாறில் இருக்கும் அரசின் திரைப்படக் கல்லூரி போல பாரம்பரியமும், கல்வி முறைமையும் கொண்டதல்ல. திரைப்பட வர்த்தக சபையின் ஆதரவில் நடத்தப்பட்டு சில வருடங்களிலேயே மூடப்பட்டுவிட்டது. ரஜினி நடிக்கக் கற்றுக் கொண்டதில் அதன் பங்கு கணிசமானது என்று நிச்சயம் சொல்ல முடியாது. அவர் பெங்களூரின் பஸ்களிலும் சினிமா கொட்டகைகளிலும் படித்ததுதான் கூடுதலாக இருக்க முடியும்.//

உண்மையிலேயே ஞானிதான்.


//முதல் சில வருடங்களில் ரஜினி வில்லன் பாத்திரங்களில் நடித்தபோதும், குணச்சித்திர பாத்திரங்களில் ( ஹீரோவும் அல்ல வில்லனும் அல்ல ) நடித்தபோதும்தான் அவருடைய நடிப்பு ஆற்றல் வெளிப்பட்டது.//

கேரக்டருக்கு என்ன தேவையோ அது செய்யப்பட்டது. கார் ட்ரைவரை ஃபைலட்டாக காட்ட முடியாது. ஞானிகளுக்கு இதெல்லாம் டூ மச்.

//ஆனால் தமிழ் வணிக சினிமாவின் வியாபாரிகள் நடிகர்களை வளர்ப்பதை விட, அவர்களை ஸ்டார்களாக உருமாற்றுவதிலேயே முனைப்பாக இருப்பவர்கள். நடிகராக பலவகைப் பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த கமல்ஹாசனை ஸ்டாராக்குவதற்கு ஒரு சகலகலா வல்லவன். ரஜினிக்கு ஒரு முரட்டுக்காளை. சேது, காசி போன்ற படங்களில் நடித்த விக்ரமுக்கு ஒரு ஜெமினி.//

கலியும் கூலும் உடம்புக்கு நல்லதுதான். அதற்காக ஹோட்டல் நடத்துபவர் அதையே முழு மெனுவாக வைத்தால் கூலி வேலை செய்யும் நபர்கூட அந்த ஹோட்டலுக்கு செல்லமாட்டார். தோசையும், பரோட்டாவும், பிரியாணியும் வந்தால்தான் ஆகும். ஒருவரை ஸ்டாராக மாற்ற அவர்களுக்கென்ன வேண்டுதலா? எந்த குதிரையில் பணம் கட்டினால் ஜெயிப்போம் என்று தெரிந்த வியாபாரிகள் அவர்கள். சொந்த பணத்தில் ஸ்டாராக நினைத்து வந்து போன ப்ரேமையும் தெரியும். இன்றும் அப்போ அப்போ சீன் காட்டும் சிலரையும் தெரியும். எந்தெந்த நடிகரில் எதைஎதை எதிர்பார்ப்பது என்பது ரசிகனுக்கு மட்டும்தான் தெரியுமா? ஞானிகளுக்கு தெரியாதா?

//தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியமைக்கும் வல்லமை இருந்த நடிகர்களாக எழுபதுகளின் இறுதியில், எண்பதுகளின் தொடக்கத்தில் அடையாளம் காணப்பட்டவர்கள் ரஜினியும் கமலும். அதே போல அடுத்த தலைமுறையில் விக்ரமும் சூர்யாவும். ஆனால் எல்லாரையும் ஸ்டார்களாக்கும் சினிமா ஃபேக்டரி இவர்களையும் ஸ்டார்களாக்கி தமிழ் சினிமாவின் தடத்தை மாற விடாமல் தடுத்துக்கொண்டே தான் இருக்கிறது.//

பாவமாக இருக்கிறது. நல்ல படங்கள் ரசிகனால் கவனிக்கப்படாமல் போனது ஏராளம். அதனால் மக்களுக்கு அதாவது ரசிகனுக்கு எது தேவையோ அதைக் கொடுக்கிறார்கள். இருப்பதைக் கொடுக்கிறார்கள். பிடிப்பதைப் பார்க்கிறார்கள். காரணம் சிம்பிள். தன்னால் எது முடியாதோ அதை தந்து ஆதர்சக் கதாநாயகன் செய்ய வேண்டுமென்கிறான். காற்றில் பறந்து பறந்து அராஜகத்து ஒழிக்க சொல்கிறான். காதாலில் உருக சொல்கிறான். செய்தால் பார்க்கிறான். அழுது வடிந்தால்." ச்சை இதத்தான் எழவு வீட்ல பாக்குறோம், சினிமாவும்லயா" என்று கேட்கிறான். ஹோட்டலில் கூலுக் கதைதான் இங்கும். எனக்கு ஞானம் பத்தலயோ?

//முள்ளும் மலரும், மூன்று முடிச்சு, பதினாறு வயதினிலே, புவனா ஒரு கேள்விக்குறி, அவர்கள் போன்ற படங்கள் எல்லாம் ரஜினியைத் திறமையான நடிகராக ஆரம்ப ஆண்டுகளிலேயே அடையாளம் காட்டியவை. ஆனால் அவை அவரை ஸ்டாராக்கவில்லை. முரட்டுக் காளைக்குப் பிறகுதான் அவர் ஸ்டார் நிலையை நோக்கிப் பயணம் செய்தார்.//

ஸ்டார் என்பது உச்ச நிலை. அடிப்படிக்கட்டுகளில் தேடப்படாது. தேடினால் ஞான சூனயமென்று சொல்வார்களோ?

//ஸ்டாரானபிறகு படங்களுக்கிடையே பெரும் வித்யாசம் இல்லை. காரணம் ஸ்டாருக்கென்றே இருக்கும் கதைப்பின்னல் ஃபார்முலாதான். சிவாஜி வரை அதே ஸ்டார் ஃபார்முலாதான் தொடர்கிறது.//

வியாபாரம் நல்லாப் போச்சா. அதான் முக்கியம். கலை வளர்க்க யாராவது இருந்தாக் ஞானிகளை அனுகவும்.

//தமிழ் சினிமாவின் அத்தனை கோளாறுகளாலும் லாபம் நஷ்டம் இரண்டையும் அடைந்தவர் ரஜினி என்று சொல்லலாம். மசாலா பட ஸ்டார் என்பதால் வாழ்க்கையில் யாரும் எளிதில் அடையமுடியாத பொருளாதார உச்சத்தை அவ்ர் அடைந்தார். அதே சமயம் ஆரம்ப ஆண்டுகளில் அவரை வைத்து வசூலைக் குவிக்க துடித்த தயாரிப்பாளர்களின் நிர்ப்பந்தத்தால், ஒரு காலத்தில் நாகேஷுக்கு ஏற்பட்ட அதே சிக்கல் ரஜினிக்கும் ஏற்பட்டது.//

எல்லாரும் மனுசப் பயலுகதானே. இன்னும் நம்ம நாட்டு மக்கள் பணம் பணமுன்னு சொல்லி ஓவர் டைம்ல ஒழச்சு ஓடாத் தேயுறான். இன்னும் ஞானம் பெறக்கலயோ என்னவோ?

//தூங்கவும் சிந்திக்கவும் நேரம் இல்லாமல் மூன்று ஷிப்டுகள் வேலை செய்த நாகேஷ் ஒரே ஆறுதலாக மதுவில் மூழ்கி சாவின் விளிம்பைத் தொட்டுத் திரும்பினார். மருத்துவமனையில் இருந்த அவர் இன்று இரவைக் கடப்பது கஷ்டம் என்று தினசரி மாலைப் பத்திரிகைகள் சுமார் முப்பதாண்டுகள் முன்பு அவரது மரணத்துக்கு நேரம் குறித்துக் கொண்டிருந்தன. அதே போல வேலை பளுவில் நசுக்கப்பட்ட ரஜினி கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி, பத்திரிகையாளர்களை அடிப்பது முதல் மிதமிஞ்சிக் குடிப்பது வரை பல சிக்கல்களுக்கு தன்னைத் தானே உள்ளாக்கிக் கொண்டார்.//

இது எல்லாத் தொழிலிலும் சகஜம்தான். கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். இதெற்கெல்லாம் பெரியளவுக்கு ஞானம் தேவையில்லைதானே?

//அதிலிருந்து மீண்டு வந்தபின், நடிகனாக, கலைஞனாக தனக்கென்று ஏதேனும் ஆசைகள் இருந்தால், அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு, பூரணமாக மசாலா சினிமாவுக்கு தன்னை சரணாகதி செய்துகொண்டார்.//

ஒரு தொழிலேயே பல நிலைகள் இருக்கும். சிலர் அழுது வடிய. சிலர் சிரிக்கச் செய்ய. சிலர் சண்டைக்கா. இது ரஜினிக்காக.அதை ரசிப்பவர்களுக்காக. கண்டிப்பாக ஞானிகளுக்காக அல்ல.

//இந்த ஃபார்முலாவுக்குள் அவர் வித்யாசமாக செய்து பார்த்து வெற்றியடையும் அம்சம் என்பது ஒன்றே ஒன்றுதான். அதுதான் காமெடி. பாலச்சந்தரின் தில்லுமுல்லுவில் முழுமையாக அதை சாதித்துக் காட்டிய ரஜினிதான்,இன்றும் தமிழ் சினிமாவில் காமெடி கலந்த ஒரே சூப்பர்மேன் ஹீரோ.//

செய்து பார்க்கவில்லை. பாலச்சந்தர் எடுத்தார். இவர் நடித்தார்.ரசித்தார்கள். ஓடியது. தொடர்ந்தது. ஒன்றும் அல்ஜீப்ரா ஃபார்முலா இல்லை. மதி முத்தினால் ஞானியோ?

//ரஜினியின் அண்மை ஆண்டுகளில் சினிமாவுக்கு வெளியே அவர் செய்த காமெடியாக அவரது அரசியலைக் குறிப்பிடலாம்.//

வெறுமனே சம்பளத்துக்கு, கவனிக்க பொதுநலம் என்று ஏமாந்தால் கம்பெனி பொருப்பல்ல, எழுதுபவர்களே அரசியலில் அங்காலாய்க்கும்போது 35 வருட சினிமா வாழ்க்கை, பட்டிதொட்டியெல்லாம் தெரிந்தவர் சொன்னால் தப்பா? அது அவர் கருத்து. ஞானிகள் விளக்கி தெரிந்துகொள்ளும் நிலமியிலா இருக்கிறோம்?

// 1996ல் மக்கள் ஏற்கனவே ஜெயலலிதா எதிர்ப்பில் இருந்த மன நிலையில் அதை ரஜினி எதிரொலித்ததுதான் இன்று வரை அவருடைய மிகப் பெரிய அரசியல் சாதனையாக தவறாக சொல்லப்பட்டுவருகிறது.மக்கள் ஜெயலலிதாவுக்கு எதிர் மன நிலையில் இருக்கையில், ரஜினி ‘பரவாயில்லை ஒரு முறை அவரை மன்னிப்போம். மீன்டும் வாய்ப்பு தருவோம் ’ என்று சொல்லி அதைக் கேட்டு மக்கள் ஜெவை ஆதரித்திருந்தால்தான், ரஜினியின் வாய்சுக்கு நிஜமாகவே செல்வாக்கு இருப்பதாகக் கருத முடியும்.அரசியலில் ரஜினியின் வாய்சுக்கு எந்த அர்த்தமும் இல்லை என்பது அடுத்த சில வருடங்களில் வெளிப்படையாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. ரஜினியை வைத்து காங்கிரசை வளர்த்துக் கொண்டு ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற கனவில் மூப்பனாரும் சிதம்பரமும் ஒரு பக்கமும், பி.ஜே.பி தமிழகத்தில் வளர ரஜினி பயன்படுவார் என்ற கணக்கில் சோ மறுபுறமுமாக செயல்பட்டார்களே தவிர, ரஜினியிடம் எந்த அரசியல் பார்வையும் தெளிவாக இல்லை//

அது, சிலர் ஞானிகளாக நினைத்துக்கொண்டு பத்திரிக்கைகளில் எழுதுபவர்களின் கணிப்பு. இன்னும் சில சம்பளக்கூலி எழுத்தாளர்கள் ரஜினி ரசிகனென்று மல்லாக்கப் படுத்துக்கொண்டு காரித்துப்பிவிட்டு, அடுத்தவாரமே "எந்திரா........" என்று வியாபாரம் செய்த வியாபரிகளின் எழுத்து. ரஜினி சொன்னாரா? நான் சொன்னேன், நீ ஜெயிச்சேன்னு. மூப்பனாரேக் கூப்பிட்டும் கையெடுத்துக் கும்பிட்டவர் ரஜினி.அது கிடக்கட்டும். உங்கள் தெளிவான அரசியல் பார்வை என்ன? ஞானியென்றால் விளக்க வேண்டும்தானே?


//ரஜினி அரசியலை தன் சினிமாவை ஓடவைக்கப் பயன்படுத்தினார் என்று வேண்டுமானால் சொல்லலாம். தி.மு.க, அ.தி.மு,க ஆகியவற்றின் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்திகள், எப்போதுமே எங்கேயோ இருந்து ஒரு அவதார புருஷன் வந்து நம்மை உய்விப்பான் என்ற மயக்க நிலை ஆகியவற்றை தன் சினிமாவுக்கு ரஜினி பயன்படுத்திக் கொண்டார்.//

இந்த இடைப்பட்டக் காலங்களில் தான் தோல்விப் படங்களையும் ரஜினி தந்தார் என்பதை ஞானிகளுக்கு மறப்பது எப்படி?

//ரஜினியின் அண்மைக்கால சினிமா வெற்றிகளில் அவ்ருக்கு பயன்பட்ட இன்னொரு அம்சம் & பலமான பெண் பாத்திரங்கள். விஜயசாந்தி, மீனா, ரம்யா கிருஷ்ணன், ஜோதிகா ஆகிய திறமையான நடிகைகள் ஏற்ற பாத்திரங்களின் உதவியால் அந்தப் படங்களில் ரஜினியும் ஜொலிக்க முடிந்தது. அப்படிப்பட்ட பாத்திரங்கள் இல்லாத அவருடைய படங்கள் & பாபா போன்றவை & அடி வாங்கியிருக்கின்றன.//

இதைப்படிச்சுட்டு வாயாலதான் சிரிக்கனும். என்ன ஒரு அவதானிப்பய்யா? ஞானியா இல்லை ஞான...? சரி விடுவோம். சவுந்தர்யா, நக்மா நடிச்சப் படத்தோட சிடிய எல்லா ஞானிகளுக்கு அனுப்பலாமா?

