A எனது நாட்குறிப்பு: 2011

Saturday, April 30, 2011

பொங்கித் தீர்த்த வைகோ

தென் சூடானுக்குப் பிறகு தமிழ் ஈழம் தான்!



சிங்கள ராணுவத்தின் பிடியில் இருந்து, வழக்கறிஞர் கயல் என்ற அங்கயற்​


கண்ணியை மீட்டதற்காக, உயர் நீதிமன்ற தமிழ் இலக்கியப் பேரவை, கடந்த 26-ம் தேதி வைகோவுக்கு நன்றி பாராட்டும் விழா நடத்தியது. வழக்கறிஞர்கள் அறிவழகன், இராம.சிவசங்கர், காசிநாதபாரதி ஆகியோர் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஏற்பாடு செய்த இந்த கூட்டத்திற்கு, கட்சிகளைக் கடந்து 2,000-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய வழக்கறிஞர் ஜி.தேவதாஸ், ''பிரதமரை சந்திக்க என்னையும் டெல்லிக்கு அழைத்துச் சென்றார் வைகோ. அது அவசரப் பயணம். குறிப்பிட்ட நேரத்துக்குள் பிரதமர் இல்லம் போய்விட முடியுமா? எனத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே வந்தார். பெற்ற மகளைப் பறிகொடுத்தது போலப் பதைபதைத்தார். பிரதமரை வைகோ சந்தித்த பிறகு, இலங்கை அரசுக்கு நமது வெளியுறவுத் துறை அதிகாரிகள் நெருக்கடி கொடுத்தனர். அதற்குப் பிறகுதான், அங்கயற்கண்ணி விடுவிக்கப்பட்டார்...'' என விவரித்தார்.



அடுத்துப் பேசினார் அங்கயற்கண்ணி... ''எங்​களைக் கைது செய்ததுமே, வழக்கு போட்டு சிறையில் அடைக்கப்போவதாக மிரட்டி வந்தார்​கள் இலங்கை அதிகாரிகள். திடீரென அவர்கள் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. அன்றுதான் இங்கே, பிரதமரை வைகோ சந்தித்து இருக்கிறார்!'' என்று நெகிழ்ந்தார்.

இறுதியாக மைக் பிடித்தார் வைகோ. ''எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதை தமிழர்களின் நலனுக்காகப் பயன்படுத்துவேன். வழக்கறிஞர் அங்கயற்கண்ணி, சிங்கள ராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டார் என்ற செய்தி கேள்விப்​பட்டபோது, நான் தஞ்சாவூருக்கு காரில் சென்று​கொண்டு இருந்தேன். உடனே, பிரதமருக்கு போனில் தகவல் தெரிவித்தேன். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அன்றுதான் நான் அவரிடம் பேசினேன். காங்கிரஸ் கட்சியின் பிரதமராக எனக்கு அவரைப் பிடிக்காது. மன்மோகன்சிங் என்ற தனி மனிதராகப் பிடிக்கும். 'சிங்கள ராணுவம் பிடித்துவைத்து இருப்பது பாவலர் பெருஞ்சித்திரனார் என்ற தமிழ்ப் புலவரின் பேத்தியை. உடனே, அவர் விடுவிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், இதற்கான பின் விளைவுகளை மத்திய அரசு சந்தித்தே தீர வேண்டும். இது தொடர்பாக நான் உங்களை சந்திக்க வேண்டும். முடிந்தால், நேரம் ஒதுக்குங்கள்’ என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டேன். சிறிது நேரத்தில், 'மறுநாளே சந்திக்க வரலாம்...’ என, பிரதமர் அலுவலகத்தில் இருந்து தகவல் வந்தது. எனது ஆதங்கத்தை அவரிடம் நேரில் கொட்டினேன். உடனே நடவடிக்கை எடுத்தார்.

இதே மன்றத்தில்தான் ஈழத்தில் நடப்பது என்ன? என்று நான் பேசியதற்காக என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இலங்கையில் நடந்தது அப்பட்டமான மனித உரிமை மீறல் என ஐ.நா. குழு இன்று கூறியுள்ளது. ராஜபக்ஷேவும் அவரது கூட்டமும் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்.

நெஞ்சைப் பிழியவைக்கும் தகவல் ஒன்றை நான் கேள்விப்பட்டேன். ஈழத்தில் போர் நடந்தபோது, ஒரு வீட்டுக்​குள் புகுந்த சிங்கள ராணுவத்​தினர், அங்கிருந்த வயதான தாயையும் கற்பழித்துள்ளனர். பூப்பெய்தி சில நாட்களே ஆன 13 வயது சிறுமியையும் விடவில்லை. இதற்கெல்லாம் மன்னிப்பே கிடையாது. 25 லட்சம் அப்​பாவி​கள் பலியான தெற்கு சூடான் ஜூலை 1-ம் தேதி சுதந்திர தேசமாக, புதிய விடியலுடன் உதயமாகிறது. இந்த விடியல் ஈழத்திலும் நிகழும்.

ஈழப் போர் இன்னும் முடியவில்லை. அதை இயக்குவதற்கு தாய்த் தமிழகம் தயாராக இருக்க வேண்டும். மாவீரன் பிரபாகரன் தோன்ற வேண்டிய நேரத்தில் தோன்றி படையை வழி நடத்துவார். இந்த இயக்கம் இருக்கும் வரை... என் உயிர் ஓயும் வரை.. நான் பிறந்த இந்த மண்ணுக்கும், தமிழர்களுக்கும் என்னால் முடிந்த சேவைகளை செய்துகொண்டே இருப்பேன்...'' என்று சீறினார் வைகோ!

நன்றி-சூவி

ஒரு நல்ல தலைவனுக்கு நேரம் எப்போ கனியுமென்று தெரியவில்லை.

Friday, April 29, 2011

திமுக கூட்டணியே ஆட்சியமைக்கும்!-தலைகீழான ஹெட்லைன்ஸ் டுடே கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியே ஆட்சியமைக்கும்!-தலைகீழான ஹெட்லைன்ஸ் டுடே கருத்துக் கணிப்பு
சென்னை: தேர்தலுக்கு முன்புவரை 'அதிமுகதான் ஜெயிக்கும், ஜெ முதல்வராவார்' என கூறிய இந்தியா டுடே குழுமத்தின் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சி, இப்போது நிலைமை திமுகவுக்கே சாதகமாக உள்ளதாகக் கூறியுள்ளது.


ஹெட்லைன்ஸ் டுடேயும் ஓஆர்ஜி நிறுவனமும் இணைந்து தேர்தலுக்குப் பின் நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

மே 10ம் தேதி வரை கருத்துக் கணிப்பு வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்திருப்பதால், எக்ஸிட் போல் எனும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை நடத்தவில்லை என்றும், வாக்களித்த மக்களிடம் கருத்துக் கேட்டு அதன் அடிப்படையில் இந்த முடிவுகளை வெளியிட்டிருப்பதாகவும் ஹெட்லைன்ஸ் டுடே தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்த இரு தினங்களில் வாக்காளர்களைச் சந்தித்து இந்த கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளனர். 2009 நாடாளுமன்றத் தேர்தலை அடிப்படையாகக் கொண்டு இந்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது.

அதில், திமுக கூட்டணி 130 தொகுதிகள் வரை வெல்லும் என்றும் அதிமுக கூட்டணி 105 முதல் 120 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

திமுக மட்டும் தனியாக 90 தொகுதிகளுக்கு மேல் வெல்லும் வாய்ப்புள்ளதாகவும் இதில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து ஹெட்லைன்ஸ் டுடே கூறியிருப்பதாவது:

"இந்தத் தேர்தலில் ஜெயித்து முதல்வராவது அம்மாவா, கலைஞரா? இதை அதிகாரப்பூர்வமாகத் தெரிந்து கொள்ள இன்னும் 15 நாட்கள் உள்ளன. ஆனால், இந்தியா டுடே- ஓஆர்ஜி இணைந்து மேற்கொண்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் திமுகவின் கையே ஓங்கியிருப்பது தெரியவந்துள்ளது. அதிமுக ஆட்சியமைக்க வாய்ப்பில்லை என்பதும் தெரிகிறது.

தேர்தலுக்கு கடைசி பதினைந்து நாளில், அதிமுகவை விட சிறப்பாக தேர்தல் பணியாற்றியதோடு, மக்களின் வாக்குகளைக் கவரும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டுள்ளது திமுக.

இதன் விளைவு, இந்தத் தேர்தலில் 115 முதல் 130 தொகுதிகள் வரை திமுக கூட்டணிக்கே கிடைக்க வாய்ப்புள்ளது. அதிமுக அணி 105 முதல் 120 தொகுதிகள் வரை பெறக்கூடும். கடந்த தேர்தலை விட 33 முதல் 48 வரையிலான தொகுதிகளை திமுக இழந்தாலும், ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் என்பது உறுதியாகியுள்ளது.

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அணி, 36 முதல் 51 தொகுதிகள் வரை கூடுதலாகப் பெற்றாலும் ஆட்சியமைக்கும் வாய்ப்பில்லை.

இந்தத் தேர்தலில் சுவாரஸ்மான விஷயம், தேர்தலுக்கு முன்பு எடுத்த கருத்துக் கணிப்பில் 45 சதவீதம் பேர் திமுகவுக்கு ஆதரவாகப் பேசினார்கள். ஆனால் தேர்தலுக்குப் பின் கருத்துக் கணிப்பு நடத்தியபோது, 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் திமுகவுக்கே வாக்களித்ததாய் கூறியுள்ளனர்.

கிராமப் புறங்களில் 2ஜி, தமிழ் ஈழப் பிரச்சினைகள் எடுபடவில்லை. அங்கே அந்த மக்களின் தேவைகளை யார் சரியான முறையில் நிறைவேற்றினார்கள், நிறைவேற்றுவார்கள் என்பதே பிரதான பிரச்சனையாக இருப்பது இப்போது புரிகிறது. கிராமப் பகுதிகளில் திமுகவுக்கு பெரும் ஆதரவு நிலவுகிறது. அங்கு திமுக 5 சதவீதம் அதிகமாக வாக்குகளைப் பெறும்.

