A எனது நாட்குறிப்பு: கத்தி போயி வாலு வந்தது டும் டும் டும்..

Monday, November 1, 2010

கத்தி போயி வாலு வந்தது டும் டும் டும்..

பதிவர் ராஜனுக்கு திருமண வாழ்த்துக்கள். மிகத் தாமதமாகிவிட்டது. நம்மக்கும் வேலையிருக்கும்தானே. அதனால என்ன, லேட்டா சொன்னாலும் லேட்டஸ்ட்டா சொல்லிடுவோம்.

பதிவர் ராஜன் புரட்சிகரக் கருத்துக்களை யாருக்கும் பயப்படாமல் சொல்பவர் என்ற ஒரு எண்ணங்கள் பலருக்கும் உண்டு. ஆனால் எனக்கென்னமோ அவ்வளவாக ஈர்த்ததில்லை. தெளிவில்லா டாஸ்மாக் வார்ததையாகவே இருக்கும். அதிலும் நடுநிலை போல காட்டிக்கொண்டாலும் ஒரு பக்கம் மட்டும் சறுக்குவது தெளிவாகவே இருக்கும். அதிலும் தெரிந்தே ஜாதியை கையிலெடுத்து ஆடுபவர்க்கு வக்காலத்து வாங்கவில்லையென்றாலும் கேள்வி கேட்க வாய்ப்பிருந்தும் நழுவிய நேரம் பல.

அதே போல, பார்வதி அம்மாளின் மருத்துவ அனுமதி மறுப்புக்கு திருவாளர் சந்தோசம் காட்டும்போதும் தலையோ வாலோ ஆடவில்லை என்பதும் தெளிவு. கேட்டால் எல்லோரும் சொல்லும் விசய்த்தில் சொல்ல என்ன இருக்கிறது என பதிலாக வந்திருக்கலாம்.

இப்பொழுது ராஜன் திருமணம் நல்லதாக நடந்தேறியது.வாழ்த்துக்கள். ஆனால் அதில் சில கேள்விகள். ஆனா ஊனா என்றால் பகுத்தறிவு பகலவனாக காட்டும்போது வகைதொகையில்லா கேள்விகள் கேட்டதை நானே கண்டதுண்டு. ஆனால் இப்பொழுது அந்த பகுத்தறிவை தூக்கி பரணில் போட்டுவிட்டு, வினாயகர் போட்டோ, தாலி, நல்ல நேரம்,மந்திரம் ஓதுதல் என அத்துனையும் கடைபிடிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இருக்கட்டும். மனைவியின் நம்பிக்கைக்கு மரியாதை கொடுப்பதை வரவேற்போம். மேலும் மாமனாரின் மனதை புண்படாதவாறு நடந்துகொண்ட ராஜனுக்கு வாழ்த்துக்கள்.

இப்பொழுது என் கேள்விகள்.

மனது என்பது உங்கள் உறவுகளுக்கு மட்டும்ந்தான் பட்டா போட்டிருக்கிறதா? அப்படியில்லை என்றால் கீழே இருக்கும் தங்கள் பதிவில் இருக்கும் வார்த்தைக்கு என்ன அர்த்தம்?

பிறைபார்த்தல் என்னும் பிற்ப்போக்குதனம் என்பதை பக்கம் பக்கமாக எழுதினார். ஏன் அந்த மார்க்கத்தை சேர்ந்தோர்க்கு மனமில்லையா? வலி இருக்காதா? நேற்று உங்கள் சொந்தங்களுக்காகப் பொறுத்துகொண்ட நீங்கள் மற்றவர்களுக்கு அனுசரித்துபோக வலிக்குமா?

என்னமோப் போங்க, மனுசனால எப்பயும் ஒரே மாதி இருக்கமுடியாதுதானே? மனுசப் பயலுகளே வேசத்துக்கு வேசம்போட்றவங்கெதானே.

1 comment:

Anonymous said...

ivar mamanar manam kashtapada koodadham, matrapadi aduthavan nambikkayai akkuveraaga kizhikkum bothu avan manasu enna padupatta enna? Rajan kalyanam panni komali aagivittar. nalla pathivu, vazhthukkal.

surya

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.