//ரஜினியின் அரசியலைப் போலவே குழப்பமானது அவருடைய ஆன்மிகம். ஹரே கிருஷ்ணா இயக்கம், பாபா, ராகவேந்திரர் என்று வெவ்வேறு வகையான பக்தி மார்க்கங்களை முன்வைத்து வரும் ரஜினி நடைமுறையில் பின்பற்றுவது ரஜினீஷின் சில கோட்பாடுகளைத்தான். ஆனால் ரஜினீஷைப் போல உல்லாச வாழ்க்கையிலேயே உன்னதத்தைக் காணலாம் என்ற கோட்பாடும் அவருக்கு இல்லை. ஒரு பக்கம் வாழ்க்கையின் உல்லாசங்களை கைவிடாதிருப்பது, மறுபக்கம் இவற்றை நிராகரிக்கும் ஆன்மிகவாதிகளைப் போற்றுவது என்ற முரண்பாடு நிறைந்தது ரஜினியின் ஆன்மிகம். அரசியலில் மதவெறியை ஊக்குவிக்கும் அத்வானி, தயானந்த சரஸ்வதி போன்றோர்தான் ரஜினியின் ஆதர்சங்கள் என்பது இத்துடன் சேர்த்து கவனிக்க வேண்டியதாகும்.//

ரொம்ப ஞானம் வந்தாலே இந்த கதிதான். இந்தப் பத்திரிக்கைக் காரங்க இருக்காங்களே இவங்க இப்படிதான் எஜமான், இந்தா நேத்து ஒரு தமிழன் அதுவும் மதுரைக்காரர் உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழனை ஆக்க ஓட்டுப்போடுங்கன்னு சொல்லி எழுதமாட்டாங்க இந்த நடிகையை இந்த நடிகர் வெச்சிக்கிட்டார் என்பதை மட்டும் முழுப்பக்கத்தில் போடுவாங்க. அப்படிப்பட்ட ஒரு ஃபீல்டுல இருந்து அங்க ஒரு துரும்பையும் கிள்ளிப்போடாம இங்க வந்துட்டார். தலைக்கு வெளியே வெளிச்சம் வந்தா ஞானமா?

//ரஜினியின் குடும்ப வாழ்க்கை எல்லா சராசரி மனிதர்களின் வாழ்க்கையைப் போன்றதாகவே தோன்றுகிறது. விரும்பிய பெண்களை மணம் செய்ய முடியாமல் போகும்போது கிட்டிய பெண்ணை ஏற்றுக் கொண்டு சமாதான சகவாழ்வு வாழும் சராசரி மன நிலையே அது. ‘வாழு. வாழவிடு. தலையிடாதே. தலையிட மாட்டேன்’ என்பதுதான் ரஜினியின் வாழ்க்கைத்தத்துவம் போல் தோன்றுகிறது.//


மத்தவங்களுக்கு எப்படியோ, எனக்கு ரஜினிகிட்ட பிடிச்ச விசயம் இது. நாலு பேப்பர்ல எழுதினதுனாலயே பொண்டாட்டிய தொறத்திவிட்ற இந்த காலத்து இந்த மனுசன் எப்படி இப்படி இருக்கார்ன்னு என் ஞானத்துக்கு எட்டவே இல்லை?

//அதே சமயம் ரஜினியின் படத்தில் வரும் பெண் பாத்திரங்கள் பெண்களை பழைய நிலையிலேயே வைத்திருப்பதை ஊக்குவிக்கும் பாத்திரங்கள்தான். இதுதான் மசாலா சினிமாவின் பொதுத்தன்மை என்றாலும், அத்துடன் இயைந்துபோவதில் ரஜினிக்கு சிரமம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.//

அதெல்லாம் ரஜினி வேலை செஞ்சப் படமுங்கோ. ரஜினி வேலைவாங்குனப் படம் வள்ளி. தமாசு. ஞானமின்னு சொன்னா மட்டும் ஞானமில்லைங்கோ?

//பணம், புகழ், அதிகாரம், கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் என்று ஒரு சராசரி மனதில் அதிகபட்ச உச்சமான ஆசைகளை எல்லாம் அடைந்துவிட்ட ரஜினி இனி என்ன செய்யப் போகிறார் ? என்ன செய்ய முடியும் ? என்ன செய்ய வேண்டும் ?//

கண்டிப்பா ஞானிகளிட்ட கேட்றாதீங்க தலைவா. கவுத்துருவாங்க. தலையிருந்தா மட்டும் ஞானமில்ல?

//அவரை இந்த நிலைக்குக் கொண்டு சென்ற தமிழ் சினிமாவுக்கு அவர் பதிலுக்கு ஏதாவது செய்யலாம்.//

இதுவரை வந்த பல நடிகர்களை அழித்துவிட்டு,தமிழ் சினிமா ஒரு எம்.ஜி.ஆர், ஒரு சிவாஜி, ஒரு கமல், ஒரு ரஜினியை மட்டும் தந்தது. அடப்போங்கப்பா. பத்திரிக்கை நடத்துறவங்க எல்லோரும் பத்திருக்கையிலயேப் பணத்தப் போட்டுட்டாங்க. சொல்றாரு டீட்டெய்லு. ஞானம் வெளஞ்ச பூமின்னாங்களே?

//ஹிந்தியில் ரஜினியின் வயதை ஒத்தவரான அமிதாப் பச்சன் வயதுக்கேற்ற பாத்திரங்களை ஏற்று நடித்து மேலும் புகழ் சம்பாதித்து வருவது போல, ரஜினியும் தன் ஸ்டார் முகமூடியை தூக்கி எறிந்துவிட்டு, உள்ளுக்குள் உறங்கும் (?) கலைஞனுக்கு இன்னொரு உயிர் கொடுக்கலாம்.//

ரஜினி என்றாவதும் ஞானியை "கண்ணா உனக்கும் எழுத்துக்கு ரொம்ப தூரம் இனிமேல் எழுதாதே" என்று சொன்னால் ஒரு வேளை யோசிக்கலாம்.

//புதிய கருத்துக்கள், புதிய சிந்தனையுடன் வரும் பல இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் விதத்தில் ரஜினி வருடத்துக்கு நான்கு லோ பட்ஜெட் படங்களைத் தயாரிப்பாளரக இருந்து தயாரிக்கலாம்.//

இவரும் இவரைப்போல சில ஞானிகளும் சேர்ந்து சில பதிவர்களை அட நம்மளத்தாம்பா பத்திரிக்கை ஆரம்பிக்க உதவினால் பார்ப்போம்.

//எல்லாவற்றுக்கும் மேலாக ‘ நான் நிச்சயம் அரசியலுக்கு வரப் போவதில்லை’ என்று அறிவித்துவிடலாம்.//

ஞானிகள் உண்மையை மட்டும் பேசும்போது முடிவெடுக்கலாம்.

// இவை எல்லாமே அவரால் செய்ய முடிந்தவைதான். செய்வாரா ? செய்தால் நான் ரஜினியைப் பாராட்ட மூன்றாவது விஷயம் எனக்குக் கிடைக்கும். ஓ....முதல் இரண்டு விஷயங்களை இன்னும் சொல்லவில்லையோ ?//

நான் சொன்னவைகளை ஞானி செய்தால் எனக்கும் பாராட்ட மூன்றாவது விசயம் கிடைக்கும். ஓ முதல் இரண்டு விசய்ங்களா..?

//தன் படங்களில் ஜாதிப் பெருமையை முன்வைத்து மக்களிடையே வெறி ஏற்றும் பாத்திரங்களில் அவர் நடிக்காதது முதல் விஷயம்.//

ஞானி,சொல்வது பொய்யே ஆனாலும் கடைசிவரை தாக்குப்பிடிப்பது.

// படத்தில் காட்டும் இளமை இமேஜைப் பற்றிக் கவலைப்படாமல், நேரில் வரும் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் அசல் வழுக்கை மண்டை நரை முடி தோற்றத்துடன் அவர் வருவதுதான் எனக்கு அவரிடம் மிகவும் பிடித்த இரண்டாவது விஷயம்.//

ஞானமே இல்லாமல் ஞானியென்று அழைத்துக்கொள்வது.

//(இந்தியா டுடே 14.7.2007 ரஜினி சிறப்பு மலர்)//

இந்தியா டுடே 14.7.2007 ஞானி சிறப்பு மலரும் இல்லை, ரஜினி எழுதவுமில்லை. இந்தியா டுடே என்ன கேணையா?

//ஞாநி உண்மையாக எழுதியிருக்கிறார் என்று அடுத்த இந்தியா டுடே இதழில் ரஜினியின் கருத்து வெளியிடப்பட்டது.//

எப்படி அடிச்சாலும் தாங்குறதுக்கு ஞானம் வேணும்,ஞானம் வேணும், ஞானம் வேணுண்டோய்....

டிஸ்கி: இன்னும் சிறிது நேரத்தில் அனைத்து ஆதாரத்துடன் போட்டோக்கள் இணைக்கப்படும்.

Thursday, October 21, 2010

சினிமாவைப் பற்றி யார் பேசலாம்?

யாரும் பேசலாம். காசா பணமா? ஆனால் என்ன பேச வேண்டும் எப்படி பேச வேண்டும் என்ற வரைமுறை இருக்கிறது. சினிமா ஒரு வியாபாரம். ஆமாம் கண்டிப்பா ஒரு வியாபாரம். சைடிஸ்ஸாக பெரும் புகழ்.

சுப்ரமணிய புரம் வரும் வரை சசியை எனக்குத் தெரியாது. இதோ இப்ப எனக்கு மட்டுமா எங்க ஊர்காரன் பாதிபேர்க்கு தெரியும். அதுக்கு அவர் பட்டக் கஷ்டம் என்ன? எத எத வித்து பணம் தேத்துனாரோ? எதுக்கு கலை வளர்க்கவா? பணம் சம்பாதிக்க. பிசினஸுங்க பிஸினஸ். ஒரு வேள ஓடாமப் போயிருந்தா, ஒன்னும் சொல்றதுக்கில்ல. ஆளேக் காணாமப் போயிருக்கலாம். யாரு கண்டா.

சரி இதுல நம்மப் பங்கு என்ன? ஒன்னும் பெருசா கிடையாது. படம் நல்லா இருந்தா கடைசிவரைக்கும் பாக்கப்போறோம். இல்லாட்டி பாதியில வரப்போறோம். நல்லா இருந்தா நாலுபேர்கிட்ட சொல்லப் போறோம். அதுக்காக தெருவுல போறவனை இழுத்து தியேட்டர்க்குள்ள விட்றதில்ல. சசியை நேர்ல பாத்து , சார் நீங்க இன்னும் நிரையப்படம் பண்ணனும், இந்தாங்க என் வாட்ச்சு மோதிரமுன்னு கழட்டி கொடுக்கப்போறதில்ல.

ஆனா ஒரு வேள நல்லா இல்லாட்டி நாம என்னப் பண்ணனும். ஒன்னும் சொல்லத்தேவையில்ல. பாத்து ராசா அடுத்தவாட்டி கேர்ஃபுல்லா பண்ணுப்பா. ஒன்ன நம்பித்தேன் ஒங்குடும்பம் இருக்குன்னு வேணா சொல்லலாம். ஏன்னா இது அவர் ரிஸ்க்கு. தெரிஞ்சும் தெரியாமையும் பல குடும்பங்கள் இன்வால்வ் ஆகுற பிஸ்னஸ். எல்லாரும் வெற்றி பெறனுன்னுதான் படம் எடுக்குறாங்க. யாரும் அடுத்து தெருவுல நின்னு பிச்சை எடுக்கனுமுன்னு நெனச்சு சினிமாவுக்கு வர்றதில்ல. எப்படி 50 பேர் படிக்கிற வகுப்புல பத்து பேர் பெயிலாகுறாங்களோ அப்படிதான் ஒரு தொழிலுன்னு எடுத்துகிட்டா முன்னப்பின்னதான் இருக்கும். சினிமா மட்டும் இல்ல, கண்ண முழிச்சுப்பாருங்க அத்தனை தொழிலும் இதே ஏத்தம் எறக்கந்தான்.

கள்ளச்சாராயம் காச்சுறவன் விக்கிறவன் ரேஞ்சுக்கு சினிமாக்காரனக் கீழ எறக்கி அட்வைஸ் பண்ணனுமுன்னு அவசியமில்ல. அதில கலையை அழிக்கிறானுங்களேங்ற ஆதங்கம் டூ மச்.

இதுல சிலபேர் என்ன செய்யுறாங்க, தாஜ் ஹோட்டல் பார்ல ஒக்காந்து பத்தாயிரத்தக் காலி பண்ணிட்டு, எதாவது ஒரு படத்த போதைக்கு பாத்துட்டு விமர்சனம் எழுதுறது எப்படி இருக்குத் தெரியுமா?

அதே விமர்சகன், பணப்பத்தாக் கொறயில தாஜுக்கு பக்கத்துல இருக்குற கையேந்தி பவனுக்குப் போயிட்டு,அந்தக் கடைக்க்காரன்கிட்ட சொன்னானாம் " என்னய்யா கடை நடத்துற, ஒரு சேரில்ல, ஏசியில்ல, செர்வண்ட் இல்ல, ம்யூசிக் இல்ல, லொட்டில்ல லொசுக்கில்ல" ன்னு சொன்னானாம், வேற என்ன நடந்திருக்கும்? அந்த ரோடு முடியறவரைக்கும் தொறத்தி தொறத்தி அடிச்சிருப்பான். ஏன்னா அந்தக் கடைதான் அவன் குடும்பத்த மட்டுமில்ல, பாவம் ஒரு வேள மட்டும் சாப்பிடும் பல குடும்பங்களையும் காப்பாத்துறக் கதை அவனுகெங்க தெரியப்போகுது.

மறுபடியும் சொல்றேன், சினிமா ஒரு வியாபாரம். அதுல பாட்டு இருக்கும். ஃபைட்டு இருக்கும். நகைச்சுவை இருக்கும். நல்லா இருந்தா ஓடும். இல்லாட்டி என்னதான் கூவுனாலும் ஓடாது. பாபாவும், குசேலனும் தெரியும். பாட்சாவும் எந்திரனும் தெரியும்.