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை, மொத்தத்தில் திமுக அணி 3 சதவீத வாக்குகளை கூடுதலாகப் பெறும் வாய்ப்புள்ளது. அதிமுகவுக்கு 7 சதவீத வாக்குகள் கூடுதலாகக் கிடைத்தாலும், கூட்டணி பலமின்மை அவருக்கு பாதகமாக உள்ளது. வைகோவை அவர் கடைசி நேரத்தில் இழந்திருக்கக் கூடாது. குறிப்பாக கடைசி நேரத்தில் அவரை புண்படுத்தி வெளியேற்றியது அதிமுகவுக்கு பெரிய பின்னடைவு. வைகோ இருந்திருந்தால் 3 சதவீத கூடுதல் வாக்குகள் கிடைத்திருக்கும். அது கதையையே மாற்றியிருக்கும்.

இதுவே இந்தத் தேர்தலில் ஆட்சியை மீண்டும் திமுகவிடம் ஒப்படைக்கப் போதுமானதாக உள்ளது.

முன்பை விட அதிக தொகுதிகளைப் பெற்றாலும், அதிமுக எதிர்க்கட்சி வரிசையிலேயே உட்கார வேண்டிய நிலைதான் அடுத்த 5 ஆண்டுகளும்.

thanks/thatstamil

Wednesday, April 27, 2011

தமிழினக் காவலர்கள் எங்கேப்பா?

தீண்டாமையின் பிடியில் சிக்கிய பள்ளி மாணவர்கள்: தினமும் ஒன்பது கி.மீ., நடந்து செல்லும் அவலம்


டி.என்.பாளையம்:தீண்டாமை கொடுமையால் அருகிலுள்ள பள்ளியில் பயில முடியாமல், 4.5 கி.மீ., தொலைவில் உள்ள பள்ளிக்கு செல்லும் பரிதாபமான நிலை, சத்தி அருகேயுள்ள கிராம குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளது.



சத்தி அருகே செண்பகப்புதூர் பஞ்சாயத்துக்குட்பட்டது குட்டை மேட்டூர் காலனி. இங்கு 100 குடும்பங்களை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அனைவருமே கூலித்தொழில் செய்து வரும் ஏழைகள்.இப்பகுதி மாணவர்கள் பள்ளிக்கல்வியை துவங்க வேண்டுமானால், 4.5 கி.மீ., தொலைவிலுள்ள நஞ்சப்பக்கவுண்டன் புதூர் நடுநிலைப்பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது.ஏன் இந்த கொடுமை; அருகில் ஏதும் பள்ளிகள் இல்லையா? என்ற கேள்வி எழுகிறது.காலனிக்கு அருகிலேயே 1.5 கி.மீ., தொலைவில் குண்டி பொம்மனூரில் யூனியன் நடுநிலைப் பள்ளி உள்ளது. ஆனால், அங்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த குழந்தைகளை சேர்க்க, ஜாதிக் கொடுமை குறுக்கே நிற்கிறது.



குண்டிபொம்மனூரில் பெரும்பான்மையாக வசிக்கும் மக்கள், தங்கள் ஊரில் உள்ள யூனியன் பள்ளியில், குட்டை மேட்டூர் காலனியை சேர்ந்த குழந்தைகள் கல்வி பயில, எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பல ஆண்டுகளாக தொடரும் இவர்களது எதிர்ப்பை சமாளிக்க முடியாமல், குட்டை மேட்டூர் காலனி மக்கள், வேறு வழியின்றி நஞ்சப்பக்கவுண்டன் புதூர் பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர். குழந்தைகளும் தினமும் ஒன்பது கி.மீ., பாத யாத்திரை செல்கின்றனர்.இப்பள்ளிக்கு செல்ல பிஞ்சு குழந்தைகள் நீண்ட தூரம் நடக்க வேண்டும் என்பதை விட, எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் சத்தி - கோவை தேசிய நெடுஞ்சாலை மற்றும் சத்தி - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையைக் கடப்பதுதான் பெரும் சோதனை.



அந்தளவுக்கு குண்டி பொம்மனூரில் தீண்டாமை கொடுமை நிலவுகிறது. இங்குள்ள நடுநிலைப்பள்ளியில் 70 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இவர்களில் 64 பேர் ஒரு சமூகத்தையும், ஆறு பேர் மற்றொரு சமூகத்தையும் சேர்ந்தவர்கள். தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எவரும் பல ஆண்டுகளாக பயின்றதில்லை என்பது இப்பள்ளியின் வரலாறு.



இப்பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், "குழந்தைகளை சேர்ப்பதில் நாங்கள் எந்த பாகுபாடும் பார்ப்பதில்லை. இங்கு நிலவும் எதிர்ப்பால், குட்டைமேட்டூர் காலனி மக்கள் இங்கு குழந்தைகளை சேர்ப்பதை நிறுத்திக் கொண்டனர்' என்றனர்.தங்கள் குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றி வெளிப்படையாக கூறவும், குட்டைமேட்டூர் காலனி மக்கள் தயங்குகின்றனர். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் 32 மாணவர்கள் இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளைக் கடந்து, நான்கரை கி.மீ., நடந்து, நஞ்சப்பகவுண்டன் புதூர் பள்ளிக்கு செல்வதை பார்க்க பரிதாபமாக உள்ளது.ஜாதிய ஒடுக்கு முறை பள்ளி செல்லும் மாணவர்களைக் கூட விட்டு வைக்கவில்லை என்பது வேதனைக்குரியது.


***

இந்தக் கொடுமை எங்கே நடக்குது? குண்டி பொம்மனூர். பேரே நாத்தமடிக்கையில வேற என்னத்த சொல்ல.

ங்கொய்யால இத ஒருத்தனும் கேக்கமாட்டான். இது இன்னக்கி நேத்து இல்லடி. தலைமுறை தலைமுறையா நடக்குது.இந்த பரதேசி நாய்கள் இதைக் கேக்கமாட்டானுங்க. ஏன்னா...? பாவம் இவிங்களுக்கென்ன வெளிநாட்டு பணமா கெடக்கு? ஒன்னுமில்லாதவனுங்கதான.


உள்ளூர்ல வெலை போகாத மாட்டுக்கு வெளியூர் சந்தைக் கேக்குது.

ச்சீமா(ன்)னிடர்களே... கொஞ்சம் இத்தயும் யோசிங்கப்பா.

Thursday, April 14, 2011

தேவகோட்டையில் சாத்தான்!







கண்மாய் கரையில் கற்பழித்து.. பீர் பாட்டிலை உடைத்து சங்கை அறுத்து...
தேர்தல் சத்தத்தை மீறி, பஞ்சவர்ணத்தின் அழுகுரல் சிவகங்கை


மாவட்டத்தைத் திடுக்கிடவைத்தது. நடந்த கொடூரம் கேட்டு அதிர்ந்து நிற்கிறார்கள், மக்கள்!

தேவகோட்டையில் இருந்து சுமார் 30 கிலோ மீட்​டரில் இருக்கிறது கீழஉச்சாணி. இந்தக் கிராமத்தின் ஆதி திராவிடர் காலனியைச் சேர்ந்தவர்கள் கண்ணன் - பஞ்சவர்ணம் தம்பதி. செங்கல் சூளையில் வேலை பார்த்தவர்களின் மகள் செல்வ பிரியா. அந்த 11 வயதுப் பூ இன்று இல்லை. காமக் கொடூரன் ஒருவனால் பாழ்படுத்தப்பட்டு உயிரையும் இழந்துவிட்​டாள்!

பித்துப் பிடித்தவர்போல் உட்கார்ந்திருந்த கண்ணன் நடந்த கொடுமையைத் தயக்கத்துடன் சொன்னார்.

''அடுத்தாப்புல இருக்கிற மேலஉச்சாணி கிராமத்துக்கு செங்கல் அறுக்குறதுக்காக நானும் என் பொஞ்சாதியும் இருபது நாளைக்கு முந்தி போனோம். அங்க இருந்து இங்க வந்து போறதுக்கு சிரமமா இருந்ததால, சூளைக்குப் பக்கத்துலயே ஒரு குடிசையைப் போட்டு குடும்பத்தோட தங்கிட்டோம். இந்த வீட்டுல எங்க ஆத்தா மாத்திரம் இருந்துச்சு. அந்த கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமியும் ராஜேந்திரனும் அடிக்கடி சூளைக்குப் பக்கம் உக்காந்து தண்ணியடிப்பாங்க. போதையில எங்கிட்ட ஏதாச்சும் பேசி வம்பு பண்ணுவாங்க. நான் அதைப் பெருசா எடுத்துக்கலை.

அஞ்சு நாளைக்கு முன்னாடி ராத்திரி நானும் என் பொஞ்சாதியும் வீட்டுக்குள்ள படுத்து இருந்தப்ப வேலுச்சாமி குடிபோதையில எங்க வீட்டுக்குள்ள புகுந்துட்டான். அவனப் புடிச்சு வெளிய தள்ளி, 'இந்த வேலை எல்லாம் எங்க கிட்ட வேணாம். அப்புறம் மானம் மருவாதி இருக்காது’ன்னு திட்டிட்டேன். அவங்க சாதிக்காரரான எங்க முதலாளிகிட்டேயும் இதைச் சொன்னேன். அவரும் கண்டிச்சார். பஞ்சவர்ணத்துகிட்ட வம்பு பண்ணுவான்னு நினைச்சேன். ஆனா, அந்தப் பாவி எம் புள்ளய...'' என்று மேலே சொல்ல முடியாமல் மயங்கினார். அவரை ஆறுதல்படுத்திவிட்டுத் தொடர்ந்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேவகோட்டை ஒன்றிய துணைச் செயலாளர் ரத்தினம்.



''அன்னிக்கு ஸ்கூல் விட்டு வந்ததும், அப்பத்தாவுக்கு ராத்திரி சோறு குடுக்குறதுக்காக செங்கல் சூளையில இருந்து கௌம்பி இருக்கா செல்வ பிரியா. தூக்குச் சட்டியோட கிளம்புன புள்ள, மறுபடியும் செங்கல் சூளைக்குப் போய்ச் சேரலை. கண்ணன் தேடிப் போயிருக்கார். எங்க தேடியும் புள்ளையைக் காணோம். என்னாச்சோ... ஏதாச்சோன்னு ராத்திரியில் இருந்து தேடி இருக்காங்க. பொழுது விடிஞ்சப்ப, சூளைக்குப் பக்கத்துல இருக்​கிற கண்மாய்க்குள்ள செல்வ ​பிரியா பொணமாக் கிடந்ததைப் பார்த்தாங்க. பீர் பாட்டிலை உடைச்சு சங்கை அறுத்த பாவிங்க, அதுக்கு முந்தி அந்தப் பச்ச மண்ணை கண்மாய் கரையில போட்டு நாசம் பண்ணி இருக்காங்க. தப்பிக்கிறதுக்காக கண்மாய்க் கரையில இருந்த புல்லை எல்லாம் பிடிச்சுப் பிறாண்டி இருக்கு அந்தப் புள்ள. கொலையைப் பண்ணிட்டு பொணத்தை கண்மாய் சகதிக்குள்ள அமுக்கிவெச்சுட்​டாங்க.