அதாகப்பட்டது நடக்கவே முடியாதவன் ஒலிம்பிக்கில ஓடறவனுக்கு கமெண்ட் பண்ணக்கூடாது. கமெண்டினாலும் பரவாயில்லை, அட்வைஸ் பண்ணக்கூடாது. அப்படியே அட்வைஸினாலும் பரவாயில்லை நாந்தேன் கோச்சுன்னு சொல்லப்பிடாது.

Tuesday, October 19, 2010

ஞானியும் அவர் அடித்துவிடும் பொய்யும்

ஞாயிற்றுக்கிழமை NDTV-HINDU வில் எந்திரன் பற்றி ஒரு நிகழ்ச்சி. ரஜினிக்கு ஸ்டார் வேல்யூவுக்கு ஆதரவாக சின்மயி என்றப்பாடகியும், ஸ்ரீதர் என்ற பத்திரிக்கையாளரும் கருத்து சொல்ல, ரஜினியெல்லாம் ஒன்னுமில்ல மார்க்கெட்டிங் வேல்யூதான் மேட்டர் என்று சாநி புகழ் ஞானியும், சுதாங்கன் என்ற அதிமுக அபிமானி பத்திரிக்கையாளரும் பேசினர்.

ஞானியும், சுதாங்கனும் 1947 லிலிருந்து இன்னும் வெளியே வரவில்லை என்பது அவர்களின் மொன்னையான ஆர்க்யூமெண்டிலிருந்தே தெரிந்தது.

சின்மயி, ரியலி சூப்பர்ப். பாடுவதைப் போலவே பின்னிப் பெடலெடுக்கிறார். ரஜினியின் ரசிகை என்பதைக் கூறும்போது பெருமிதம்கொள்கிறார். ஸ்ரீதர், அதற்குள் மூன்றுமுறை எந்திரனை வெவ்வேறு தியேட்டரில் வெவ்வேறு தட்டு மக்களுடன் சேர்ந்து ரசித்தாராம்.

ஞானி, முத்து படம் ஓடியதற்கு முக்கியக்காரணம் மீனா என்றும், படையப்பா ஓடியதற்கு ரம்யாகிருஷ்ணன் தான் என்றும் கூறி சிரிக்கவைத்தார். அவர்கள் மட்டுமில்லையென்றால் அவ்விருப்படங்களும் ஓடியிருக்காது என்று அருமையாக விளக்கம் கூறினார். மேலும் முத்து படம் ஜப்பானில் ஓடவும் மீனாவேக் காரணமென்று அடிவயிற்றை பதம்பார்த்தார்.

அதற்கு ஒரு ரஜினி ரசிகர், அடுத்து அதே மீனா நடித்த, அதே ரவிக்குமார் டைரெக்ட் செய்த, மேலும் கமல் நடித்த அவ்வை சண்முகி ஜப்பானில் ஏன் ஓடவில்லை என்று தேவையில்லாமல் கேட்டு ஞானியை சாணி போட வைத்தார்.

போகிற போக்கில், ரஜினி 61 வயதில் சூப்பர் ஹீரோ என்று சொல்லுகிறீர்கள், எம்.ஜி.ஆர் தனது 62 வயதில் உலகம் சுற்றும் வாலிபன் என்ற மெகா ஹிட்டைக் கொடுத்தார் என்று ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டார். பாவம் கூகுள் அண்ணன் அங்கு வரமுடியாதக் காரணத்தால் ஞானி சொன்னால் சரியாத்தான் இருக்குமென்று அனைவரும் கேட்டுக்கொண்டனர். டிவி பார்த்த எனக்கு மட்டும் சுர்ர் என்று கூகுளைக் கிளிக்கியதில், எம்.ஜி.ஆரின் 56 வயதில் உலகம் சுற்றும் வாலிபன் வெளியானதைப் போட்டுக்கொடுத்தது. சாணி அடிக்கத்தான் வழியில்லாமல் போய்விட்டது.

சுதாங்கன் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் ஒரே நேரத்தில் இரண்டு படங்களை வெளியிட்ட சூரர்கள் என்று சொன்னாலும் அடிக்கடி ரஜினியை மாஸ் என்று ஒத்துக்கொண்டார்.

கலாநிதி மாறனின் விளம்பரந்தான் எந்திரனின் இத்தனை பரபரப்புக்க் காரணம், ரஜினியின் ஸ்டார் வேல்யூ இல்லை என்ற போது, மத்த நடிகர்களின் படங்களை வெளியிட்ட சன் டிவி ஏன் இந்தளவுக்கு செய்யவில்லை என்றதும், ரஜினியின் ஸ்டார் வேல்யூ மறுப்பதற்கில்லை ஆனாலும் பாகவதருக்கும் எம்ஜியாருக்கும் இருந்தளவுக்கு கிடையாது என்று சொல்லியும் ஆறுதலில்லாமல்,

என்னிடம் 3 கோடி கொடுத்தால், யாரையும் "சூப்பர் ஸ்டார்"ஆக ஆக்க முடியுமென்று சபதமிட்டு முடியை சிலிப்பிக்கொண்டார். சஞ்சை பிண்டோவுக்குதான் என்ன சொல்வது என்று தெரியாமல் அழுவதுபோல் சிரித்துக்கொண்டார்.


அதற்கு ரஜினி ரசிகர் ஒருவர், கஞ்சாக் கருப்புகிட்ட 3 கோடி இருக்காதா என்றுக் கேக்காமல், இப்பொழுதுகூட ரஜினியின் மாஸுக்காகதான் இந்த ப்ரோகிராமையே NDTV-HINDU நடத்துகிறது என்று போட்டு உடைக்க, நிகழ்ச்சி நடத்திய சஞ்ஜை பிண்டோ கொஞ்சமும் சங்கோஜமில்லாமல் ஒத்துக்கொண்டதுமில்லாமல், TRP ரேட்டிங் கூடவே ரஜினி நிகழ்ச்சி செய்கிறோம் என்றபோது, அவர் நேர்மை பிடித்திருந்தது.

மேலும் ரஜினியேப் பணம் கொடுத்து கட்டவுட்டிற்கு பாலூத்த சொல்வதாக சொன்னதும், ரசிகர் ஒருவர் வாயால் சிரிக்காமல், இதுவரை ரஜினியிடம் ஒரு நயாப்பைசா வாங்காமல் இலவசக் கல்யாண மண்டபம் அதுவும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாகா நடத்துவதை சொல்லி வாயடைத்தார்.

சரி விசயத்துக்கு வருவோம்,

ஞானியும் சுவாரஸ்யத்துக்காக பொய் சொல்லும் ஒரு சராசரி சாநியே, அதனால் அவர் அதை சொன்னார் இதை சொன்னார் என்று ஓடாதீர்கள். நமக்கே திரும்பினாலும் திரும்பும்.

Monday, October 18, 2010

நண்பேன்'டா

வாங்க சார். இது ஒரு மொன்ன சுய சொரிதல், வேற வேலையில்லன்னா மேலப் படிங்க. சும்மா என்னோட ஃபிரண்ட்ஸுங்க ஞாபகம் வந்திடுச்சு. நண்பன்'ங்ற பதத்தின் வேல்யூ எனக்கு எட்டு வயசிலயே அதுவும் கிராமத்துல படிக்கும்போது ஆரம்பிச்சிடுச்சு. படிப்பு,விளையாட்டுன்னு ஆரம்பிச்சு, பாதினோரு வயசுல சென்னைக்கு வந்தபிறகு கிராமத்து நண்பர்கள் என்னைக் கண்டால் நட்பாக சிரிப்பது மட்டுந்தான். பேச்சு முன்னைப்போல் இல்லை.ஏதோ ஒருக் கூச்சந்தான் என்னைவிட்டு அவர்களை விளக்கியது.

அடுத்து காலேஜில் புது நட்புகள் கிடைத்தாலும் பள்ளிகால நட்பைப்போல வெள்ளந்தியாக இல்லை. உள்குத்துப் பேச்சும்,படாடோபமும் சாதாரணமாக இருந்தது. அதையும் மீறிப் பூக்கும் நட்பகளும் சின்ன சின்ன விசயத்துக்கும் வெடித்து சிதறும் நிலயிலயே இருந்தது.


பின்னர், வேலை சேர்ந்த இடத்திலும், கல்யாணத்துக்குப்பின்னும் ஏற்படும் நட்புகளும் என்னதான் விரும்பியதாக இருந்தாலும் ஒரு செயற்கைத்தனம் இருக்கத்தான் செய்கிறது. மொத்தத்தில் சட்டென நினைக்கும் போது " நான் நல்ல நண்பனாக இருந்திருக்கேன்,இருக்கின்றேன், ஆனால் அவர்கள் எனக்கு நல்ல நண்பர்களா என்று எனக்குத் தெரியாது".

அப்படி இதுவரை என்னைக் கடந்த சில நட்புகளும் அவர்கள் விட்டுச்சென்ற தடயங்களும்...

கல்லூரி முடிந்து வேலைக்கு சேர்ந்த பிறகு என் ஜூனியராக வேலைக்கு சேர்ந்தார். அவர் வெளியூர் என்பதால் என் வீட்டிலிருந்தே அவருக்கும் சாப்பாடு எடுத்து செல்வேன். அந்தளவுக்கு நெருக்கம். கிட்டத்தட்ட 5 ஆண்டுகள், என் வீட்டுக்கு அவரும் அவர் வீட்டுக்கும் நானும் உரிமையாய் செல்லும் அளவுக்கு நட்பு வளர்ந்திருந்தது.அப்படி இருக்கையில், என் திருமண் விடுப்பு முடிந்து திரும்பி வந்தால், அலுவலகத்தில் என்னென்ன மாறுதல்கள் செய்ய வேண்டுமோ எல்லாம் செய்துவிட்டு, மேலாளரிடமும் சில தேவையில்லா வார்த்தைகளையும் சொல்லிவிட்டார். மேலாளர் என்னை அழைத்து அவர் சொன்ன அத்தனை விசயத்தையும் என்னிடம் சொல்ல, வருத்தமாக இருந்தாலும் "அவருக்கு தன்னை முன்னிருத்த ஆசை இருக்கும்தானே சார்" என்று சொல்லிவிட எனக்கும் மேலாளருக்கும் இன்னும் நெருக்கம் அதிகமானது.

அதன்பின் மேலும் 3 வருடங்கள் ஒன்றாக வேலை செய்தோம். ஆனால் நட்பு மட்டும் விலகவில்லை.

வெளிநாடு வந்ததும், அதே நண்பர் திரும்ப திரும்ப வேண்டுகோள் வைத்ததால், 3 மாதத்தில் அழைத்துக் கொண்டேன். நிலமை என்னவென்றால், இங்கும் அவர் ஜூனியர். அடுத்த 3 மாதந்தான் அவரால் பொறுத்துகொள்ள முடிந்தது, நான்காவது மாதத்தில் தனக்கு தனியா பொறுப்பு தந்தால்தான் வேலை செய்வேன் என என் நிறுவனத்திடம் சொல்ல, "நீ கிழம்பினால் போதும்" என்று அவரைக் கிழப்பிவிட்டது. இதை நிறுவனமோ அவரோ என்னிடம் சொல்லவில்லை. நான் திரும்ப திரும்ப அவரிடம் கேட்க,"வீட்டுப் பிரச்சினை சார், நான் போயே ஆகனும்" என்று சொல்லிவிட்டார்.அதுதான் உண்மையென்று நான் நினைத்துக்கொண்டிருந்த போது என் முதலாளி உண்மைய சொல்ல ஆச்சரியமில்லாமல் எதிர்பார்த்த ஒன்றுதானே என்று சிரித்துக்கொண்டேன்.

இது முதல் நண்பேன்'டா.

அடுத்து, அதே பழைய நிறுவனம். நான் உற்பத்தி பிரிவு. அவர் தறம் பிரிப்பு பிரிவு. நல்லது கெட்டது சொல்லமுடியும். உற்ப்பத்தி செய்ய முடியாது. ரொம்ப அன்னோன்யம். வேலை முடிந்ததும் நேராக என் வீட்டுக்கு வருவார். சில நேரம் இரவுவரை பேசிக்கொண்டே இருப்பார். விடுமுறை நாட்களிலும் என்னிட தொலைபேசாமல் இருக்கமாட்டார். என் அம்மா உருக்கு சென்றுவிட்டால் என்னுடனே தங்கிவிடுவார். பாசக்காரர். "வெளிநாட்டில் ஒரு ரெண்டு வருசம் வேலை செஞ்சுட்டு செட்டிலாய்டனும் சார்" என்று அடிக்கடி சொல்வார். என் வகுப்பு தோழர்கள் பலர் வெளிநாட்டில் வேலை செய்ததால் அடிக்கடி என்னைப் பேச சொல்வார். எனக்கேத் தேவைப்பட்டதுதான். ஆனால் கேட்க கூச்சம். ஆனால் அடுத்தவருக்கு கேட்க்க கூச்சம் இல்லை.கேட்டேன். நணபன் ஒருவன் ஓகே சொல்ல, இரண்டே மாததில் வெளிநாடு சென்றுவிட்டார். ஆனால் மூன்று மாதங்களுக்கு மேலாகியும் பேசவில்லை. ஹாஹா எதிர்பார்த்ததுதான். மறந்தேவிட்டேன்.

என்றோ ஒரு நாள் ஹிண்டு நாளிதழ் விளம்பரம் பார்த்து அப்ளை செய்த, வெளிநாட்டு வேலை எனக்கு கிடைக்க சந்தோசத்தில் திக்குமுக்காட, சேர்ந்தும்விட்டேன். அப்புறந்தான் அந்த முதல் "நண்பேன்'டா" விசயம் நடைபெற்றது.

கொஞ்ச நாள் அமைதியாக இருந்தேன். ஒரு தொலைபேசி வந்தது. நண்பன் மூலமாக வெளிநாடு சென்றாரே அதே நண்பர். ஆனால் இந்திய தொலைபேசி எண்."என்ன சார், எப்ப இந்தியா வந்தீங்க"என்றேன். "அடப்போங்க சார்,ரொம்ப டார்ச்சர் சார், எக்கசக்க பாலிடிக்ஸ் சார், முடியல வந்துட்டேன்" என்றார். "சரி சார், பயோடேட்டா அனுப்புங்க,இப்போதைக்கு ப்ரொடக்ஷன்ல ஒரு வேகண்ட் இருக்கு,செலக்சன்ல ஓப்பனிங் இருந்தா கால் பண்றேன்" என்றேன். " சார் கோச்சுக்காதீங்க, ப்ரொடக்சன்ல இருந்தாகூட எனக்கு கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும், நீங்க இருக்கீங்கல்ல, அப்படியே கேடு கேட்டு பிக்கப்பண்ணிக்குவேன்"ன்னார். யோசிக்க முடியவில்லை. நட்பு வெல்ல, பொய்சொல்லி இவரை அழைக்க வேண்டியதாகியது.

வந்தார். உண்மையிலே கஷ்டப்பட்டார். கிளிப்பிள்ளைக்கு சொல்வதைப் போல் சொல்லித்தற, ஒரு வருடத்திலயே பிக்கப் செய்துகொண்டார். ஆனால் எனக்குதான் தாவு தீர்ந்துவிட்டது.அவர் வேலையும் சேர்த்து என் வேலையும் பார்க்க வேண்டும். இரண்டு வருடங்கள் ஓட, என்னுடன் கம்பேர் செய்ய ஆரம்பித்துவிட்டார். கார்,வீடு,சம்பளம், வேலைக்காரர்கள் இப்படி... ஆனால் நல்ல வேலையாக இவர் என்னிடமே கேட்டார். நானும் விளக்கி சொன்னேன். என்னுடைய பொசிசன் வேறசார்.நான் அதெற்கென்று படித்தவன். மேலும் என் பதவி. அவர் ஒரு அனுபவஸ்தர் மட்டுமே. படிப்பில்லை. சொன்னாலும் புரியவில்லை. என்னிடம் நேரடியாக சொல்லாமல் அடுத்தவரிடம் குறை சொல்ல ஆரம்பித்தார். என் காதுக்கு வந்தபோது வேதனையாக இருந்தாலும், உடனுக்குடன் அழைத்து என் ஞாயத்தை சொல்லிவந்தேன். இதில் முக்கியமாக, அவரில்லாமல் ஒன்றும் செய்யமுடியாது, ஸ்தம்பித்துவிடும் என்று தீவிரமாக நம்பினார். அவரை என்கரேஜ் செய்ய சொன்ன ஒவ்வொரு சொல்லும் அவரை சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்சில் விட்டிருப்பது தெரிந்தது. 5 வருடம் கழித்து, பல உயர்வு பெற்றும்கூட என்னைக் கம்பேர்செய்து விரக்தியாகிவிட்டிருந்தார். அப்போது அவரின் சம்பளம் ஒன்றரை லட்சம். படித்தவரில்லை, ஒரு அனுபவஸ்தர் என்பது கவனத்தில் வைக்கவேண்டும். மிரட்டும் விதமாக அவருக்கும் எனக்கான சலுகைகள் தந்தால்தான் வேலை செய்வேன் என சொல்ல, நிறுவனமும் தாராளமாக நின்றுகொள்ளலாம் என சொல்ல, தலைமுடியைப் பிய்த்துக் கொண்டார். நானோ எந்த ஒரு முடிவும் சொல்லவில்லை. அமைதியாக இருந்தேன். ஊருக்குச் சென்ற ஆறே மாதத்தில் " சார் தெரியாம தப்பு செஞ்சுட்டேன், இனிமேல் அப்படி நடக்க மாட்டேன், தயவு செஞ்சு ஒரு சான்ஸ் கொடுங்க" என்றார். கொடுக்கலாம். வாய்ப்புக்கிடைத்தால். இவர் என் இரண்டாவது நண்பேன்'டா.

அடுத்து, இவர் என் நண்பரின் நண்பர். அப்படியே எனக்கும் நண்பரானார். ஒரு நாள், " சார் அடுத்த வாரம் ஊருக்குப் போறேன், அர்ஜெண்டா கொஞ்சம் பணம் வேணும், கம்பெம்னியிலக் கேட்டிருக்கேன், என்னமோ தெரியல டிலே பன்றாங்க, நீங்க குடுத்தீங்கன்னா நல்லா இருக்கும், திரும்பி வரும்போது குடுத்திட்றேன்" என்றார்.

நிஜமாலும் நல்ல டைப். அதிர்ந்து பேசமாட்டார். ஞாயிற்றுக் கிழமையானது, தோசை போட்டு வைத்துவிட்டு என்னைக் கட்டாயப்படுத்தி அழைத்து சாப்பிடவைப்பார். அவரைப்பார்த்து ஆச்சரியமாக இருக்கும். மீதி வேலை நாட்களில் என் வீட்டில்தான் சாப்படு. என் வீடு எப்போதும் பேச்சுலர்களின் சொர்க்கம். எல்லாம் கிடைக்கும். அதுவும் தங்கமணி டெலிவரி விசயமாக இந்தியா சென்றுவிட்டதால், நான் மட்டுந்தான். ஞாயிற்றுக்கிழமை வேலைக்காரி வராததால் எனக்கு இந்த அழைப்பு. வரும் பல பேச்சுலர்களில் இவர் மட்டும் என்னை அழைப்பதால் அவரின் அந்த நேர்மைக்கு அடிமை. அவர் மனைவி விசா விசயமாக இந்தியாவில் இருந்தார். அனேகமாக திரும்பி வரும்போது அழைத்து வரலாம்.

மறுக்கத் தோணவில்லை. "இங்க இல்ல சார். நீங்க ஊருக்குப்போங்க. என்னோட மிஸ்ஸஸ்கிட்ட சொல்லி அனுப்புறேன். ஆமா அமவ்ண்ட் எவ்ளோ சொன்னீங்க?" என்றேன். "எழுபதாயிரம், போர் போடனும்" என்றார். "ஓகே சார், செஞ்சிடலாம்" என்றேன்.

அதன்பிறகு பெரியக்கதை. ஊருக்குப்பேசினால் தங்கமணிக்கு கோபம். காரணம் சிலபல எக்ஸ்பீரியன்ஸ். ரிசல்ட் ஒன்னுமே சரியில்ல. எல்லாமே நாமம்தான். எல்லாமே "நண்பேன்'டா"தான். என்னை வறுத்தெடுத்தாலும், "வாக்குக் குடுத்திட்டேன் செல்லம், ப்ளீஸ் இந்தெ ஒரு முறை" இப்படி ஏதோதோக் கெஞ்ச , " இன்னிக்கி வெள்ளிக்கிழமங்க யாருக்கும் பணம் குடுக்கமுடியாது" என்று சொல்ல, "ப்ளீஸ் நாளக்கியாவாதும் அனுப்பிடு, இது அவர் அக்கவுண்ட் நம்பர்" எனக்குடுக்க, "நாளைக்கி சனிக்கிழம் பேங்க் ஆப்டே தான், அறக்கப் பறக்க செய்யமுடுயாதுன்னு" சொல்ல அப்புறம் நான் கத்த, கடைசியாக ஒரு சின்ன சண்டையின் வழியாக பணம் பரிவர்த்தனையானது.

சரி முடிஞ்சதா. இப்ப பிரச்சினைக்கு வருவோம். கிட்டத்தட்ட 4 மாதங்கள் கழித்து, வெளியில் பர்ச்சேஸ் செய்ய நான் செல்ல, அந்த நண்பரும் ஏதோ வாங்க என் காரிலேயே வந்தார். பொருட்கள் வாங்கினோம். எனக்குப்பிடித்த பொருள்வாங்க பணம் போதுமானதாக இல்லை. நமதூரில் ஆயிரம் ரூபாய் மதிப்பு, தந்தார். நானும் திரும்பித்தற மறந்துவிட்டேன். மேலும் என் எழுதாயிரம் அவரிடமிருந்த மிதப்போ என்னவோ. சுத்தமாக மறந்துவிட்டேன். ஒரு நாள் என் தங்கமணி" ஏங்க அவர்கிட்ட ஆயிரரூபா வாங்கினீங்களா?" என்றார்."ஆமாம், அதுக்கென்ன இப்போ" என்றேன். "ஆமா நல்லா ஃபிரண்டு பிடிக்கிறீங்க, அத அவர் ஒய்ஃபுகிட்ட சொல்லி, அந்த பொண்ணு 10 முறைக் கேட்டுடுச்சு" என்றார். "கொடுத்தற வேண்டியதுதானே" என்றேன். "என்ன ஆளுங்க நீங்க, நம்ம பணம் 70 ஆயிரம் கிட்டத்தட்ட 6 மாசமா அவங்ககிட்ட இருக்கு, அதுக்கு பதிலக்காணோம், ஆயிரம் ஓவா வேணுமாக்கும்"ன்னு சொல்ல எனக்கே அவர்கள் கேப்பது ஓவராகப்பட்டது. கேட்பதுமில்லாமல் சலித்துக்கொள்ளும் தோரனை என் தங்கமணியை விசனப்படுத்தியிருக்கிறது."ஒரு வேள அந்தப் பொண்ணுக்கு தெரியாம இருக்கலாம், அடுத்த முறக்கேட்டா 70 ஆயிரத்துல ஆயிரத்தக் கழிச்சுட்டு மீதி 69 ஆயிரம் எப்பத் தர்றீங்கன்னு கேளு"ன்னுடு நானும் மறந்துட்டேன்.

மூனு நாள் கழித்து, நண்பர் மனைவியுடன் வந்தார். 69 ஆயிரம் தந்தார். வசதியாக அதற்குமுன் தந்த ஐந்தாயிரத்தை ஏனோ மறந்திருந்தார். எனக்கு கேக்கத்தோணவில்லை.

போகும்போது ஒரு வார்த்தை சொன்னார், நீங்க இப்படி இருப்பீங்கன்னு தெரியாது. ஊர்ல வாங்குனது வேற. இது வேற. தேவையில்லாம ரெண்டையும் குழப்பிக்கிறீங்க. ரொம்ப தேங்ஸ் என்றவர் இன்றுவரை ஒரு ஃபார்மாலிட்டி சிரிப்பு மட்டுமே. "நண்பேன்'டா"



அடுத்து... (என்னது அடுத்துன்னுதானே கேக்குறீங்க?) நண்பர்கள் புடைசூழ வளர்ந்ததால் எனக்கு எல்லாமே நண்பர்கள்தான். "நான் அவர்களுக்கு நல்ல நண்பன், ஆனால் எனக்கு..?

Saturday, October 16, 2010

இவர்களை எப்படி அழைக்கலாம்..?

நீங்கள் அடிக்கடிப் பார்த்தவர்கள்தான். படிக்கும் இடத்தில்,வேலை செய்யும் இடத்தில், வசிக்கும் இடத்தில் இப்படி. அவர்களை உங்களால் அனுசரித்து செல்லவும் முடியாது. அதே சமயம் ஒதுக்கவும் முடியாது. எந்தவொருக் கட்டமைப்பு வைத்தாலும் அவர்கள் ஊடுருவிக்கொண்டே இருப்பார்கள். யாரப்பற்றி சொல்கிறேன் என்று புரியாதவர்களுக்கு "எட்டப்ப வகயறாக்கள்" என நினைவுபடுத்துகிறேன்.

இந்த எட்டப்ப வகையறாக்களால் நம்மால் வரையறுக்கமுடியா பல துன்பங்கள் மனிதன் தோன்றியக் காலம் தொட்டே வருவது கண்கூடு. ஒருவேளை இவர்கள் மட்டும் இல்லாமல் போனால் மனித குலமே ஒரு பிடிப்பில்லாமல் சப்பென செல்லக்கூடும். ஆம் அவர்கள்தான் இந்த மனித குலத்தையே இயக்குபவர்கள்.

இவர்கள் வரலாற்றில் இருந்து வலைப்பூக்கள்வரை விரவி இருக்கிறார்கள். வீரபாண்டியக் கட்டபொம்மனுக்கு எட்டப்பன் இல்லையென்றால் "வீரபாண்டியக் கட்டபொம்மன்" தடையமில்லா வரலாற்றில் ஒழிந்து இருக்கலாம்.

ஆங்கிலேயா ஏகாதிபத்தியத்தில் எண்ணற்ற எட்டப்பர்கள் இருக்கவேதான் எத்தனை போராட்டங்கள், எத்தனை இழப்புகள். அதுவே அழியா வரலாறாகவும் மாறியிருக்கிறது. அந்த எட்டப்பர்கள் மட்டும் இல்லையென்றால், அந்த வெள்ளைக்கார நாய்களுக்கு பணிவிடை செய்ய குமாஸ்தா நாய்கள் இல்லாமல் போயிருக்கலாம், மொழிபெயர்க்க பல இந்திய நாய்கள் கிடைக்காமல் போயிருக்கலாம், அவர்களைப் பாதுகாக்க பல இந்திய ராணுவ நாய்கள் கிடைக்காமல் போயிருக்கலாம், இப்படி அந்த வெள்ளைக்காரர்களுக்கு அனைத்து வேலைகளையும் செய்தது நம் இந்திய நாய்கள்தான். அப்படிமட்டும் செய்யாமல் இருந்திருந்தால், "மேதகு எலிசபத் ராணியே, இந்தியர்கள் யாரும் எங்கள் பேச்சைக் கேட்பதில்லை,வெறும் அம்பதாயிரம் பேர்களால் ஒரு முடியும் புடுங்க முடியவில்லை" என்று பின்னங்கால்கள் பிடனியில் பட ஓடியிருப்பார்கள்.நமக்கும் இந்த அரிய வரலாறும் மகாத்மாவும்,மாமாவும் கிடைக்காமல் போயிருக்ககூடும். அப்படியெல்லாம் இருந்தால் சுவாரஷ்யம் இல்லைதானே.

நேற்று ஈழத்தில் நடந்தது என்ன? விடிவெள்ளி கருணா. பிரபாகரனுடனே இருந்தார். போராடினார். பேசித்தீர்க்கும் பிணக்குகள். வெளியேறினார். போராடவா? இல்லை, காட்டிக் கொடுக்க.

காட்டிக்கொடுப்பவர்கள் இல்லாதவரைதான் ஒரு போராட்டம் போராட்டமாக இருக்கும். கூடவே இருந்தவன் அல்லது இருப்பவன் காட்டிக்கொடுக்க ஆரம்பித்தால், முடிந்தது கதை. அது நாடாக இருக்கட்டும்,ஒரு சமூகமாக இருக்கட்டும் இல்லை ஒரு தனிமனிதனாக இருக்கட்டும்.