புள்ளையைக் காணோம்னு கண்ணன் தேடுனப்ப, வேலுச்சாமியும் ராஜேந்திரனும் சேர்ந்து தேடுற மாதிரி நடிச்சிருக்காங்க. உடம்பு கிடைச்சப்பவும் பரிதாபமா நின்னுக்கிட்டு இருந்தாங்க. போலீஸ் மோப்ப நாய் விறுவிறுன்னு ஓடிப் போயி வேலுச்சாமி வீட்டுல படுத்துக்கிச்சு. உடனே வேலுச்சாமி, ராஜேந்திரன், பிரபாகர்னு மூணு பேரை போலீஸ் தூக்கிட்டுப் போயிட்டாங்க...'' என்றார் வேதனையாக.

தொடர்ந்து பேசிய ஏ.ஐ.ஒய்.எஃப்-பின் முன்னாள் மாவட்டச் செயலாளர் எம்.கே.பாண்டியன், ''சாப்​பாடு குடுத்துட்டுப் போன செல்வபிரியா, ராஜேந்தி​ரனோட சைக்கிளில் போனதைப் பார்த்து இருக்​காங்க. ஆக, இவங்க ரெண்டு பேரும்தான் கூட்டுச் சேர்ந்து அந்தப் புள்ளய நாசம் பண்ணிக் கொன்னு இருக்காங்க. இவங்களுக்கு உடந்தையா பிரபாகரன்கிற பையனும் இருந்திருக்கான். ஆனா, வேலுச்சாமியை மட்டும் வழக்கில் சேர்க்கப் பாக்குறாங்க. எங்களுக்கு சரியான நியாயம் கிடைக்​கணும்!'' என்றார்.

வேலுச்சாமியின் உறவி​னரான போஸ், ''வேலுச்சாமி தப்புச் செஞ்சிருந்தா, அவனை தூக்கில் போட்டாலும் எங்களுக்கு சம்மதம். ஆனா, கொலை செய்யுற அளவுக்கு அவனுக்குத் தைரியம் பத்தாது. அதனால உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்கணும்!'' என்றார்.

தேவகோட்டை டி.எஸ்.பி-யான கணேசன், ''பத்து நாளைக்கு முந்தியே அந்தப் பொண்ணைத் தனியா கூட்டிட்டுப் போயி சில்மிஷம் பண்ணி இருக்கான். அந்தச் சின்னப் பொண்ணுக்கு விஷயம் தெரிலை பாவம்! நேத்திக்கும் கண்மாய் கரையில வெச்சு எல்லை மீறவும் அலறிக்கிட்டு ஓடி வந்துருக்கா. விஷயத்தை வெளியில் சொல்லிடுவாங்கிற பயத்துல அவளை மடக்கிப் பிடிச்சு பீர் பாட்டிலை ஒடைச்சு சங்கை அறுத்துட்டான். இதுதான் நடந்திருக்கு. சந்தேகத்தின் பேரில் இன்னும் சிலரை விசாரித்தோம். ஆனா, அவங்களுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைன்னு தெரிய வந்ததால், அவங்களை ரிலீஸ் பண்ணிட்டோம். கொலை, கற்பழிப்பு, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை உள்ளிட்ட செக்ஷன்களில் வழக்கு பதிவு செய்து இருக்கிறோம்...'' என்றார்.

''இங்கதான் புள்ளையப் பொதைச்சோம்!'' என்று காலனி மக்கள் காட்டிய இடத்தில், செவ்வந்தி மாலை கசங்காமல் கிடந்தது. அவள் மட்டும் மண்ணுக்குள்!

ஜூவியில் வந்தது. நானும் ஜூவி படித்தேன். எனக்கென்னமோ இந்த செய்தி செவுளில் அடித்தது. வடநாட்டுக்காரன திருத்தனும் அடுத்த நாட்டுக்காரனத் திருத்தனுமுங்றதுவிட்டுட்டு தமிழ்நாட்டுகாரனுங்களத் திருத்தத்தான் நிரையத் தேவைப்படுதில்லையா?

மேலவளவு கீழவளவு பத்தி எழுத ஆளில்லை.
உத்தப்புரம் பிரமிடு பத்தி எழுத ஆளில்லை.
கீரிப்பட்டி,பாப்பாபட்டி சமத்துவம் பத்தி எழுத ஆளில்லை.
வெண்ணைங்க பாலிடிக்ஸ் பத்திமட்டும் எழுதவந்துட்டானுங்க, கொடி பிடிக்க.

அறிவுகெட்ட உள்ளூர்காரனும், வெளியூர்க்காரனும்.

Tuesday, April 12, 2011

ஜெயலலிதாவை தோற்கடிக்க பலக் காரணங்கள்.

வாங்க டுயூட்ஸ். என்னப் பொருத்து யார் வேணாலும் ஜெயிக்கலாம். ஆனால் ஜெயலலிதா மட்டும் ஜெயிக்கக் கூடாது. தமிழ்,தமிழன்,தமிழ்நாடு என அனைத்துக்கும் விரோதி இவர். சே.. சே.. அப்படியெல்லாம் இல்லேன்னு சொல்றவங்க ச்சோ.. ச்சோன்னுட்டு சோ’கிட்டயோ இல்ல சுப்ரமணிய சுவாமிகிட்டயோ கேட்டு டவுட்ட க்ளியர் செஞ்சுக்குங்க.

நீங்க பதிவுலகல இருந்து தெரிஞ்சுக்கனுமுன்னா ”எங்கே பிரா’மணன்” எழுதிய கில்லிதாண்டக் கேட்டுக்கங்க.

சரி.. காரணங்களுக்குப் போகலாமா?

1. என் மரியாதைக்கும் மட்டுக்கும் உரிய வைகோ,சீமான் போன்ற நிஜ தமிழ் உணர்வாளர்களையும், இணையவெளியில் மட்டும் வாள் சுழற்றும் கிஞ்சுத்தும் களப்பணியாற்றாத மாதிரி தமிழ் உணர்வாளர்களையும் பொடா’விலோ,தடா’விலோ வேலுருக்கு அனுப்பக் கூடாது என்ற நல்லெண்ணத்தால் ஜெயா தோற்கடிக்கப் பட வேண்டும்.

2. பட்டினிச் சாவு என்ற ஒன்றை மறந்திருக்கும் என் தொப்புள் கொடி உறவு தமிழ்நாட்டு மக்களுக்கு மறுபடியும் எலிக்கறியும், கஞ்சித் தொட்டியும் கொண்டு வரக் காரணாமாயிடக்கூடாது என்பதற்காகவும் ஜெயாவும் அவரின் குடும்ப அங்கமான சசியும் தோற்க்கடிக்கப்பட வேண்டும்.

3. சகோதரி சகோதரி என்று ஒரு பக்கம் பாசமும், மறுபக்கம் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து களப்பணியாற்றிய நேசமும் கொண்ட ஒரே சிங்கத் தமிழனை, கேவலம் ஆயிரம் கோடி ரூபாய்க்காகவும் ராஜபக்சேவின் கைக் கூலிகளான இந்து ராம்,தினமலர்,தினமணி, மற்றும் அறிவிளி சோவுக்காகவும் தூக்கி எறிந்த நம்பிக்கை துரோகத்துக்காகவும் ஜெயாவும் அவர் குடும்பமும் தோற்கடிக்கப்பட வேண்டும்.

4.ஆசிட் வீசும் கலாச்சாரம் ஒழிந்து போக ஜெயாவும் அவரின் குடும்ப உறுப்பினர்களும் தோற்கடிக்கப்பட வேண்டும்.

5. அரசு ஊழியர்களை ஒடுக்க எஸ்மா,டெஸ்மா மீண்டும் வராமல் தடுக்க ஜெயாவும் அவர் குடும்பமும் தோற்கடிக்கப்பட வேண்டும்.

6. மிகவும் கீழ்தரமாக வயசான கவர்னர் சென்னாரெட்டி மீது தவறாக நடக்கப் பார்த்தார் என்று எந்தக் கூச்ச நாச்சமில்லாமல் சொன்னவர் எதையும் செய்வார் என்பதால் ஜெயாவும் அவரின் அருமை சசியும் தோற்க்கடிக்கப்பட வென்ண்டும்.

7.தன் மேல் கூறப்படும் எதிர்ப்புகளை சமாளிக்க திராணியில்லாமல் விமான நிலையத்தில் வைத்தே அதுவும் பெண்களைக் கொண்டே மட்டமான செய்கைகளால் பரபரப்பாகிய ஜெயாவும் சசியும் தோற்க்கடிக்கப்பட வேண்டும்.

8.தமிழ் நாட்டின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு எந்த ஒரு திட்டமும் தீட்டாமல், எந்த ஒரு தொழில் வளர்ச்சிக்கும் வித்திடாமல் அனைவரையும் காலில் விழவைத்து தமிழனை தலைகுனிய வைத்த ஜெயாவும் சசியும் தோற்கடிக்கப்பட வேண்டும்.

9.கோயில்களுக்கு யானை வழங்கி தமிழனை கி.மு’க்கு அழைத்து செல்லும் இந்த ஜெயாவும், சசியும் மண்ணை கவ்வச் செய்ய வேண்டும்.

10. கடந்த 5 வருடம் ஒரு ஆக்கம் சிறந்த எதிர்க் கட்சியாக இல்லாமல் கொட நாட்டில் ஓய்வெடுத்த ஜெயாவும் சசியும் தமிழ்நாட்டை விட்டே விரட்டப்பட வேண்டும்.

11.இனியொரு வளர்ப்பு மகன் திருமணத்தைக் காணும் தெம்பு இல்லாததால் ஜெயாவும் சசியும் தோற்க்கடிக்கப்பட வேண்டும்.

12. மறந்து போன கஞ்சா கேசு மறுபடியும் அறங்கேறாமல் இருக்க ஜெயாவும் சசியும் தோற்கடிக்கப்பட வேண்டும்.

13.முக்கியமாக ஒரு தமிழனை தமிழனே ஆளவாவதும் ஜெயாவும் சசியும் தோற்க்கடிப்பட வேண்டும்.

14. கலைஞர் கொண்டுவந்த நல்ல திட்டங்கள் தொடர்ந்து செயல்பட ஜெயாவும் சசியும் தோற்க்கடிக்கப்பட வேண்டும்.

15. மிக முக்கியமாக குறுக்குப்பட்டை கூட்டணியான இந்து ராம்,தினமலர்,தினமணி,சோ தோற்கடிக்கப்பட்டால்தான் தமிழனுக்கு அங்கீகாரம் கிடைக்க போராட முடியும். மேலே சொன்ன சனியன்கள் சேர்ந்தால் எந்த காலத்திலும் தமிழின விரோதிகளை வீழ்த்தமுழியாது. அதற்காகவாவதும் இந்த ஜெயாவும்,சசியும் தோற்கடிக்கப்பட வேண்டும்.


சிந்தியுங்கள் மக்களே.
மீண்டும் மூனுசதவீத
மினுக்கிகள் ஆள வேண்டுமா?

ஒத்த ரூவா அரிசியும்
ஓடி வரும் நூத்தியெட்டும்
கலைஞர் காப்பீடும்
கடன் தீர்ந்த விவசாயிம்
காரைவீட்டு கோவிந்தனும்
ரெண்டு ஏக்கர் கரிசலும்
காப்பாத்தும் கலைஞரை.

Monday, April 11, 2011

நக்கீரன் கருத்துக் கணிப்பு. ஜெயலலிதாவும் சோ’வும் கலக்கம்.

திமுக கூட்டணிக்கு 140-அதிமுக கூட்டணிக்கு 94 இடங்கள்:

சென்னை: நக்கீரன் இதழ் நடத்தியுள்ள இறுதிக் கட்ட கருத்துக் கணிப்பின்படி திமுக கூட்டணி 140 தொகுதிகளும், அதிமுக கூட்டணி 94 இடங்களிலும் வெற்றி பெரும் என்று தெரியவந்துள்ளது.


நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் மார்ச் 10, 11, 12, 13 ஆகிய நாட்களில் நக்கீரன் முதல் கட்ட கருத்துக் கணிப்பு நடத்தியது.

அப்போது அதிமுக கூட்டணியில் மதிமுக இருந்தது. திமுக-அதிமுகவின் இலவசங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கைகள் வெளியாகவில்லை. ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 5 பேர் வீதம் 234 தொகுதிகளில் 1,170 பேர் களமிறங்கி இந்த மெகா சர்வேயை நடத்தினர்.

ஒரு தொகுதிக்கு 400 வாக்காளர்கள் என்ற அடிப்படையில் ஆண், பெண்களிடம் சரிபாதியாக, படித்தவர்கள், பாமரர், கிராமத்தினர், நகர்ப்புறத்தினர், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவோர், சொந்தத் தொழில் செய்வோர், மாணவர்கள், வீட்டுவேலை செய்வோர், இல்லத்தரசிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர், வியபாரம் செய்வோர், சொந்த விவசாயம் செய்வோர், விவசாயக் கூலிகள், கூலி வேலை செய்வோர், உயர் நிலை பணியாளர்கள், வேலையில்லாதோர் என அனைத்துத் தரப்பினரிடமும் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

தொகுதிக்கு 400 பேரை ஆண்கள், பெண்கள் சரிபாதி அளவிலும், வயதளவில் 18-25, 25-40, 40-55, 55க்கு மேற்பட்டோர் என்று பிரித்தும் தேர்வு செய்து கருத்துக் கணிப்பை நக்கீரன் நடத்தியது.

அதிலும் முற்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மத வழி சிறுபான்மையினர் என அந்ததந்தப் பகுதியில் அவரவர் எண்ணிக்கைக்கு ஏற்ற விகிதாச்சாரப்படி வாக்காளர்களை அடையாளம் கண்டு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

அந்தக் கருத்துக் கணிப்பின்படி திமுக கூட்டணி 146 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 80 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளதும், 8 தொகுதிகளில் நிலைமையை கணிக்க முடியாத அளவுக்கு இரு கட்சிகளும் சம பலத்தில் உள்ளதும் தெரியவந்தது.

அதே நேரத்தில் பெரும்பாலான தொகுதிகளில் இரு கட்சிகளும் ஒன்று அல்லது இரண்டு சதவீத வாக்கு வித்தியாசத்தில் தான் ஒருவரைவிட ஒருவர் முன்னணியில் இருந்ததும் தெரியவந்தது.

இந் நிலையில் அதிமுக கூட்டணியை விட்டு மதிமுக வெளியேறியது. மேலும் திமுக, அதிமுக ஆகியவை போட்டி போட்டுக் கொண்டு தங்களது இலவசங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டன. இதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களையும் அறிவித்து பிரச்சாரத்தையும் தொடங்கின.

நக்கீரன் 2வது கட்ட கருத்துக் கணிப்பு:

இந் நிலையில் நக்கீரன் 234 தொகுதிகளிலும் தனது 2வது கட்ட கருத்துக் கணிப்பை நடத்தியது.

திமுக கூட்டண் 140-அதிமுக கூட்டணி 94:

இதன் விவரங்களை கடந்த 3 இதழ்களில் நக்கீரன் வெளியிட்டது. அதன்படி, திமுக கூட்டணிக்கு மொத்தம் 140 இடங்களும் அதிமுக கூட்டணிக்கு 94 இடங்களும் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

திமுகவுக்கு 90 இடங்கள்:

திமுக கூட்டணியில் திமுகவுக்கு 90 இடங்களும், காங்கிரசுக்கு 24 இடங்களும், பாமகவுக்கு 17 இடங்களும், விடுதலைச் சிறுத்தைகளுக்கு 4 இடங்களும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்குக்கு 3 இடங்களும், கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்துக்கு 1 இடமும், ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னணிக் கழகத்துக்கு 1 இடமும் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

இந்தக் கூட்டணிக்கு மொத்தத்தில் 140 இடங்கள் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

அதிமுகவுக்கு 74 இடங்கள்:

அதிமுக கூட்டணியில் அதிமுகவுக்கு 74 இடங்களும், தேமுதிகவுக்கு 8 இடங்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3 இடங்களும், மனித நேய மக்கள் கட்சிக்கு 1 இடமுநம், சமத்துவ மக்கள் கட்சிக்கு 1 இடமும், கொங்கு இளைஞர் பேரவைக்கு 1 இடமும் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

அதிமுக கூட்டணிக்கு 94 இடங்கள் கிடைக்கும் என்று நக்கீரன் கூறியுள்ளது.

திமுக வெற்றி உறுதி!

நன்றி:யுவகிருஷ்ணா
http://www.luckylookonline.com/
April 11, 2011


ஒரு வழியாக திமுகவின் வெற்றி உறுதியாகிவிட்டது. அதிமுக மெஜாரிட்டி பிடிக்கும். ஸ்வீப் அடிக்கும் என்று மிரட்டிக் கொண்டிருந்த ஊடகங்கள் ஒருவழியாக தரையில் கால் பதித்திருக்கின்றன. ‘அதிமுக வரும், ஆனா வராது’ என்று சொல்லத் தொடங்கியிருக்கின்றன. போஸ்ட் போல் சர்வேயில் தங்களது தவறுகளை திருத்திக் கொண்டு திமுக கூட்டணி ஆட்சியை தக்கவைக்கிறது என புதுக்கணிப்பு சொல்வார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை தேர்தல் கணிப்புக்கு மிகக்கடுமையாக உழைத்தாக வேண்டும். கிட்டத்தட்ட மூன்றரைக் கோடி வாக்காளர்களின் மனநிலையை 5000 பேரின் கருத்துகளை வைத்து பொதுமைப்படுத்திவிட முடியாது. சாம்ப்ளிங் அளவு குறைந்தபட்சம் மூன்றரை லட்சமாகவாவது இருந்தால்தான் ஓரளவுக்காவது உண்மைநிலையை நெருங்க முடியும். ஆயினும் இந்த எண்ணிக்கையே கூட துல்லியமான முடிவுகளை தரப் போதுமானதல்ல. லென்ஸ் ஆன் நியூஸ் எனும் இணையத்தளம் 12 தொகுதிகளில் ‘சர்வே’ செய்து, அதிமுக தனித்தே 144 இடங்களை கைப்பற்றும் என்று கணித்த காமெடியை எல்லாம் லீசில் விட்டுவிடலாம்.

நக்கீரன் இதழின் கருத்துக் கணிப்புகள் ஓரளவுக்கு துல்லியமாகவே இருக்கிறது. 98ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் திமுக-தமாகா கூட்டணி தோல்வியடையும் என்று நக்கீரன் சொன்னபோது யாரும் நம்பவேயில்லை. அதுபோலவே கடந்த 2009 பாராளுமன்றத் தேர்தலில் திமுக-காங் கூட்டணி 28 இடங்களை பிடிக்கும் என்றபோதும் யாரும் நம்பவில்லை. இம்முறை நக்கீரனின் கணிப்பே கூட மகிழ்ச்சிகரமாக பொய்த்துப்போக வாய்ப்பிருக்கிறது. 140 தொகுதிகள் வரை திமுக கூட்டணி பெறும் என்று நக்கீரன் கணிப்பதாக தெரிகிறது.

தேர்தல் பிரச்சாரம் நிறைவடையும் இன்றைய நிலையில் திமுக கூட்டணி 150 முதல் 160 இடங்கள் வரை வெற்றியடையும் என்பதாகவே நமக்கு தோன்றுகிறது.

ஜூனியர் விகடனின் நேற்றைய கணிப்பு திமுக கூட்டணிக்கு பெரிய மனதோடு, தாராளமாக 92 இடங்களை அளித்திருக்கிறது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஜூ.வி. திமுக கூட்டணிக்கு 7 இடங்களை தந்திருந்தது. ஆனால் தேர்தல் முடிவில் திமுக கூட்டணி 28 இடங்களை கைப்பற்ற முடிந்தது. எனவே ஜூ.வி.யின் இப்போதைய கணிப்பை வைத்து கணக்கிட்டுப் பார்த்தால் திமுக கூட்டணி ஸ்வீப் அடித்தாலும் (180க்கும் மேல்) ஆச்சரியப்பட ஏதுமில்லை.