ஆனால் எட்டப்பர்கள் இல்லாத ஒரு இடம் சாத்தியமா? சாத்தியம் என்று நினைத்தால் நீங்கள் அப்பாவி. ஆப்பிலேயே அமர்ந்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

இதில் பல எட்டப்பர்களுக்கு தாங்கள் எட்டப்பர்கள் என்பது தெரியமலேப் போவது துரதிஷ்டம்.
அதிலும் அந்த எட்டப்பர், அதே சமூகமாகிப்போனால் அந்த சமூகத்தின் கதி அதோகதிதான்.புரியும்படியாக சொல்வதென்றால், "பெண்களுக்கு 33 சதவிகிதம் ஒதுக்கீடு" என்ற ஒரு கோரிக்கை வலுப்பெரும்போது, பெரும்பணக்காரகளின் மனைவிமார்களின் ஏதோ ஒரு சங்கம், அதற்கெதிரா ஒரு வழக்கு போட்டால், அதுவும் பெண்களே பெண்களுக்கு எதிராகப்போட்டால் என்னாகும்? நீர்த்துப் போகும்தானே.

அதுவரை சப்போர்ட்டாக இருந்த ஆண்களுக்கும் தலைசுத்துவது வாஸ்தவம்தான். அதிலும் விவரம் புரியாதவர்களுக்கு ஒன்னும் விளக்கததேவையில்லை. வீட்லயே ஒன்னும் புடுங்க முடியலயாம், இதுல நாட்டுலெவலுல எடம் கேக்குதாம் என எள்ளி நகையாடாமல் முடியாது.

இந்த ட்ரெண்டுக்குப் பேர்தான் நம்ம விரலால நம்ம கண்ண குத்துறது. நாமலே நம்மல செருப்பால அடிச்சுக்கிறது.ராஜபக்சே ஒரு கிரிமினல்'ன்னு ஐநா சொல்லும்போது "நான் தமிழர்களை கொலை செய்யல"ன்னு ராஜபக்சே சொல்றதுக்கும், ஒரு தமிழனே, " ச்சே ச்சே இட்ஸ் டூ மச், ராஜபக்சே தமிழனக்கு உதவியாய் இருக்கிறார், தமிழர்கள் சந்தோசமாக இருக்கிறார்கள்"ன்னு சொல்றதுக்கும் உள்ள வித்தியாசம்.

இந்தமாதி ஸ்டேட்மெண்ட ஒரு தமிழனோ, தமிழ் அரசியல்வாதியோ விட்டால் டோட்டலா நமக்குதான் டேமேஜ்.

இந்தக் கேடுகெட்ட வேலைய பலர் தெரியாமலே செய்வதுதான் கொடூரம்.

ஒரு நிகழ்ச்சி. அவர்களுக்கு அது புரட்சித் திருமணம். ஆம் சாதி மதத்தில் உருண்டு சேராகிக் கிடந்தவர்களுக்கு நடுவே வெவ்வேறு சாதியும் வெவ்வேறு மதத்தையும் சேர்ந்த இருவருக்குமிடையே நடந்த ஒரு திருமணம். சிலருக்கு புரட்சியாகத் தெரியலாம். சிலருக்கு அப்படி இருக்க அவசியமில்லை. ஆனால் கண்டிப்பாக அதை நக்கல் செய்யவேண்டிய அவசியம் இல்லை.

ஒரு வேளை அந்த நிகழ்வை விவரித்தவர் மட்டமானவராகவே இருந்தாலும் கூட. பாராட்டியாகவேண்டியக் கட்டாயமில்லை. ஆனால் கண்டிப்பாக மட்டம்தட்டுவது அருவருப்பானது.

மட்டம்தட்டியது அந்த மனிதரையா? அந்த திருமணத்தையா? இல்லை அந்த இணந்த உள்ளங்களையா?

யோசிக்க வேண்டிய விசயம். இது நமக்கு புதிதல்ல. நாம் தமிழேண்டா. நம்மை ஆள்பவர்கள் எவ்வழியோ நாம் அவ்வழி.கருணாநிதி ஜெயலலிதாவ புகழ்ந்தும்,ஜெயலலிதா கருணாநிதியப் புகழ்ந்தும் கேட்டிருக்கீங்க? இது உதாரணத்துக்காக.

ஒரு நல்ல விசயத்துக்கு உண்ணாவிரதமிருந்த போது, அதன் எதிரிலேயே உண்ணும் விரதம் இருந்தவர்கள்.

அடுத்து நமது பெண்களுக்கான சுதந்திரத்தை கிணற்றுத்தவளையாக கணித்தல். வெளியில் வரவேண்டும்.உலகம் பெரியது. இதில் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. இதில் தெரிந்தோ தெரியாமலோ அடக்கியோ அடங்கியோ இருக்கிறார்கள். ஒரு தனி மனிதனால் தீர்க்ககூடியது அல்ல. ஊர்கூடி இழுக்கும் தேர்போல. நாமும் இழுக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் எதிர்புறமாக தள்ளுவது அபத்தமானது.

பலர் அது தெரியாமலயே எதிர்வினை புரிகிறோம். நேர்வினை புரிபவரின் நம்பிக்கையில் ஐயப்பாடு காரணமாக இருக்கலாம். அதுக்கு அவர்களைப் பிண்ணிப் பெடலெடுத்தால் பாராட்டக்கூடியது அதுவும் சரியானக் காரணங்களுடன். அது சரியானதா என்பதை சிந்திக்க வேண்டும்.

சில சுதந்திரம் போராட்டத்திலும் சில சுதந்திரம் புரிதலிலும் சில சுதந்திரம் விட்டுக்கொடுத்தலிலும் உள்ளது.

பெண் சுதந்திரமென்பது புரிதலில் மட்டுமே உள்ளது என்பது என் அபிப்ராயம். பெண் சுதந்திரம் என்பது ஆண் செய்யும் அத்துமீறல்கள் அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஆக பெண் சுதந்திரம்மென்பது கருவியாகமட்டுமில்லாமல் இயக்கியாகவும் இருத்தலே. இதில் அனைத்தும் அடங்கும்.

உடனே சில வில்லப் பெண்கள் உங்கள் ஞாபகத்தில் வந்து உங்களைக் குதறினால், உலகில் நடக்கும் க்ரைம்கள் 95 சதவிகிதம் ஆண்களாலே நடந்தது, நடக்கிறது என்பதை நினைவில் கொண்டால் கொஞ்சம் கோபம் மட்டுப்படலாம்.

இருட்டில் இருந்துகொண்டு இருட்டென்று சொல்லாதவர்கள் ஒரு நாள் இருட்டென்று உணருவார்கள் என்ற நம்பிக்கை இருப்பது சகஜம், ஆனால் இருட்டை வெளிச்சமென்று சொல்பவர்களுக்கு நாம் நல்ல முறையில் சொல்வது கடமை. ஏனென்றால் அவர்களும் நம் சகோதரர்(ரி)களே...!

டிஸ்கி: இது யாரைப் பற்றியும் அல்ல.

Friday, October 15, 2010

தமிழ் ப்ளாக்கன் தொடர் - விமர்சனம்

தமிழ் ப்ளாக்கன் என்னும் வலைப்படம் வலையை விரித்து நூத்து சொச்சம் பதிவர்களையும், ஆயிரத்து சொச்சம் படிப்பவர்களையும் தினமும் ஒரு ஃபைட் தினமும் ஒரு அட்வைஸ் எனப் பட்டையைக் கிளப்பிக்கொண்டு இருக்கிறது.

இதில் ஒரு சில பதிவர்கள் செய்யும் ஓவர் ஆக்டிங்கால், நன்றாக செய்யும் பதிவர்களின் நடிப்பும் கேலிக்கையாய் போய்விட்டது வருத்தமே தருகிறது. என்ன செய்ய. சட்டியில் இருந்தாதானே அகப்பையில் வரும்.

கடந்த தொடரில் பல திடீர் கதாநாயகர்ள் நாய்போல் கத்தி நடித்தது மிக அருமை. படிக்காதவர்கள் பாவப்பட்டவர்கள். இதில் ஒருப்பிரச்சனை என்னவென்றால் படித்துவிட்டு கை தட்றதா, தலையி குட்றதா இல்லை எஸ்கேப்பாகிறதான்னு முழிக்கும் முழிக்கு வாசகர்களுக்கு ஆஸ்கார் கிடைத்தாலும் ஆச்சர்யப்படத் தேவையில்லை.

இதில் முக்கியமான ஒருக் காட்சி, பல வாசகர்கள், பதிவர் கம் வாசகர்கள் பின்னூட்டப்பெட்டியில் நுழைந்து மணிக்கணக்கில் டைப்படித்து, அழித்து மாற்றம் செய்து,சொந்த ஐடியில் நுழைந்து அனானியாகி, பின்னர் அடப்போங்கய்யா என்று எந்தப் பின்னூட்டமும் இடாமல் கணிணியை விட்டும் வெளியேறும் காட்சி சிரிப்பை வரவழைத்தாலும் நடிப்புக்கு அது ஒரு இலக்கணம்.

பலக்காட்சிகளில் வாசகர்கள் நடிப்பில் பதிவர்களை லீட் செய்வதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

பதிவர்களின் நடிப்புக்கும் ஆஸ்கார் தூரமில்லை. அப்படியொரு அன்னோன்யம். உதாரணத்திற்கு விமசர்னம் பதிவர்கள், விமர்சனம் எழுதுவதைக் காணக் கண்கோடி வேண்டும். அவர்கள் அப்படியே ஒரு 100 படம் இயக்கி களைப்படைந்த மனநிலையை அடைவது நடிப்பின் உச்சக்கட்டம். இசையை பற்றி எழுதும் போழுது, ஆகா எப்படி சொல்வது, குரல் கழுதை ஒத்தாலும், கட்டைப் பிரித்து விமர்சனம் செய்யும் போது நம் கண்ணில் ஆனந்தக் கண்ணீர். இதில் சிலபதிவர்கள் விமர்சம் எழுதிவிட்டு மூச்சு வாங்க முன்னேப் பின்னே நடந்து, ஆவேசமாக " டேய் ஒனக்கெதுக்கு சினிமா, டைரக்சன், ப்ளீஸ் எங்களை வாழவிடு, இனிமேல் டைரக்சன் செய்யாதே" என்று அரட்டும் இடத்தை தயவு செய்து மிஸ் செய்துவிடாதீர்கள். அப்படியொரு நடிப்பு, உண்மையாகவே பலவருடமாக சினிமாவில் உழைத்தக் களைப்பில் அனல் தெரிக்கிறது. முக்கியமாக அடுத்த நாளே குடும்பத்தோடு அதேப்படத்தை ரசிச்சு பார்த்த பார்வை பிரமாதம்.

இன்னும் சிலர், ஆனானாப்பட்ட ஆஸ்காரையே" டெக்னிக்கல் குப்பை" என்றுவிட்டு திரும்ப திரும்ப அதேப்பாடலை ரசித்துக் கேக்கும் காட்சி அன்பிளீவப்ள் சீன்.

ஆங் மறந்துட்டனே. ஒரு பதிவர் குடும்பத்துடன் படத்தை ரசித்துவிட்டு, சந்தோசத்திலிருந்து முகத்தை கோபமாக மாற்றி சீரியக் காட்சியில் அன்னியன் விக்ரமென்றால் மிகையில்லை. அதிலும் நல்லவேலை "நா அந்த டைரக்டர்கிட்ட அசிஸ்டெண்டா சேர்லாம்ன்னு இருந்தேன், நல்லவேலை தப்பிச்சேன்" என்று மனைவியிடம் சொல்ல, மனைவி "யாரு டைரக்டரா"ன்னு கேக்குமிடம் வயிரைப் பதம் பாக்கிறது.

அடுத்து,சண்டைப் பதிவர்கள். சும்மா சொல்லக்கூடாது. மிக நல்ல ஓப்பனிங். நல்ல வசூல். அதிக இடங்களில் திரையிட்டு வாசகர்களை கலகலப்பாகுகிறார்கள். பல புதிய வாசகர்களுக்கு வாலெது தலயெது எனப் புரியாமல் "ஞே"ன்னு முழிப்பதில் பின்னி பெடலெடுக்கிறார்கள். அப்படியும் விடாப்பிடியாக தங்களது கருத்துயென கக்காப் போவதில் கைத்தட்டல் சத்தத்தில் காது பஞ்சராகிறது.

நன்றாக சென்று கொண்டிருக்கும் சண்டைப்பதிவு திடீரென பல ட்விஸ்ட்டுகளை கடக்கும்போது யாரு ஹீரோ யாரு ஹீரோயின் என்பதில் வாசகர்கள் குழம்பாமல் இருந்தால் அவர்தான் ஹீரோ. இதில் ஒரு நொடி கண்ணசந்தால் வாசகர் ஜீரோவாவதை எந்த பதிவராலும் தடுக்க முடியாது.

அடிக்கடி மன்னிப்பு, சொம்பு போன்ற வசனங்கள் அதிகமாக வருவது கொஞ்சம் அயற்சியத் தந்தாலும்,நல்ல நடிப்பில் தெரிவதில்லை.

இடையிடையே வரும் காமெடிக்காட்சிகளுக்கும் பஞ்சம் இல்லை. பெரிய பெரிய தலைவர்களை, லெஜெண்டுகளையெல்லாம் கிழிப்பதாக நினைத்து கிழிந்துபோன சில பதிவர்கள், சக பதிவர்கள் காட்டும் கிச்சலுக்கு, கூனிக்குறுகி இனிமேல் நான் பதிவுலகில் இல்லையென கண்ணீருடன் கதறும்காட்சியில் கண்ணீர்வர சிரிப்பதற்கு உத்திரவாதம். ஒரு சில பதிவர்கள் பிடிக்காத ஒரு பதிவரை கலாய்க்க உள்ளே போனால், மிக நல்ல பதிவு. "நாராயணா அதுக்கா நாம இருக்கோம்,நல்லதாவது கெட்டதாவது, பிரிச்சு மேயனும், மேஞ்சாதான் தமிழ் பிளாக்கி(கன்)"யென்றுவிட்டு ஒரு நல்லப்பதிவை கைம்மாவாக்குமிடத்தில் கைத்தட்டல் அதிர்கிறது. அங்கே வாசகர்காட்டும் பலமுக தோரணை தாசாவதாரம் ஒரு படத்தில் 10 ஆக்டிங், இங்கு ஒரேக்காட்சியில் 100 ஆக்டிங்.அதில் ஒரு கழுதையயும் நடிக்க வைத்திருப்பது நல்ல அனுகுமுறை.