எனவே ‘மாற்றம், மாற்றம்’ என்று முழங்கிக் கொண்டிருப்பவர்கள், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அல்லது 2014 வரைக்குமாவது கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். வேண்டுமானால் உங்களுக்காக ‘பாண்டிச்சேரி’ தற்காலிக நிவாரணத்தை அளிக்கலாம்.
தேர்தல் கணிப்புகளை வெளியிட்ட சில ஊடகங்களில், விட்டுப்போன அல்லது வேண்டுமென்றே விட்டுவிட்ட, முக்கியமான சில விஷயங்கள் உண்டு.

ஒன்று. அரசு ஊழியர்களுக்கு அதிமுக மீது இருக்கும் அச்சம். தமிழகத்தில் சுமார் எட்டு லட்சம் அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள். இவர்களையும் சேர்த்து, இவர்களது கட்டுப்பாட்டில் (அதாவது குடும்பம், நட்பு, சுற்றம்) தோராயமாக முப்பது லட்சம் வாக்குகள் இருக்கிறது.

இரண்டு. 21 லட்சம் குடும்பங்களுக்கு கான்க்ரீட் வீடு கட்டித்தரும் திட்டம். இத்திட்டத்தில் நடப்பாண்டில் மூன்று லட்சம் குடும்பங்கள் பயனடைந்திருக்கின்றன. மீதி 18 லட்சம் குடும்பங்களுக்கு படிப்படியாக அடுத்த ஐந்தாண்டுகள் என்று திமுக அரசால் வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. பயனாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, டோக்கனும் வழங்கப்பட்டிருக்கிறது. அதிமுக ஆட்சி அமைந்தால் நிச்சயம் இத்திட்டம் அரோகராதான் என்று டோக்கன் வாங்கியவர்களுக்கு தெரியும். கிட்டத்தட்ட 60 லட்சம் வாக்குகள் இத்திட்டத்தில் சம்பந்தப்பட்டிருப்பதை எந்த ஊடகமும் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

ஒரு ரூபாய் அரிசியில் தொடங்கி 108 ஆம்புலன்ஸ், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், மகளிருக்கு திருமண உதவித்திட்டம், கூட்டுறவுக் கடன் தள்ளுபடி, கைம்பெண்கள் மற்றும் வயதானோர் உதவித்தொகை, மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பொருளாதார ரீதியில் கைகொடுத்தது, விவசாயிகளுக்கு இலவச பம்ப்செட் என்று ஏராளமான நலத்திட்டங்களால் வாக்களிக்கவிருக்கும் ஒவ்வொரு வாக்காளரும் ஏதோ ஒருவகையில் நேரடியாகவே திமுக அரசால் இந்த ஆட்சிக் காலத்தில் பயன் பெற்றிருக்கிறார்கள். எனவே அதிமுக, தேமுதிக கட்சியினரைச் சேர்ந்தவர்கள் கூட திமுக கூட்டணிக்கு வாக்களிக்கும் வாய்ப்பு அதிகமிருப்பதாக யூகிக்கிறேன்.

நலத்திட்டங்கள் மட்டுமின்றி வளர்ச்சிப் பணிகளிலும் திமுக அரசு குறை வைக்கவில்லை. அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், மதுரை மற்றும் 3 நகரங்களில் கைத்தறி பூங்காக்கள், உலகத் தரம் வாய்ந்த நூலகம் சென்னையில், தலைமைச் செயலகம், சென்னைக்கு மெட்ரோ ரயில், தமிழகமெங்கும் பாலங்கங்கள், கான்க்ரீட் சாலைகள், புதிய அரசுக் கட்டிடங்கள், நீதிமன்றங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் என்று 95 சதவிகித தாலுகாக்கள் மற்றும் யூனியன்களில் ஏதேனும் ஒரு பெரிய கட்டமைப்பினை உருவாக்கியிருக்கிறது.

ஸ்பெக்ட்ரம், குடும்ப ஆதிக்கம், லொட்டு, லொசுக்குவெல்லாம் ஆட்சிக்கு எதிரான அலையை கிளப்ப போதுமானதல்ல. திமுகவுக்கு எதிரான விஷயங்கள் என்றால் மின்வெட்டு மற்றும் விலைவாசியாக மட்டுமே இருக்கக்கூடும். விஜய்-அஜித் ரசிகர்களின் எதிர்ப்பு திமுகவுக்கு அச்சுறுத்தல் என்றொரு மகா த்ராபையான காரணத்தை கூட ஒரு பத்திரிகை கண்டுபிடித்திருந்ததை வாசித்தேன். என்னத்தைச் சொல்ல?

திமுக இம்முறை வெல்லப்போவது அதிமுக கூட்டணியை மட்டுமல்ல. திமுகவுக்கு எதிராக அதிமுகவோடு கூட்டணி அமைத்திருக்கும் ஊடகங்கள் மற்றும் தேர்தல் கமிஷனையும் சேர்த்துதான்.

படித்தவர்கள் இம்முறை திமுகவை ஆதரிக்க மாட்டார்கள் என்றொரு கருத்தாக்கம் இருக்கிறது. நகர்ப்புறங்களில் திமுக வாஷ்-அவுட் என்றும் சொல்லி வருகிறார்கள். எழுதி வைத்துக் கொள்ளுங்கள். சென்னையில் இருக்கும் 16 தொகுதிகளில் 10 தொகுதிகளை திமுக கூட்டணி வெல்லப் போகிறது.

பூனை மட்டுமல்ல, யானை கண்ணை மூடிக்கொண்டாலும் கூட பூலோகம் இருண்டுவிடாது.
எழுதியவர் யுவகிருஷ்ணா at Monday, April 11, 2011

Friday, April 8, 2011

ஒரு அனானியின் அசத்தல் கமெண்ட்

கீழே நீங்கள் படிக்கப் போவது ஒரு அனானியின் கமெண்ட். ஒரு பதிவில் கண்டது. அதை அவர் பெயரிட்டே பதிந்திருக்கலாம். எனக்குப் பிடித்திருந்தது. உங்கள் பார்வைக்கு.

சீமான்! உங்கள் மீது அதிக மதிப்பு வைத்திருந்தேன். ஆனால் கடந்த சில நாட்களில் நீங்கள் செய்யும் காரியங்கள், என்னை மிக வேதனை படுத்தி விட்டது. நீங்கள் சில விசயங்களை யோசித்து பாருங்கள் :

1. தமிழகத்தில் LTTE கு எவ்வளவு ஆதரவு இருந்தது, அதை ஒழித்து ...கட்டியவள், இன்று நீங்கள் யாருகக வோட்டு கேட்கிறீர்களோ அந்த ஜெயா.

2. திமுக அரசு விடுதலைப்புலிகளுக்கு உதவியதற்காக,ஜெயா சுப்பிரமணி சுவாமியுடன் இணைந்து கலைஞர் அரசைக் கலைத்தார். அதற்கு தமிழக மக்கள் என்ன செய்திருக்க வேண்டும்? கலைஞர் அரசை திரும்பக் கொண்டு வந்தார்களா?

3. ஜெயா நடப்பு அரசியலை மிக மோசமாக்கினார் என்றால் மிகையல்ல.எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது, தமிழகத்தின் பொதுப்பிரச்சினைகளான காவிரி/முல்லை/ஈழம் ஆகியவற்றுக்கு கருணாநிதி ஆதரவே அளித்துள்ளார். ஆனால் ஜெயா அதிகாரத்திற்கு வந்த பிறகு,எந்த ஒரு பொது விசயத்திற்கும் இவர் கருணாநிதியுடன் ஒத்துப்போகவில்லை என்பதை உணர்கிறீரா? அதனால் தமிழகம் ரெண்டு பட்டதுதான் மிச்சம். மேலும் 1989 லிருந்து எந்த ஒரு பொது விடயத்திற்கும் இணைந்து போராடவில்லை. நன்றாக ஞாபகம் இருக்கிறது, விடுதலைப்புலிகளை ஆதரித்து எம்.ஜி.ஆர் நடத்திய பந்துக்கு கருணாநிதி முழு ஆதரவு அளித்தது. ஆனால் இந்த பெண் அனைத்தையும் கெடுத்துவிட்டார். இவரயா நீங்கள் ஆதரிக்கப் போகிறீர்?

4.ஸ்பெக்ட்ரம் விவகாரத்திற்கு, திமுக’வை வெளியேற்றுங்கள் நான் ஆதரவு தருகிறேன் என்று அவர் கூவியது இன்னும் என் காதில் ஒலிக்கிறது. உங்களுக்கு? மேலும் சில நாட்களுக்கு முன் கம்யூனிஸ்ட்டையும்,மற்ற கட்சிகளையும் காக்க வைத்தாரே எதற்கு? காங்கிரஸ் கூட்டணி தனக்கு கிடைக்காதா என்ற தாகத்தில்தானே.

5.இளங்கோவன் விஜயகாந்துக்கு லட்டு ஊட்டுன போது,விஜயகாந்த் முத்துக்குமார் பத்தி நினைத்து இருப்பாரா? அவரும் கடைசிவரை காங்கிரஸ்சுடன் கூட்டு வைக்க தானே துடித்தார். கூட்டணி முடிவகரவரை காங்கிரஸ் ஐ எதிர்த்து எதாவது பேசினாரா? ஈழத்திற்கு ஏதாவது குரல் குடுத்தாரா? அவருக்கு நீங்க சப்போர்ட் பண்ணித்தான் ஆகனுமா?

6. நல்லவர்கள் அரசியலுக்கு வரணும்னு விஜய்க்கு ஜால்ரா அடிச்சிங்களே, இந்த விஜய்
விஜய் ஏன் ராகுலை சந்தித்தார்? சந்திப்புக்கு பிறகு அப்பாவும் மகனும் சேர்ந்து ராகுலை புகழ்ந்து விட்ட அறிக்கைகளுக்கு பதில் என்ன? எல்லோரும் வெறுத்து ஒதுக்கிய அசினை மீண்டும் தன்னுடன் நடிக்க வைத்து வாழ்வு கொடுத்தது ஏன்?
எல்லாவற்றுக்கும் போராட்டம் மற்றும் அறிக்கை தரும் நீங்கள் இவற்றை எதிர்த்து ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. உண்மையில் எனக்கு கடைசியாக உங்கள் மீது கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. ஆனால் இன்றைக்கு விஜய்க்கு எல்லாம் சப்போர்ட் பண்ணிகுட்டு. இருப்பதைப் பார்த்தல் யாரையும் நம்ப முடியவில்லை.