அடுத்து .... அட்வைஸ் பதிவர்களின் பரிணாமமும், தோழர்களின் தோன்றலும்...

இனிமேதான் கதையே இருக்கு வசீகரா.....

Tuesday, October 12, 2010

ஒரு பிணந்தின்னியும், அதன் கொக்கரிப்பும்.

காமன் வெல்த் கேம் ஓஹோன்னு நடந்து முடியப்போகுது. இந்தியா ரெண்டாவது இடம். சந்தோசம் தாங்கல. அட எனக்கில்லங்க. 7000 கோடியில மினிமம் 40 சதவீதம் அடிச்சிருப்பானுங்க. அவ்ளோப் பணத்த என்ன பண்ணுவானுங்கன்னு நெனக்கிம்போதே பிரமிப்பா இருக்கு. இந்திய அரசியல்வாதியா பிறக்க கொடுத்து வெச்சிருக்கனும்.

ஆண்டவன், அருவாமனைன்னு சொல்றாங்க. இதுக்கெல்லாம் தண்டனை கிடைக்குமா?

அப்படியே கேம் முடிச்சுவெக்க, முடிச்சவிக்கி ராஜபக்சேவ கூப்பிட்றாங்களாம். நாமெல்லாம் இந்தியர்களான்னு சந்தேகமா இருந்துச்சு. கண்டிப்பா நாம இந்தியர்கள் இல்ல. இந்திய அகதிகள். கொஞ்சம் சுதந்திரத்தோட.

என்ன நெருக்கடின்னு தெரியல. சும்மா சும்மா இந்த ராஜபக்சேவே இந்தி-யா தாங்குதே. எதாச்சும் காரணம் இருக்கும்? ஆளாளுக்கு ஒன்னொன்னு சொல்றாங்க. இந்தி-யா கவனிக்கலன்னா பாகிஸ்தான், இல்ல சைனா உள்ளார வந்திருவாங்கலாம். ஃபிகர் நல்லா இருக்குன்னு, அவ அடுத்தவன லவ் பண்றான்னு தெரிஞ்சும் மூனு நாலு பேரு ரூட் விடுவாங்க. கடைசியில அவ எல்லாரையும் சமாளிச்சு கட்டக்கடைசியில பலான நோய்ல தள்ளிவிட்ருவா. (அவ அவன்னு இருக்குற எடத்துல அவன் அவன்னு போட்டு பெண்ணாதிக்கமாக்கிடுங்க) கடைசியா அப்படிதான் முடியுமுன்னு நினைக்கிறேன். ராஜபக்சே பாலினத்தொழிலாளியோ? இந்தி-யா எய்ட்ஸ் நோயாளியோ?

அதே இந்த சிங்கு, இந்திக்காரனுக்கு பிரச்சினைன்னா டெங்கு காய்ச்சல் வந்தமாதி குதிக்கிறதும், தமிழனுக்கு எதாச்சும் ஒன்னுன்னா பம்முறதும் ஏன்னு தெரியல.

ம்ம்ம், என்ன சொல்லி என்ன செய்ய? பொணந்திண்ணி இந்தி-யா வர்றான்.(மரியாதைக் கூடயோ). நாமெல்லாம் என்ன செய்யனுமுன்னு தெரியல. எப்படி எதிர்க்கனுமுன்னு தெரியல.

இதக் காரணமா வெச்சு கலைஞர் காங்கிரஸ் கூட்டணியக் கட் பண்ணுனா எமோசனலா இருக்குமா? தேர்தலுக்கு ஒதவுமா? நம்ம மக்களப் புரிஞ்சுக்கவே முடியாது.

பார்ப்போம், என்னதான் நடக்குதுன்னு.

Thursday, October 7, 2010

எந்திரன் (2010) - ஒரு சந்தோசமான சம்பவம்

டிஸ்கி:இந்தமாதி ஒரு மட்டமான விமர்சனம் வந்திருக்குன்னு கேள்விப்பட்டேன்.எந்தக் KK எழுதனதுன்னு தெரியல. ஒருவேள எக்ஸ்பீர்யன்ஸ் ஹேண்டா இருக்குமோன்னு நினச்சா, நேத்து முளச்ச டுபாக்கூர் ஆசாமி. அட வெண்ண, ஓசியா கெடச்சா ஃபினாயிலயும் குடிக்கிறது இவிங்கதானா? விமசர்னமுன்னா என்ன?, யாருக்கெல்லாம் தகுதியிருக்கு, எப்படியெல்லாம் விமர்சனம் செய்யலாமுன்னு ஒரு ஆய்வுக்கட்டுரை வந்துகிட்டே இருக்கு. இதே வில்லத்தனம் தொடர்ந்தா, அவனோட ஒவ்வொரு இடுகையும் விமசர்னம்ங்ற பேர்ல கிழிக்கப்படும்ங்றதையும், அவனோட பாசையிலயே கெட்டவார்த்தையாலயே விளக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். மற்றவர்கள் கொஞ்சம் எட்ட இருந்து வேடிக்கை பார்க்கவும்.



//எந்திரன் (2010) – ஒரு துன்பியல் சம்பவம்//

இது அவன் வெச்ச தலைப்பு. ங்கொய்யால, விடுதலைப்புலி பிரபாகரனின் ஒரு முக்கியமான ஸ்டேட்மெண்ட ஒரு படத்தோட விமர்சனத்துக்கு வைக்கவேண்டிய லெவலுலதான் அவனுக்கு அறிவு இருக்கு.

//கடந்த இரண்டு ஆண்டுகளாக, எந்த ஊடகத்தின் பக்கம் திரும்பினாலும், அங்கே எந்திரனைப் பற்றிய செய்திகளைக் கேள்விப்பட்டுக்கொண்டிருந்தோம். தமிழ் மக்களின் நாடித்துடிப்பை எகிறவைத்துக்கொண்டிருந்தது எந்திரன் என்று சொன்னால், அது மிகையல்ல.//

ங்கொய்யால வியாபரம் செய்றவன் விளம்பரம் செய்யத்தான் செய்வான். நாதாரி நாயே காண்டம் செய்றவன், சிகரெட் செய்றவனே விளம்பரம் செய்யும்போது ஒனக்கு ஏண்டா வேகுது.

// முதலில், இப்படத்தில் கமல் நடிப்பதாக இருந்து, பின் ஷா ருக் கான் ஒப்பந்தம் செய்யப்பட்டு, பின் அவராலும் நிராகரிக்கப்பட்ட ஒரு திரைக்கதை இது என்று ஊடகங்களால் சொல்லப்பட்டது. ஷா ருக் கொடுத்த காரணங்கள் என்ன என்று தெரியவில்லை. ஸ்க்ரிப்ட் அரைவேக்காட்டுத்தனமாக இருப்பதால், அவர் விலகிக்கொண்டதாக விகிபீடியா தெரிவிக்கிறது. அது உண்மையா பொய்யா தெரியவில்லை.//

அடே மாங்கா, ஸ்கிரிப்ட் சரியில்லாதப் படமே சூப்பர் டூப்பர்ன்னா, ஒரு வேள இவன் நல்ல ஸ்கிர்ப்ட்ன்னா வேர்ல்ட் லெவெல் ஹிட் ஆகுமுன்னுதான நினைக்கிறீங்க. நோ சான்ஸ். ஒரு வேள இவன் சூப்பர்ன்னு சொல்லிட்டான்னா, அது பயங்கர மொக்கையாய்டும்.

// இப்படியாக, கடைசியாக ரஜினியிடம் வந்து நின்றது எந்திரன். சுஜாதா வசனம் எழுத, இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட இப்படம், இப்போது திரைக்கு வந்துள்ளது.//

வந்து ஒன்னோட குடியா கெட்டுச்சு.

//படத்தைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னர், தொலைக்காட்சியில் எந்திரனுக்கு அளிக்கப்பட்ட விளம்பரத்தைப் பற்றிப் பார்ப்போம். கடந்த ஞாயிறன்று, சன் தொலைக்காட்சியில், தமிழகமெங்கும் எந்திரனுக்கு உள்ள வரவேற்பு என்று சொல்லி, சில காட்சிகள் காட்டப்பட்டன. அவற்றில், ஒரு நபர், இரும்புக் கொக்கிகளை முதுகில் மாட்டிக்கொண்டு, ஒரு சிறிய தேரில் எந்திரன் படப்பெட்டியை வைத்து இழுத்துக்கொண்டு சென்ற ஒரு காட்சியைப் பார்க்க நேரிட்டது. பழனியில் ஏராளமான பால்குடங்கள் வேறு. இதைப்போன்ற பல அபத்தங்கள் அந்த நிகழ்ச்சியில் காட்டப்பட்டன.//

இதுக்கு சன் டீவிய மட்டுந்தான் குறை சொல்லனும். ஒனக்கு அட்ரஸ் வேணுன்னா வாங்கித்தர்றேன்.ஏன்னா ரஜினி வந்து 35 வருசம் ஆச்சு.

//ஒரு படம் வந்தால், அதைக் கொண்டாடுவது என்பது வேறு. படத்தின் வெற்றிக்காக வேண்டிக்கொள்கிறேன் பேர்வழி என்று இப்படி தன்னைத்தானே வதைத்துக் கொள்வது வேறு. ஏன் இப்படிப்பட்ட முட்டாள்தனங்கள் இங்கே நடக்கின்றன? இதையெல்லாம், படத்துக்கு விளம்பரம் என்று வேறு ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது. இவற்றையெல்லாம் என்ன சொல்லித் திட்டுவது என்று தெரியவில்லை. இதையெல்லாம் கண்டிக்க வேண்டிய நடிகர், அவரது வழக்கப்படி படம் வந்ததும் அமைதியாகி விட்டார்.//

அடே டோமர், இதுவரைக்கும் 35 வருசமா ரஜினி படம் வந்துச்சு. இந்த படத்துக்குமட்டும் இந்தக் கூத்துன்னா, சன் டீவிக்காரன் 150 கோடி 200 கோடியாக்கனுமுன்னு விளம்பரம் செய்றான். இதுல எங்கடா ரஜினி வந்தார்.

//இன்னொரு விஷயம். இப்படத்தை, முதல் நாளிலேயே முண்டியடித்துக்கொண்டு நாங்கள் பார்க்காததற்கு என்ன காரணம் என்றால், இப்படத்தின் பெயரால் திரையரங்குகளில் நடக்கும் அப்பட்டமான கொள்ளையில் பங்கு பெற எங்களுக்குத் துளிக்கூட விருப்பமில்லாததே காரணம். வழக்கமான டிக்கட் விலையைப்போல் மூன்று மடங்கு அதிக விலை (குறைந்த பட்சம்) வைத்துத் திரையரங்குகளில் மக்களை மொட்டையடித்துக்கொண்டிருக்கின்றனர். எனவே, விலை குறைந்து, வழக்கமான ரேட்டுக்கு வந்த பின்னரே இப்படத்தைப் பார்க்க வேண்டும் என்பதால், இன்று (செவ்வாய்) மாலைக்காட்சிக்கு முன்பதிவு செய்தோம்.//

ஏண்டா, மவனே ஒன்னப் பாக்க சொல்லி டவுசரயாக் கிழிச்சான். இல்லையில்ல பிடிச்சாப் பாரு. இல்லாட்டி மூடிட்டு ஓடு.

//இப்படி இந்த எந்திரன் படத்தைப் பற்றிக் கிடைத்து வரும் செய்திகள் அத்தனையுமே மிகுந்த எரிச்சலும் கோபமும் வரவழைக்கக்கூடிய செய்திகளாகவே இருந்தன.//

ஏண்டா, ஒன் கோவணத்த வித்து எதாச்சும் இன்வெஸ்ட் பண்ணினயா?

//சரி. படம் எப்படி இருக்கிறது?//

எல்லாருக்கும் பிடிச்சிருக்கு. எல்லா வெர்சனுமே ரிக்கார்ட். ஆதாரம் வேணுமா? எல்லார் விமர்சனமும் படிச்சாச்சு. படமும் பாத்தாச்சு. இப்ப என்னாங்ற?


//இதற்கு விடை, மிகவும் எளிது. சுறா எப்படி இருந்தது? பெண் சிங்கம் எப்படி இருந்தது? குட்டிப்பிசாசு எப்படி இருந்தது? இவற்றையெல்லாம், ஒரு திரைப்படம் என்று மதித்து, அதற்கு விமர்சனம் எழுதுவோமா?//

ங்கொய்யால இதெல்லாம் நீ பாத்திட்டயா? அப்ப நட்டு கழண்ட கேசுதான்.

//அதே தான் எந்திரனுக்கும். இதையெல்லாம் ஒரு திரைப்படம் என்று மதித்து, நல்லபடியாக விமர்சனம் வேறு எழுதிவிட்டால், பின் நல்ல திரைப்படம் பார்க்கவே நமக்கு அருகதையில்லை என்றுதான் அர்த்தம்.//

பெரிய புடுங்கி இவரு. ஒரு 10 வருசம் சின்ஃபீல்ட்ல வேலை பாத்து, ஒரு 30 படம் டைரக்ட் செஞ்சு டயர்டாய்ட்டாரு. சொல்றாரு டீட்டெய்லு.பாக்குறதுக்கே இந்த பில்டப்புண்ணா, மவனே ஒரு வேள சினிமாவுல சான்ஸ் கீன்ஸ் கெடச்சது அவ்ளோதான்.

//இரண்டு வருடங்களாக, நூற்றைம்பது கோடி செலவில் ஒரு படத்தை எடுத்து வெளியிட்டிருக்கும் ஷங்கர், தனக்கும் ராம நாராயணனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று அழுத்தம் திருத்தமாக நிரூபித்திருக்கிறார். ஏனைய்யா.. இப்படிப்பட்ட ஒரு படத்தைத் தான் உங்களால் இரண்டு வருடங்களாக எடுக்க முடிந்ததா? இப்படித்தான் இனி படங்கள் எடுப்பேன் என்று நீங்கள் முடிவு செய்திருந்தால், இனி படங்களே நீங்கள் எடுக்கத் தேவையில்லை. எங்களை விட்டுவிடுங்கள்.//

அடிங் கொய்யால. புண்ணாக்குத்தலையா, நீ யார்ரா அத சொல்றதுக்கு. அதுவும் இவன நம்பி எடுக்கிறமாதி என்னாமா சீன் போட்றான். நீ நினைக்கிறமாதி எடுத்தா, டைரக்டர் சங்கரும் ப்ளாக்குதான் எழுதிகிட்டு இருக்கனும்.