7. ஜெயா தான் மீண்டும் வரணுமென்று துடிக்கும், நீங்கள் எல்லாம் மீண்டும் பட்டால்தான் தெரியும். LTTE ஒழிபதற்கு, ltte கு தமிழ்நாட்டில் இருந்த அதரவை அழித்ததற்கு முதல் கரணம் ஜெயா தான். வைகோவை துரத்திய பிறகாவது நீங்கள் நல்ல முடிவு எடுபிர்கள் என்று நம்பினேன். ஆனால் நீங்கள் விஜய் அளவுக்கு இறங்கி போகி விட்டிர்கள்.
இனி வுங்களை நம்பி ஒரு பயனும் இல்லை.

8. உண்மையில் தாமரை உங்களுக்கு கடிதம் எழுதிய போது அவர் மீது கோவ பட்டேன், ஆனால் இப்போது உணர்கிறேன் அவர் சொன்னது தான் சரி என்று.

அந்த அனானி நபரின் கமெண்ட் ஓவர்.

இது ஒரு நண்பரின் பதிவில் அனானி நண்பர் இட்ட கமெண்ட். அவருக்கெல்லாம் நல்ல நல்ல அனானி இருக்கிறார்கள். ஆனால் எனக்கு? ஏதோ எரிச்சலுக்கு என்னிடம் களிம்பு கேட்டு அழுதுகொண்டு இருக்கிறார்.

அனேகமாக இன்றிரவுக்குள் களிம்பு அனுப்பிவிடுவேன் என நம்புகிறேன்.

ஆறாவது முறையும் அவரே ஆள்வார்!

தலைவர் கலைஞரே தமிழகத்தின் முதல் அமைச்சர் நாற்காலியில் அமரப்போகிறார். இது காலத்தின் கட்டாயம்; தமிழகத்தின் எதிர் காலம்!

இன்றைக்குத் தலைவர்களாக வலம் வருபவர்களைப்போல, நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல கலைஞர். 'தமிழாய்ந்த பெருமகன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வருதல் வேண்டும்’ என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கனவை நிறைவேற்ற வந்தவர் கலைஞர். 'காலம் நமக்குத் தந்த கொடை கலைஞர். அவரது ஆட்சியை இன்னும் 10 ஆண்டுகளுக்குக் கண்ணும் கருத்துமாகப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்’ என்றார் பெரியார். 'என்னை அறிந்தவர்கள் இந்தக் கழகத்தில் நிறையப் பேர் உண்டு. ஆனால், முழுமையாக அறிந்தவர் தம்பி கருணாநிதி மட்டும்தான்!’ என்றார் அண்ணா. திராவிட இயக்கத்தின் தத்துவத்தை அறிமுகப்படுத்திய பெரியாரும், அதை நடைமுறைப்படுத்திய அண்ணாவும், கலை இலக்கியத் தளத்தில் கொண்டுசேர்த்த பாரதிதாசனும் பாராட்டிய பெருமை கலைஞருக்கு மட்டுமே உண்டு.

13 வயதில் திருவாரூர் வீதிகளில் கொடி பிடித்துக் களம் கண்டவர், 87 வயதில் இன்றும் தமிழ் இனத்துக்காக, நாட்டுக்காக வாதாடி வருகிறார்; போராடி வருகிறார். இதுவரை தங்களது மன சிம்மாசனத்தில் வைத்து வாழ்த்தி வந்த தமிழ்நாட்டு மக்கள், இம்முறையும் அதே இருக்கையில் அவரை அமர்த்தி அழகு பார்க்கக் காத்திருக்கிறார்கள்!

பேரறிஞர் அண்ணாவுக்குப் பிறகு 1969-ல் இருந்து ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த கலைஞர், தமிழகம் வளம் பெற எவ்வளவோ திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். பேருந்துகள் நாட்டுடைமை, அனைத்துக் கிராமங்களுக்கும் மின் இணைப்பு, குடிசை மாற்று வாரியம், குடிநீர் வடிகால் வசதிகள், கண்ணொளித் திட்டம், கம்யூனிஸ்ட்கள் ஆளும் மேற்கு வங்கத்தில்கூட செயல்படுத்தப்பட முடியாத கை ரிக்ஷா ஒழிப்பு, இந்தியாவுக்கே முன்னுதாரணமாகக் காவலர்கள் வாரியம், மே தினத்துக்கு ஊதியத்தோடு விடுமுறை, இந்தியாவிலேயே முதலாவது வேளாண்மைப் பல்கலைக்கழகம், மீனவர்களுக்கு இலவச வீட்டு வசதித் திட்டம், அநாதைச் சிறுவர்களுக்கு கருணை இல்லங்கள், சேலம் உருக்காலைத் திட்டம், நெய்வேலி இரண்டாவது சுரங்கம், சிப்காட் தொழில் வளாகங்கள், விவசாயத்துக்கு இந்தியாவிலேயே முதன் முதலாக இலவச மின்சாரம், பெண்களுக்கு சொத்துரிமை... என்று எத்தனையோ திட்டங்கள் கலைஞரின் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் அறிமுகமாகின.

ஆனால், 1991, 2001 என்ற இரண்டு முறை தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா பொறுப்புக்கு வந்தவுடன், தனது ஆட்சியை, எவ்வாறு மக்கள் விரோத ஆட்சியாக நடத்தினார் என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. அவருடைய நடவடிக்கைகளைத் திரும்பிப் பார்த்தால், ரண வேதனைகளே ஏற்படும். பாரதி குறிப்பிட்டவாறு 'பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்தான் அரசாளும்’ என்ற வரிகளே நினைவுக்கு வரும். ஜெயலலிதா ஆட்சியில் நடந்தவற்றை, தமிழக வாக்காளர்கள் இந்த நேரத்தில் எண்ணிப் பார்க்க வேண்டும்.

. உலகமே கண்ணீர் வடிக்கும் வகையில், தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்களை நடு இரவில் வீடு புகுந்து தாக்கிக் கைது செய்தது; இந்த நிகழ்வை குருவாயூர் கோயிலில் இருந்துகொண்டு ஜெயலலிதா செல்போனில் அகந்தையோடு ரசித்தார்; நினைவில் வாழும் முரசொலி மாறன், தளபதி, டி.ஆர்.பாலு ஆகியோர் தாக்குதலுக்கு உள்ளானது!

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஆளுநராக இருந்த சென்னா ரெட்டியின் கார் திண்டிவனம் அருகே தாக்கப்பட்டது; அவரைப்​​​​பற்றித் தரக் குறைவான விமர்சனங்களை ஜெயலலிதா செய்தார்.

மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், காரைக்குடி செல்லும் வழியில் அவரது கார் மறிக்கப்பட்டு, முட்டைகளை எறிந்து தாக்குதல் நடந்தது! பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீசப்பட்டது. ஜெயலலிதா அரசுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப் போகிறார் என்பதற்காக மூத்த வழக்கறிஞர்கள் விஜயன், சண்முகசுந்தரம் ஆகியோர் தாக்கப்பட்டனர்.

அவரது கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தூத்துக்குடி ரமேஷ், மதுராந்தகம் சொக்க​லிங்கம், உப்பிலியாபுரம் ரவிச்சந்திரன் தாக்கப்​பட்டனர். காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் சட்டமன்ற விடுதிக்குள்ளேயே தாக்கப்​பட்டார். இவை யாவும் ஜெயலலிதா ஆட்சியில் நடை​பெற்றன. ஜெயலலிதாவின் சாதனைகள் இவை மட்டும்தானா?

பொடா சட்டத்தின் கீழ் வைகோ, பழ.நெடுமாறன் போன்றவர்களைப் பகை உணர்வோடு சிறையில் அடைத்தவரும் இவரே. கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் மூன்று பேர் கொடூரமாக, பட்டப் பகலில் எரித்துக் கொல்லப்பட்டதற்கும் இவரது சுயநலம்தான் காரணம். மதுரையில் இளம் பெண் செரினா கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட மர்மம் இன்னமும் விலகவில்லை... என்று ஜெயலலிதாவின் அராஜக நடவடிக்கைகளை இன்னும் பட்டியல் போடலாம்!

கலைஞர் ஆட்சிக் காலம் சாதனைகளைக்​கொண்டது. ஜெயலலிதா காலம் வேதனைகளைக்​​கொண்டது.

தி.மு.க-வின் 2011 தேர்தல் அறிக்கைக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பும் பாராட்டும் கிடைத்து வருகிறது. இலவச கிரைண்டர், மிக்ஸி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, வயதானவர்களுக்கு இலவச பஸ் பாஸ் என்பவை உட்பட பல வாக்குறுதிகள் மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளன. அதைக் கண்டு பொறுக்க முடியாமல், அலறியடித்துக்கொண்டு தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை ஜெராக்ஸ் எடுத்து அ.தி.மு.க. வெளியிட்டுள்ளது. அதை நம்புவதற்கு மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல.

1991, 2001 சட்டமன்றத் தேர்தல்களில் அ.தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளில் பலவற்றைக் காற்றில் பறக்கவிட்டவர் ஜெயலலிதா. இன்று எங்களது அறிக்கையைப் பார்த்து காப்பி அடித்து தேர்தல் அறிக்கை வெளியிடுவதை நம்ப தமிழ் மக்கள் தயாராக இல்லை!

தலைவர் கலைஞர், இந்தியத் திருநாட்டின் அரசியல் களத்தில் 75 ஆண்டுகளுக்கு சொந்தக்காரர். தி.மு.க-வையும், தமிழகத்தையும் சோதனைக் காலத்தில் வழி நடத்தியவர். எப்போதும், எவரும் அவரை சந்திக்கலாம். ஆனால், ஜெயலலிதாவை அவரது கூட்டணிக் கட்சித் தலைவர்கள்கூட சந்திக்க முடியாது. எப்போதும் உழைக்கத் தயாராக இருக்கும் கலைஞர் வேண்டுமா, சதா ஓய்வெடுத்துக்கொண்டு இருக்கும் ஜெயலலிதா வேண்டுமா என்பது தமிழக மக்கள் முன் உள்ள கேள்வி.

தொலைநோக்குப் பார்வைகொண்ட தமிழ் மக்கள் கலைஞரையே தேர்ந்து எடுப்பார்கள்!

நன்றி:ஜூவி (நடு நிலையாம்)

Thursday, April 7, 2011

ஜெயாவின் அறிக்கை, பதிவர்களுக்கு இலவச இண்டெர்நெட்.

அன்புள்ள பதிவுலக குஞ்சா மணிகளே
பித்தத்தின் பித்தங்களே...

பெங்களூரிலிருந்து வரும்போதே என் தாய் சொன்னார், இந்த தமிழர்கள் செலக்டிவ் அம்னீசியாவால் பீடிக்கப்பட்டவர்கள்,தமிழ்நாட்டுக்காரனைத் தவிர வேறு யார் சொன்னாலும் என்ன சொன்னாலும் நம்புவார்கள்,கொஞ்சம் லட்சனமாக இருந்துவிட்டால் நாக்கை தொங்கப்போட்டு அலைவார்கள், இருக்குற எல்லாத்தையும் நமக்கு கொடுத்துவிடுவார்கள், அவ்வளவு ஏமாளிகள் என்றார். நான் நம்பவில்லை. அப்போ சின்ன வயது. அறியா வயது. மன்னித்துக்கொள்ளுங்கள்.

ஆனால் இன்று, ஒரு சாதாரண நடிகையாய், நடனக்காரியாய் இருந்தவளை இந்தளவுக்கு ஏற்றிவைத்தீர்களென்றால் என் தாய் சொன்னது உண்மை. சத்தியம்.

சும்மா கிடந்தவளை கொ.ப.செ’வாக ஆக்கி அழகு பார்த்த அந்த தானைத் தலைவனைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் ராஜீவ் காந்திக்கு எழுதி அசிங்கப் படுத்தியும், பித்தத்தின் பித்தமே அனைத்தையும் மறந்து தலைமை ஏற்க சொன்னதை எப்படி மறப்பேன்?

சவ ஊர்வலத்தில் கூட சேர்க்கவிடாக் கூட்டத்திலே, அத்தனை எதிர்ப்பையும் மீறி கட்சியை உடைத்து தலைமையேற்க்க வைத்த திருநாவுக்கரசு,கே.கே.எஸ்.எஸ்.ஆர்,எஸ்.டி.எஸ் இப்படி எல்லோரையும் விரட்டி வேட்டையாடியும் என் மேல் தீராத அன்பு வைத்திருக்கிற என் குருட்டு தமிழ் சமுதாயமே..என்ன செய்வேன்?

திடமான தலைமையானதும் ஒவ்வொரு மூத்தக்குடி தமிழனையும் காலில் விழ வைத்து நோகடித்ததையும் அழகென்று சொல்லும் என் தமிழ் மூச்சே.. அய்யகோ என்ன செய்வேன்?

ஈழம் ஈழம் என்று கூக்குரலிடும் என் பித்தத்தின் பித்தமே,”போரென்றால் பொது மக்களும் சாவத்தான் செய்வார்கெளென்று” என்று நான் சொன்னதை அழகாக மறந்தாயடா என் மடச் செல்லமே,

கூட்டணி ஆரம்பிக்கும் முன்னரேகூட நான் கூட்டணிக்காக காங்கிரசைக் கெஞ்சிக் கதறினதை மறந்து, என்னை நல்லவளென்று சொல்வதை எப்படியடா சொல்வது...?

அதுமட்டுமா, ஒரு வேளை நான் ஜெயித்துவிட்டால் மறுபடியும் காங்கிரசிடம் போகமாட்டேன் என்று திடமாக நம்புகிறாயே என் முட்டா பித்தத்தின் பித்தமே, நீதாண்டா என் வெல்லம்.

இதற்கு முன் நான் பத்து வருடம் ஆண்டதையும் அதில் காவிரி பிரச்சினையும் முடிக்கவில்லை, பெரியார் பிரச்சினையும் முடிக்கவில்லை என்பதையும் மறந்து இனிமேல் முடிப்பேன் என்பதை நம்புகிறாயே என் எலும்பின் எலும்பே.. எப்படியடா உன்னை மறப்பது?

வாஜ்பாயி,வைகோ என நம்பி வந்தவங்களை நட்டாற்றில் விடுவதில் வரலாறு படைத்த என்னை இன்னும் நம்புகிறாயே என் தமிழ் சாம்பிராணியே, நீதாண்டா என் பலம்.

அடுத்த பலி விஜயகாந்தா,பாண்டியானா, ராமகிருஷ்ணனா எனக்கெப்படிடா தெரியும், சசிகலாவல்லவா என் ரிமோட் கண்ட்ரோலர்.

சோ அட்வைஸ் எனக்கிருக்க இன்னும் மத ஒற்றுமை காப்பேன் என்று நம்புகிறாயே என் பித்தத்தின் பித்தமே, அதுதாண்டா என் பலம்.

என்னோட தகிடத்தத்தங்கள் எதையும் வெளியிடாமல் எப்போதும் கருணாநிதியின் வில்லங்கத்தை நோண்டுவதிலிருந்து தினமலர்,தினமணி,ஹிண்டு,விகடன்,ரிப்போர்ட்டர் ஆரிஜின் தெரியாமல் என் காலுல கெடக்கும் மூதேவி தமிழனே உன்னை எப்படிடா மறப்பேன்?

சுடுகாட்டிலிரிந்து டான்ஸி வரைக்கும் ஊழலித்த என்னை ஊழலை ஒழிக்க அழைக்கிற மதி தமிழனைத் தவிர வேறு யாருக்குடா உண்டு?

தமிழ்நாட்டில் இருக்கும் லட்சம் சொச்சம் கிராமங்களில் இருக்கும் தீண்டாமயில் மிதிபடும் தமிழனை மறந்து உலகையே ரட்சிக்க என்னை அழைக்கும் அறிவு உன்னைவிட்டால் யாருக்குடா உண்டு?

என் தாய், படிக்காதவர்கள் தெயவத்துக்கு ஒப்பானவர்கள், மன்னிப்பார்கள் மறப்பார்கள் என்றார். இல்லை தாயே, படித்த பதிவர்களும் மறக்கும் தெய்வங்கள்..

நான் ஜெயித்தால் 24 மணி நேரமும் இலவச இணைய இணைப்பு கொடுப்போம் பதிவர்களே, இப்போது போல் அப்போது அம்னீசியாவிலே இருங்கள்.

அடுத்து மகாமகத்தில் இறப்போர் எண்ணிக்கை 48 லிருந்து 96 ஆக உயர்த்தப்படும்.

கட்டிய பாலம் இடிக்கப்படும்.

புது மசூதிகள் இடிக்க ஒத்துழைக்கப்படும்.

மதமாற்றம் நடப்பது ஏனென்று ஆராயாமல் தடுக்கப்படும்.

ஜாதிக் கலவரங்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்படும்.

வருடம் ஒரு முறை வளர்ப்பு மகன்,அப்பா, அம்மா எல்லாம் நடை முறை படுத்தப்படும்.

வாழ்க ரத்ததின் ரத்தம்
வளர்க பித்தத்தின் பித்தம்

பதிவுலக குஞ்சாமணிகளும் வகைகளும்

தேர்தல் நெருங்க நெருங்க பல வகை குஞ்சாமணிகள் பதிவுலகில் காணக்கிடைக்கின்றனர். ஏதோ நம்மால் முடிஞ்ச வகையில் அவர்களை வகைப்படுத்தியதில்...

அனானி குஞ்சாமணிகள்: இவர்கள் நல்லவர்கள் கெட்டவர்கள் என இரு வகைப்படுவர். நல்லவர்கள் எப்பொழுதும் பதிவைப் படித்துவிட்டு நல்லவிதமான கருத்துகளை நோகாமல் பேரில்லாமல் சொல்லிவிட்டு ஓடிவிடுவார்கள். அடுத்து கெட்டவர்கள், மகா கேவலமானவர்கள். அனேகர் பதிவர்களாகவும் இருக்கக்கூடும். மிக கேவலமான டாஸ்மாக் பாசையிலே பேசிவிட்டு ஓடிவிடுவார்கள். இயற்கையில் இவர்கள் பயங்கர தொடைநடுங்கிகள். கேள்வி கேட்டாலே உச்சாப் போய்விடுவார்கள்.

ப்ளாக்மட்டும் குஞ்சாமணிகள்: இவர்கள் ஒரு சிலரைத்தவிர கண்ட இடத்தில் வாந்தி எடுப்பவர்கள். ப்ளாக் மட்டும் இருக்கும். இடுகை இருக்காது, பேர் இருக்கும் ஆனால் பொய்யாக இருக்கும். ஃபாலோ மட்டும் செய்ய்வார்கள்.முட்டு சந்தில் உச்சா போகும் வீரர்கள்.ஆச்சர்யமாக சில நல்லவர்களும் இதில் இருப்பார்கள். ஆனால் அவர்கள் பெரும்பாலும் கவனம் பெருவதில்லை.

நடுநிலை குஞ்சாமணிகள்:எண்ணிக்கையில் மிகக் குறைவானவர்களே நிஜமான நடுநிலயாளர்கள். மற்றவர்கள் போலிகள். முதலில் போலிகள் பற்றி.நாலே பேர் இருந்தாலும் பிரமாண்டமாக நினைத்துக்கொள்வார்கள். செலக்டிவ் அம்னீசியாவில் பாதிக்கப்பட்டவர்கள்.தேர்தலுக்கு ஒரு முறை முழிப்பவர்கள். தேர்தல் முடியும்வரை உளறிவிட்டு ஓடிவிடுவார்கள். தமிழ் பற்றி எழுதுவார்கள். ஆனால் தமிழனாய் வாழமாட்டார்கள். ஈழம் பற்றி பேசுவார்கள். ஆனால் ஒரு துரும்பைகூட அசைக்கமாட்டார்கள். உள்ளூர் ஏழைகளை மிதிப்பார்கள், உலக ஏழைகளுக்கு வக்காலத்து வாங்குவார்கள். உள்ளூர் ஜாதி பிரச்சினையை ரசிப்பார்கள், உலக தமிழனுக்கு அழுவார்கள். நல்ல நடிகர்கள். பத்தே பேர் படிக்கும் பதிவுலகம்தாம் உலகமென்று சத்தியமாய் நம்புபவர்கள். உள்ளூர் ரெட்டை டம்ளர் தேனிகடையில் ஒரு பொழுதும் காரித்துப்பாத இந்த போலிகள் உலக சமமின்மைய காரித்துப்புவார்கள்.நாம் பார்க்காத நடிகர் திலகங்களின் கூடாரமே இங்குதான்.

கட்சிசார்பு குஞ்சாமணிகள்: ஒவ்வொருக் கட்சிக்கும் ஒவ்வொரு குஞ்சாமணிகள், என்னைப்போல. எப்பொழுதும் தன் கட்சியையே தூக்கிப்பிடிப்பவர்கள்.