//இந்தப் படத்தின் கடைசி அரைமணி நேரத்தில்தான் விஷயமே இருக்கிறது; தவறவே விட்டுவிடாதீர்கள்’ என்றெல்லாம் அட்வைஸ் மழை பொழிந்தனர் எனது சில அலுவலக நண்பர்கள். அப்புறம் பார்த்தால், படத்தின் மகா பெரிய அபத்தக்களஞ்சியமே அந்தக் கடைசிக் காட்சிகளில் தான் இருக்கிறது.//

வெண்ண இவரு. இவரு குடுக்குற 150 ரூவாலதான் சன் டீவி பன் டீவி ஆரம்பிக்கப் போறான். போலாம் ரைட்.

//ரஜினி, ஒரு காலத்தில் வில்லனாக நடித்தவர் என்பது உண்மைதான். அதற்காக, காலம் போன கடைசியில், அவருக்கு வில்லத்தனமான மேக்கப் செய்து, நடிக்க வைத்தால்? பகபகவென்று அவர் சிரிக்கும் காட்சிகளில், திரையரங்கமே சேர்ந்து சிரித்து, முழு நகைச்சுவையாக்கி விட்டனர்.//

அடே வெளங்காதவனே, இதுக்குப்பேருதான் வயித்தெரிச்சல்.யே.., டோமரு, நீ மெண்டலாடா. கேள்வியென்ன. மெண்டலேதான்.

//இந்தப் படத்தின் கிராஃபிக்ஸ், இன்னொரு சித்ரவதை. சைனீஸ், கொரியப்படங்களில் வருமே.. காட்ஸில்லா போல ஒரு பொம்மையைத் தயார் செய்து அதனைத் தெருக்களில் நடக்க வைத்திருப்பார்கள். அதே தான் இப்படத்திலும் இருக்கிறது. காதில் பூ சுற்றுவதற்கு ஒரு அளவு வேண்டாமா? அதிலும், சுற்றும் பூவை இப்படியா மொக்கைத்தனமாகச் சுற்றுவது? கடவுளே!//

லூசு, டப்பு அடிச்சிட்டு போயிருந்தயா?

//பிண்ணணி இசை, அடுத்த துன்பியல் சம்பவம். ரஹ்மான், தனது அஸிஸ்டெண்டுகளிடத்தில் வேலையை ஒப்புவித்துவிட்டு, எஸ்கேப் ஆகிவிட்டார் என்பது நன்றாகத் தெரிகிறது. போலவே, படத்தின் அத்தனை பாடல்களும் வலிந்து திணிக்கப்பட்டிருக்கின்றன. //

அடுத்தப்படத்துக்கு இந்த குருட்டு கபோதிக்குத்தான் மியூசிக் சான்ஸ் குடுக்கனும்.

//இடைவேளை முடிந்ததும், ரஜினி கொசுக்களிடம் பேசும் ஒரு காட்சி வருகிறது. இதுவரை, தமிழ் சினிமாவில் இதைப் போல் ஒரு முட்டாள்தனமான காட்சி, கிராஃபிக்ஸ் என்ற பெயரால் எடுக்கப்பட்டு வெளிவந்ததில்லை. படம் பார்ப்பவர்கள் அத்தனை பேரும் முட்டாள்கள்; ரஜினியின் பெயரை மட்டும் வைத்துக் கல்லா கட்டலாம் என்ற ஏகோபித்த முடிவில் ஷங்கர் படம் எடுத்திருக்கிறார் என்பதற்கு இந்தக் காட்சியே போதுமானது. டைட்டிலில், க்ராஃபிக்ஸ் உருவாக்கம் என்று ஷங்கரின் பெயர் வருகிறது. அடக்கொடுமையே !//

சங்கர் சார், இந்த பேமானி எதாவது முட்டு சந்துலதான் சுத்திகிட்டு இருக்கும், 3 இடியட்சுக்கு ஹெலப்புக்கு வெச்சுக்குங்க.


//துளிக்கூட கதையோ திரைக்கதையோ லாஜிக்கோ ஒரு விஷயமும் இல்லாமல் மொண்ணைத்தனமாக வெளிவந்திருக்கும் இந்தப் படத்தைப் பற்றி இதற்கு மேல் எழுத என்னால் முடியாது. இப்படத்தைப் பற்றி நாங்கள் இருவர் மட்டும் இப்படி நினைக்கவில்லை. எங்களுடன் வெளிவந்த மக்கள் அடித்த கமெண்டுகளில் இருந்து, அனைவருமே கடுப்பில் இருந்தனர் என்பது தெரியவந்தது. ஐநாக்ஸ், பாதி காலி. எங்களுக்கு முன் வரிசையில் அமர்ந்திருந்த கல்லூரி மாணவர் படை, மாறி மாறி அங்குமிங்கும் இருந்த காலி இடங்களில் அமர்ந்து கமெண்ட் அடித்தபடியே இப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தனர். //

ங்கொய்யால நிஜமாவே நீ தியேட்டருக்குதான் போனயா, இல்ல சுடுகாட்டுக்கு போனயா?

//ஷங்கருக்குப் படம் எடுக்க வராது என்பதை மற்றுமொரு முறை நிரூபித்துவிட்டார்.//

பாருங்க மக்களே, அதனால சங்கர் இனிமேல் படம் எப்படி எடுக்கனுமுன்னு "KK" அதாவது குருட்டு கபோதிகிட்ட கத்துக்குவார்.

// படம் முடிந்து வெளியே வருகையில், ஒன்று தோன்றியது. ரஜினியால், இப்படத்தில் வசனம் பேசுவதைத் தவிர வேறு எதையுமே முழுதாகச் செய்ய முடியவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது. பாவம்.. அந்த வயதானவரை அவர் போக்கில் விட்டுவிடுங்கள். அவர் பாட்டுக்கு இமயமலை ஏறித் தனது பொழுதைக் கழிக்கட்டும். அதை விட்டுவிட்டு, அவருக்கு இளமையான மேக்கப் போட்டு, படம் முழுக்க நகைச்சுவை நடிகர் இல்லாத குறையை ஏன் நிவர்த்தி செய்கிறீர்கள்? //

ஏண்டாக் கேனக்கூ* ( நீ சொன்ன வார்த்தடீ) இதுவரைக்கி ஒரு மசுரும் புடுங்காத நீயே இந்தளவுக்கு பேசுனா, சாதனை செய்றவங்கல்லாம் என்னடா பேசுறது.

//இந்தப் படம் வெற்றியடைந்தால், தமிழ்நாட்டில் இனி இதைப்போன்ற அதிகப் பொருட்செலவில் எடுக்கப்படும் படங்கள் ஓட அது வழிவகுக்கும் என்ற முட்டாள்தனமான ஒரு வாதத்தை இணையத்தில் படிக்க நேர்ந்தது. எனது கருத்து என்னவென்றால், இந்தப் படம் தோல்வியடைந்தால்தான், இனி இது போன்ற அபத்தங்களை மக்கள் புறக்கணிப்பார்கள் என்பதே. அதே போல், இந்தப் படத்தை ஆங்கிலப் படங்களுடன் ஒப்பிடும் ஒரு பஜனையும் இங்கே நடந்துகொண்டிருக்கிறது. மனசாட்சி என்பது கொஞ்சமாவது நமக்கு இருந்தால், இதெல்லாம் நடக்காது.//

அப்ப கண்டிப்பா இந்தப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டுதான்.

//எந்த விதமான சார்புநிலையும் இல்லாமல் இந்தப் பதிவை எழுதுகிறேன். எந்திரனின் பெயரால் தமிழ்நாட்டில் நடக்கும் அராஜகங்கள் சீக்கிரமே ஒரு முடிவுக்கு வந்தால் நன்றாக இருக்கும். //

நானும் எந்த சார்பும் இல்லாமல் ஒன் டவுசரக் கிழக்கிறேன்.

//பி.கு - தூங்கப்போவதால், பின்னூட்ட மாடரேஷன் போடுகிறேன். வரும் மங்களகரமான பின்னூட்டங்களை, காலையில் படிக்கிறேன்.//

ஏண்டா நீயும் நித்தியானந்தா சீடந்தான?

வர்ட்டா...?

Monday, October 4, 2010

எந்திரனும் ரசிகனும் கூடவே கொப்பளிக்கும் கோபமும்.

வணக்கம்.

எந்திரன் வெளீயீடு ஆரம்பத்திலிருந்தே பிடித்தோ பிடிக்காமலோ ஒரு ஆர்வம் தொத்திக்கொண்டதை விருப்பமில்லாவிட்டாலும் ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும். அதற்கான காரணத்தை யோசித்தால், சன் பிக்சர்ஸ்? நிச்சயமாக இல்லை. இதென்ன அவர்களின் முதல்படமா?

உலகழகி ஐஸ்வர்யா? இல்லையென்பது எல்லோர்க்கும் தெரியும்.

ஷங்கர்? அதற்கும் சான்ஸ் இல்லை. அவருக்கும் இது 10 வது படம்.

வேறென்ன காரணம். ஒன்லி ரீசன், ரஜினிகாந்த மட்டுமே.

அவரிடம் ஒரு தனி ஈர்ப்பு இருப்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். பலருக்கும் காரணம் பிடிபடாமல் போகவேதான் இன்றும் இந்த 65 வயதிலும் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்.

நானும் யோசிக்காத தருணங்கள் இல்லை.ஆளும் கருப்பு.அவரைவிட நன்றாக நடிப்போர் பலருண்டு. அப்படி இருக்க, எந்த விசயம் ரசிகனை இந்த பாடுபடுத்துகிறது?

ரஜினி ரசிகர்கள் பலரை பார்த்திருக்கிறேன்.பழகியிருக்கிறேன். நல்ல நட்புடனும் இருக்கின்றேன். மிகப் பெரிய பதவியிலிருக்கிறவர்களும், முதலாளிகளும், மற்றும் அடிநிலையில் இருப்பவர்களும் ஏராளம் உண்டு. அவர்களுக்கிடையே இருக்கும் ஒற்றுமை என்னவென்று யோசிக்கும் போது ஒரு சில சங்கதிகள் பிடிபட்டன.இது என் அவதானிப்பு மட்டுமே. கத்தி எடுத்துக்கொண்டு வரவேண்டாம்.

மிக முக்கியமாக, அவர்கள் அனைவருமே....,

1. பொதுநலவாதியாகத்தான் தெரிகிறார்கள்.

நான் பல நாடுகளுக்கு சென்றுவந்திருக்கிறேன். தமிழர்களை ஒருங்கிணைப்பு செய்வதில் ரஜினி ரசிகர்கள் மிக முக்கியமான இடத்திலிருக்கிறார்கள் என்றால் மிகையில்லை. விளையாட்டு, பொங்கல், தீபாவளி, புத்தாண்டு என பலவிசயங்களில் தமிழர்களை, ஏன் சில நாடுகளில் இந்தியர்களையே இணைக்கிறார்களென்றால் இது நிச்சயமாக மிகையில்லை.

அதில் அவர்கள் ஆனந்தக் கூத்தாடுகிறார்கள்.

2. தலைவன் மீதுள்ள பற்று.

எனக்குத் தெரிந்து கட்சிக்காரர்களைவிட, ரஜினி ரசிகர்களின் பற்று அளவிட முடியாது. ரஜினிக்கு ஒரு இகழ்ச்சியென்றால் அந்த நட்பைகூட தூக்கி எறிகிறார்கள். காரணம் கேக்காமலில்லை. கண்டிப்பாக நடிப்புக்காக இல்லை. அவரின் குணத்திற்காக. குணமென்றால் கூட இருந்துப் பார்த்தார்களா? இல்லை பழகினார்களா? பின்னே எப்படி..?

ரஜினியின் குணங்களாக ரசிகர்கள் வரையறுப்பது,

மனசாட்சிக்கு பயந்தவர். மனசறிந்து தவறு செய்யமாட்டார். உதவும் குணமுள்ளவர். வெளி வாழ்க்கையில் நடிக்காதவர். துரோகம் செய்யாதவர். நண்பர்களால்,நண்பர்களுக்காக, வாழ்பவர். மதிக்கத் தெரிந்தவர். நம்மைப் போல அடிமட்டத்திலிருந்து மேலே வந்தவர். மிக முக்கியமாக இறுதியாக சொன்ன காரணம் மட்டுமே எம்ஜியாருக்கு அடுத்து ரஜினியைக் கொண்டு வந்தது என எண்ணத் தோன்றுகிறது.

எம்ஜியாரும் ஏழை. ரஜினியும் ஏழை. உழைப்பால் உயர்ர்ந்தவர்கள்.

3. அனுக எளிதானவர்.

4. மிகப் பெரிய நிலையை அடைந்தும், குடும்ப வாழ்க்கையை சிதைக்காமல் இருப்பவர்கள்.

5. நம்மில் ஒருவரைப்போல தோற்றமளிப்பது.

இதற்க்கெல்லாம் அடுத்துதான் அவரின் நடிப்பு. அதனாலயே அவரின் பெரும்பாலான சாதாரணப்படங்களும் சாதனை படங்களாக மாற, அவரின் போட்டியாளர்களின் போற்றக்கூடியப்பட்ங்களும் பொட்டிக்குள்ளும் போகின்றது என எண்ணத்தோன்றுகிறது.

சரி எந்திரனுக்கு வருவோம்.

சும்மா சொல்லக்கூடாது. ரசிகர்களின் சந்தோசம் எனக்கும் ஒட்டிக்கொள்கிறது.எனக்கு ஒட்டிக்கொள்ளும் இந்த சந்தோசம் மற்ற சிலருக்கு கோபமாகிறது. ஏனென்றால் ரசிப்புக்கும், ரசிகனுக்கும் உள்ள கட்டமைப்பு புரியவில்லை. ஏதோ இப்படி ரசிகனாக இருப்பவர்கள் குடும்பத்தையும் நாட்டையும் குட்டிச்சுவராக்கிவிடுவார்கள் என்று புலம்புவார்கள்.அத்தோடு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த ரசனையயும், ரசிகர்களையும் முட்டாக் கூ* என்றிட்டு நாகரீகமா திட்டுவார்கள்.

ஆனால் மிக தீவிரமான ரசிகர்கள் தன் குடும்பத்தையும், நிர்வாகத்தையும் மிகத்திறம்பட, அதுவும் மிக நல்லவர்களாக, நாகரிகமானவர்களாக நடிப்பவர்களைவிட நடத்துவதை கண்கூடாக காண்கின்றேன்.

அப்போ, எல்லா ரஜினி ரசிகர்களும் திறமையானவர்களா? எப்படி எந்த ஒரு ரசிகர் மன்ற ஈடுபாட்டில் இல்லாத அனைவரும் வெற்றியாளர்களில்லையோ அதைப் போலவே ரஜினி ரசிகர்களும். அதாவது ரசிப்பதும் ரசிகனாக இருப்பதும் ஒருபோதும் அவனின் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிப்பதில்லை.

அதனால் அவனுக்கு நாம் அறிவுரை சொல்லும்முன், நாம் எங்கிருக்கிறோம், என்ன சாதனை செய்திருக்கிறோம், தெருவில் இறங்கி நடந்தால் இவர் சுரேஷ்கண்ணனா, இல்லை கருந்தேள் கணாயிரமா என்று அறியும் அள்விற்கு இருக்கிறோமா என்பதை யோசிப்பது சாலச்சிறந்தது. அதனிலும், பொத்தாம் பொதுவாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் முட்டாக் கூ* என்று எளிதுபடுத்திவிடும் தகுதி நமக்கு உள்ளதா என்பதையும் யோசிப்பது நல்லது.

ஏனென்றால் அந்த ரசிகர்களில், 2000 மாணவர்களை தன் சொந்த செலவில் படிக்க வைக்கும் கல்ராமனும், கிரிக்கெட் போட்டியில் சாதனை படைத்த முரளிதரனும் இருக்கக் கூடும். எனவே நாவடக்கம் முக்கியம்.

150 கோடி. இது மிகப் பெரிய உருத்தல். சென்னையின் மூத்திரச் சந்து தெரியவில்லையா என்றொரு கேள்வி.

நண்பர்களே, சினிமா ஒரு வியாபாரம். அரசியல் அல்ல. அதில் நடக்கும் ஒவ்வொன்றும் விளம்பரமே தவிற வயிரெறிய ஒன்றுமில்லை.

பிடித்தவர்கள், பார்க்கலாம். பிடிக்காதவர்கள் தவிர்க்கலம். தண்டனையில்லை.

ஆனால் ஒருபோதும் பிடித்தவர்களை அசிங்கமான சொற்களால் பேசக்கூடாது. அந்த தகுதி யாருக்கும் கொடுத்துவிடவில்லை. அப்படித் தெரிந்தோ தெரியாமலோ பொதுப்படுத்தி ரஜினி ரசிகர்களெல்லாம் முட்டாக் கூ* என்று சொல்ல ஒரு தகுதி வேண்டும்.

ஆம், என் கூடப் பிறந்த சகோதரனென்றால் என்னால் பொருமை காக்கமுடியும், இல்லையேல் உன்னைவிட மிகக் கேவலமாக பேச முடியுமென்று என்னிடம் கூறிய ரஜினி ரசிகரிடம் என்ன சொல்வதென்று தெரியவில்லை.

Thursday, July 15, 2010

ஆங்கிலம் அறிவா..? மொழியா..?

நான் அலுவலகம் வருவதற்கு முன்பாகவே, இத்தாலியச் சேர்ந்த ஒருவரும், ஸ்பெயினைச் சேர்ந்த இருவரும் எனக்காக் காத்துக்கொண்டு இருந்தனர்.அவர்கள் என் நண்பர்களும் கூட. நாங்கள் சேர்ந்தாலே அலுவலகம் அரட்டைக்கூடமாகிவிடும்.நேற்றும் அதுபோலவே.

பேச்சு பலவாக்கில் சுற்றி கடைசியாக மொழியப்பற்றி வந்தது. நான், தமிழ் 3000(!?) வருடங்களுக்கு முந்தைய இலக்கண சுத்தமான மொழியென்றேன்.அதற்கு ஸ்பெயின்காரர், ஸ்பானிஸ், இத்தாலி, ஃபிரென்ச் லத்தின் வழி மொழியென்றும், லத்தினுக்கான வயது சரியாகத் தெரியாது என்றும் ஆனால் மற்றைய மொழிகள் சுமார் 1000 வருடங்களுக்கான வரலாறு கொண்டது எனக்கூறினார்.

ஆகமொத்தம் நாங்கள் அனைவருமே அரைகுடமென்பது தெளிவாகத் தெரிந்தது.

அதன் பிறகு பேச்சு ஆங்கில மோகத்தைப் பற்றியும் அதன் ஊடுருவல் பற்றியும் திரும்பியது.
எங்கள் நாட்டில் அதுவும் தென்னிந்தியாவில் ஆங்கிலம் பேசுவதென்பது பெரிமைக்குரிய விசயமாக மக்கள் நினக்கிறார்கள்,அவர்களைப் பெரிய அறிவாளியாகப் பார்ப்பதுமுண்டு என்றேன்.அப்படியா? ஃப்ரான்ஸில் ஆங்கிலத்தில் பேசுவதை அசிங்கமாக நினைப்பார்கள், ஸ்பெயினிலும், இத்தாலியிலும் கண்டுகொள்ளமாட்டார்கள், ஜெர்மனியில் திட்டினாலும் திட்டுவார்கள் என்றனர். ஆச்சரியமா இருந்தது.

இங்கிலாந்துக்காரன் கத்திக்கூப்பிட்டால் கேக்கும் தூரத்தில் இருக்கும் இந்த நாடுகளே கண்டுகொள்ளாத ஆங்கிலத்தை எதற்காக நாம் கட்டிக்கொண்டு அழுகிறோம் என்பது எனக்குப் பிடிபடவில்லை.

உங்களுக்கு....?

Wednesday, July 14, 2010

வண்டியை விற்கும்போது கவனிக்க வேண்டியவை.

டாட்டா சுமோ வந்த புதுசு. ராஜுக்கும் பிசினஸ் சக்கபோடு போட, ப்ரீமியம் கட்டி புத்தம் புது சுமோ வாங்க்கினார்.மூன்று வருடங்கள்,கலக்கள் கனவுகளாக ஓடிவிட சுமோவும் தொய்வு கண்டது. பழய சுமோவை விற்றுவிட்டு,புதிய வண்டியை வாங்க திட்டமிட்டார். தனது உதவியாளரை நோக்கி " இப்ப இருக்கிற 8191 சுமோவ விக்க ஏற்பாடு பண்ணுப்பா","சரிங்க சார்".

உதவியாளரும் ஓடியாடி, திருநீர்மலையிலிருந்து ஒரு பார்ட்டியைப் பிடித்துவந்தார்."என்னப்பா ரெடி பேமண்ட் தானே"," சார்.., பார்ட்டி பெரிய ஆள், நகராட்சி கமிசனரோட வீட்டுக்காரரு", "அப்படியா, சந்தோசம்"

வித்தால் போதுமென்று அவசரத்தில், ஒரு சில வெத்து தாள்களில் எழுதி வாங்கிவிட்டு, வண்டியைக் கொடுத்துவிட்டு, பணத்தையும் பெற்றுக்கொண்டார்.

விற்ற மூன்றாவது நாள், இரவு பல்லாவரம் ஹோட்டலில் சாப்பிட்டுகொண்டு இருக்கும்போது, ராஜுக்குத் தெரிந்த ட்ரைவர், போதையில் அதே வேளையில் சன்னமாக " யின்னா சார், நீ குட்த்த வண்டியிலதான் தாம்பர குவாரி மேட்டர முடிச்சோம்", சுர்ரென்று இருந்தது அவருக்கு. மூன்று தினங்களுக்கு முன்னால் பேப்பரில் கொட்டை எழுத்தில் " தாம்பரம் அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை, கொலையாளியைப் பிடிக்க போலீஸ் தனிப்படை" மின்னல் வெட்டியது. " என்னா சார் பேயரைஞ்ச மாதி கீற", " யோ.., இன்னும் நேம் கூட சேஞ் பண்ணலயா", " அட, நீ ஒன்னு சார், நைட்டே இட்டாந்து, பார்ட் பார்ட்டா கடாசாச்சு சார், நீ ஒன்னிக்கிம் ஒர்ரிப் பண்ணிக்காத".

ராஜுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சுமோவில் வேறு கொட்டை எழுத்தில் ராஜு என்று எழுதியிருக்கும். 8191 சுலபமான எண் வேறு.

அன்று இரவு 11 மணி. குரோம்பேட்டை நியூ காலனி. காம்பவுண்ட் கேட் படபடவென்று தட்டப்பட்ட சத்தம் ஏசியத்தாண்டி ராஜுவின் காதில். மின்னல் வெட்டுகளாக பல நினைவுகள், ராஜுவின் மனதில். சாவித்துவாரத்தின் வழியாக பார்த்தால், முத்து முத்தாக நெற்றியில் வியர்வை. பத்துக்கும் மேற்ப்பட்ட போலிஸ் அதிகாரிகள். எல்லோர் கையிலும் துப்பாக்கி. காலகள் தள்ளாட ஆரம்பித்தது.

உடனிருப்பது அம்மா, தங்ககைகள் இருவரும். அம்மாவை எழுப்பி " அம்மா, வெளிய போலிஸ் நிக்குது, சத்தியமா நா எந்த தப்பும் பண்ணல. ஆனா இப்ப மாட்னா, கண்டிப்பா அடிப் பின்னிடுவாங்க, அதனால பிஸ்னஸ் விசயமா நா வெளியப்போய்ட்டதா சொல்லிடுங்க, லாயர்கிட்ட பேசிட்டு காலையில முடிவெடுத்துக்கலாம்" என்று சொல்லிவிட்டு பாத்ரூமுக்குள் ராஜ் பதுங்கிக் கொள்ள, அம்மா கதவைத் திறந்தார்.

அம்மா கதவத் தொறக்கவும், ராஜுவின் கையிலிருந்த மொபைல் அலறவும் சரியாய் இருந்தது. என்ன செய்வதென்று ஒன்றும் புரியாமல், கிட்னி கலங்க,ஆறாவது அறிவின் ஆசுவாசத்தில் செகண்டுக்குள் மொபைலைக் கீழே வைத்து, ப்ளாஸ்டிக் வாலியைக் கவுத்து அதன் மேல் ராஜ் உக்கார சத்தம் மட்டுப்பட்டது.

பத்துக்கும் மேற்ப்பட்ட போலீஸ் ஆபிஸர்கள்.அவர்கள் தனிப்படையாம். அதாவது ஒரு DSP யின் கீழ் 10 சப் இன்ஸ்பெக்டர்கள்.நல்லவேளையாக ராஜுவின் நண்பரும் தாம்பரம் எஸ்.ஐ. ரூபனும் அதிலிருந்தது. "ராஜ் எங்கம்மா? தாம்பரம் கொலையில் அவர் இருக்கறத கன்பர்ம் ஆய்டுச்சு. அரெஸ்ட் செய்ய சொல்லிருக்காங்க","சார், எம்பையன் அப்படிப்பட்டவனில்ல,எங்கயோ தப்பு நடந்திருக்கு","வண்டி நம்பரப் பாத்தவங்க கன்பர்ம் செஞ்சுட்டாங்க, கார் பாஸ்புக்ல ஒங்க பையன் ஃபோட்டோ இருக்கு, அட்ரெஸ் இருக்கு, தப்ப முடியாதும்மா","அவன் கார வித்து 3 நாளாச்சே","யாருக்கு வித்தாருன்னு தெரியுமா","தெரியலீங்களே".

ஒரு வழியாக, ராஜுவின் உதவியாளருக்கு ஃபோன் போட்டு சில விவரங்களை வாங்கிக்கொண்டு,"CM அம்மா, ஹைதராபாத்லிருந்து நாளக்கி வர்றாங்க,அதுக்குள்ள அக்யூஸ்டப் பிடிக்கனுமுன்னு ஆர்டர். அதான் நாலு டீமாப் போட்டு தேடிகிட்டு இருக்கோம். ராஜுவ எனக்கு நல்லாத் தெரியும், இருந்தாலும் வந்தவுடனே எனக்கு ஃபோன் போடச் சொல்லுங்க"ன்னு ரூபன் சொல்ல, ராஜுவின் அம்மா தலையசைத்தார்.

இதற்கிடையில் ராஜுக்கு இன்னொரு ஃபோன் வர, ஒரே ரிங்கில் அட்டென் செய்து காதில் வைக்க,"சார், நம்ம ஆபீஸுக்கு போலிஸ் வந்து ஒங்களக் கேட்டு பிண்ணி எடுத்துட்டாங்க", "சரி சரி, இங்கயும் போலிஸிருக்கு,இனிமே ஃபோன் செய்யாத", "சரி சார்".

ஆக மொத்தம்,ஒரே நேரத்தில் ராஜுவத்தேடி எல்லா இடத்திலும் போலீஸ். நினைக்கவே ராஜுக்கு திக் திக்கென்று இருந்தது.

காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து, இரண்டு தங்கைகளையும் இரண்டு தெருவை கண்கானிக்க சொல்லிவிட்டு,குரோம்பேட்டை இரயில்வே ஸ்டேசனுக்கு திக்திகுடன் நடந்தார்.அங்கிருந்து திரிசூலம் ஸ்டேசனில் இறங்கி,ஏர்போர்ட்டிற்கும் ரயிவேசன் ஸ்டேசனிற்கும் இடையே இருக்கும் பாதாள நடைபாதையில் காலை 4.30 மணியிலிருந்து 9 மணிவரை நடந்து கொண்டு இருந்தார்.

சரியாக 9 மணிக்கு, தாம்பரம் எஸ்.ஐ. ரூபனை போனில் அழைக்க,"ராஜ், டோண்ட் வொர்ரி, ட்ரைவரப் புடிச்சிட்டோம், எல்லாத்தையும் கக்கிட்டான். இருந்தாலும் ஒரு ரெண்டு நாளைக்கி வீட்ல இருக்க வேண்டாம்,இதுல மொத்தம் 4 டீம் வேலை செய்யுது. யார் வேணாலும் ஒங்களப்பிடிக்க வரலாம்,க்ளியராகுறவரைக்கும் மறைஞ்சே இருங்க","தேங்ஸ் சார்".

ஓகே மக்கள்ஸ், வண்டிய விக்கிம்போது தயவுசெஞ்சு நேம் ட்ரேன்ஸ்பெர் செய்ய மறக்காதீங்க.