ஜாதி/மத சார்பு குஞ்சாமணிகள்: இவர்கள் விஷ ஜந்துக்கள். பச்சோந்திகள் போல தனக்கேற்ற இடுகையில் நுழைந்து மற்றவர்களுக்கு இம்சை கொடுத்துக்கொண்டு இருப்பார்கள். அட நம்மாளோ என்று நினைக்கும்பொழுது இன்னொரு ஒவ்வாத இடுகையில் வீராவேசம் காட்டிக்கொண்டு இருப்பார். கூட்டிக் கழித்துப்பார்த்தால் மதமோ ஜாதியோ இணைத்திருக்கும்.

கம்யூனிஸ்ட்டு குஞ்சாமணிகள்: இதிலும் உண்மை போலியுண்டு. ஆனால் உண்மைகளை கண்டுபிடித்தால் தமிழ்நாட்டை எழுதிவைக்கலாம். முடிந்தளவு உண்மையாக நடிப்பதிலேயே காலம் கடந்துவிடும்.

தெய்வக் குஞ்சாமணிகள்: உண்மையிலேயே இவர்கள் தெய்வப்பிறவிகள். சமையல்,டூர் என யாரையும் பாதிக்காமல் எழுதக்கூடியவர்கள்.ஒரு போதும் விவாதத்தில் இறங்கமாட்டார்கள். அப்படி இறங்கிவிட்டால் இம்சைபடுத்தாமல் விடமாட்டார்கள்.

இப்படி பலக் குஞ்சாமணிகள் இந்த பதிவுலைப் பாடாய் படுத்துகிறார்கள். இதிலே மோசமான நிலையில் இருப்பவர்கள், போலி நடுநிலைக்குஞ்சாமணிகள்தான். வயதுக்கு வந்ததிலிருந்து ஒரு நல்லவிசயமும் செய்யாத இந்த போலிகள் அடிக்கடி நாட்டாமையாக முயற்சிக்கும் தருணங்கள் அழகே அழகு.

அதற்கு ஒத்தூதும் பிள்ளைப்பூச்சிகள் மிகவும் தமாசானவர்கள். தினமும் ரசிக்கலாம்.

Wednesday, April 6, 2011

விஜயகாந்த் வீட்டில்...

விஜயகாந்த் வீட்டில் அப்படி என்னதான் பேசிக்கொ(ல்)கிறார்கள் என்று ஒட்டுக் கேட்டதில்...

சுதீஸ்:(ஹ(வி)ஸ்கி வாய்ஸில்)யெக்கா மாமாகிட்ட மலையேறிட்டு பிரச்சாரம் செய்யக்கூடாதுன்னு செப்புக்கா.

பிரேமலதா: யேய் நா எப்படிடா செப்பேது.

விஜயகாந்த்: நாக்கத் துருத்திக்கொண்டு “யே அங்க என்ன தனியா பேச்சு?”

பிரேமலதா: ஆமா அதுக்கொன்னும் கொரச்ச லேது. நாம இப்ப அதிமுக’கூட கூட்டணி. தெலுசுகாது.

விஜயகாந்த்: ஆங்ங்.. தெலுசு தெலுசு.

பிரேமலதா: பெறகு எதுக்கு அதிமுக கொள்கை ஜெயிலுலன்னு சொன்னீங்க?

விஜயகாந்த்: ஒரு ப்ளோவ்ல வந்துடுச்சு, இப்ப என்ன அதுக்கு?

சுதீஸ்: மா....மா. இப்ப என்ன அதுக்கா? அவன் அவன் காரித் துப்புறான். உசாரா பேசுங்க. கொஞ்ச நஞ்சம் ஓட்டுப் போட நெனச்சவனும் இப்ப தலை தெறிக்க ஓட்றானுங்க.

விஜயகாந்த்: யேமிரா செப்பேவு? வெளியப்போனா வடிவேலு ஏசுறான், ஊட்டுக்கு வந்தா நீங்க ஏசுறீங்க. இப்படி இருந்தா எக்கட்றா போயேது?

பிரேமலதா: எங்கயும் போக வேணாம். எலக்சன் முடியறவரைக்கு தண்ணியடிக்க வேண்டாம்.

விஜயகாந்த்: எப்படிம்மா? எப்படிங்றேன்? முடியுமா? முடியாது. ஒடம்பு நடுங்கிடும். பயம் எல்லாருக்கும் தெரிஞ்சுரும்.

பிரேமலதா: மண்ணாங்கட்டி. பயம் தெலுசுனா தெலுசிட்டு போகுது. இப்ப மூளையில்லன்னு தெரிஞ்சு போகுது.

விஜய்காந்த்: எதை வெச்சு சொல்ற?

சுதீஸ்: பின்ன? ஒரு மொற அடிச்சா மவராஜாய்டுவாங்றே. அப்புறம் அடிக்கவே இல்லேங்ற. இப்படியே போனா கட்சி காணாமப் போய்டும். இப்ப என்னா வேணும் உங்களுக்கு?

விஜயகாந்த்: நான் சி.எம் ஆவனும். ஆயி பாகிஸ்தான் பார்டர்ல போயி சண்ட போடனும், ரம் அடிக்கனும், ரம்மி பிடிக்கனும். இன்னும்....

சுதீஸ்: இன்னும்மா...? யெக்கா..... நீ தெய்வப் பிறவிக்கா. எப்படிக்கா? அட எட்டக்கா?

ராரா... பிரச்சாரத்துக்கு ராரா
போரா... பிந்தக்கு போரா...

Monday, April 4, 2011

சிரிச்சு வயிறு வலி வந்தா கம்பெனி பொருப்பல்ல..

அதிமுகவின் கொள்கைகள் சிறையில் உள்ளன-விஜயகாந்த் பேச்சால் அதிமுகவினர் அதிர்ச்சி.

பனகுடி: நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் மைக்கேல் ராயப்பனை ஆதரித்து பிரசாரம் செய்த தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த், திமுக கொள்கைகள் சிறையில் உள்ளன என்று கூறுவதற்குப் பதில் அதிமுக கொள்கைகள் சிறையில் உள்ளன என்று கூறியதால் கூடியிருந்த அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.


விஜயகாந்த்தின் பேச்சுக்கள், செயல்பாடுகள் நாளுக்கு நாள் குழப்பமாகி வருகின்றன. தர்மபுரியில் தனது கட்சி வேட்பாளரையே போட்டு அடித்தார். தற்போது தவறுதலாக பேசி மீண்டும் சிக்கலில் மாட்டியுள்ளார்.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதி தேமுதிக வேட்பாளர் மைக்கேல் ராயப்பனை ஆதரித்து நேற்று பிரசாரம் செய்தார் விஜயகாந்த். அப்போது அவர் பேசுகையில், திமுக கொள்கைகள் இன்று சிறையில் உள்ளன, திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ராஜா சிறையில் உள்ளார் என்று கூறுவதற்குப் பதிலாக, அதிமுக கொள்கைகள் சிறையில் உள்ளன, அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் ராஜா சிறையில் உள்ளார் என்று கூறினார்.

இதனால் அதிமுக தொண்டர்கள் பெரும் குழப்பமும், அதிருப்தியும் அடைந்தனர். இந்த நிலையில் வேனுக்குள் இருந்த யாரோ, கீழே இருந்தபடி விஜயகாந்த்தை அழைத்து அவர் தவறாகப் பேசியதை சுட்டிக் காட்டினர்.(என்னா ஒரு தைரியம், பாத்து அடி பின்னி பெடலெடுக்கப் போகிறார்)

இதையடுத்து சற்று நேரம் பேச்சை நிறுத்திய விஜயகாந்த், நான் தப்புத் தப்பாக பேசுகிறேன் என்று நினைக்கிறேன். இதற்கு காரணம், இந்த சத்தம்தான் என்று கூறியபடி அங்கு கூடியிருந்த கூட்டத்தினரைப் பார்த்து நாக்கை துறுத்தியபடி கண்டித்தார். பின்னர் அவர் தொடர்ந்து பேசினார்.

'கத்தாதீங்க நான் குழம்பிடுவேன்' (ஹா ஹா.. போதை ஏறிடுச்சுன்னு சொல்ல வேண்டியதுதானே)

இதேபோல கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த பிரசாரத்தின்போது தொண்டர்களைப் பார்த்து, கத்தாதீங்க, நான் குழம்பிடுவேன் என்று விஜயகாந்த் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

குமரி மாவட்டத்தில் போட்டியிடும் தேமுதிக மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் நேற்று பிரசாரம் செய்தார். குலசேகரத்தில் இருந்து அவர் பிரசாரத்தை துவங்கினார்.

மக்கள், தொண்டர்கள் விரும்பியதால் அதி்முகவுடன் கூட்டணி வைத்தேன். எனது மானசீக குரு எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சியுடன்தான் கூட்டணி வைத்திருக்கிறேன். மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என கூட்டணி வைத்துள்ளேன். அதிமுக கூட்டணிக்கு நீங்கள் வெற்றியைத் தேடி தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தக்கலையில் கூச்சல், குழப்பம்!

தக்கலையில் அவர் பேசிக்கொண்டிருந்தபோது தொண்டர்கள் கூச்சல் போட்டனர். அப்போது ஆத்திரமடைந்த விஜயகாந்த் கத்தாதீங்க, நான் குழம்பிடுவேன். கொடியை இறக்கிக் காட்டுங்கள் என்றார்.

வடசேரி அண்ணா சிலை அருகே பேசுகையில், நான் பேசுவதை கேட்கத்தான் நீங்கள் வந்திருக்கிறீர்கள். நீங்க போடுற சத்தத்தை கேட்க நான் வரவில்லை. சத்தம் போட்டீர்கள் என்றால் வேனில் இருந்து நான்கீழே இறங்கிடுவேன். நீங்க எல்லோரும் வேனுக்கு வந்து பேசுங்கள் என்றார்.

ஹோஓஓஓஓஓஓ ஹாஆஆஆஆ ஹாஹா, நல்லா சிரிக்க வெக்கிறீய ராசா, யார் பெத்த புள்ளயோ இப்படியெல்லாம் பேசி என்ன சந்தோசப்படுத்துது.


நன்னி;தட்ஸ்தமிழ்

Thursday, March 31, 2011

அம்மாவின் அரசியல் அதகளம்.

இவர் திரையில் ஒரு முன்னாள் நடிகை, அரசியலில் இன்னாள் நடிகை. ஏதோ கூடாப் பழக்கத்தின் காரணமாக தலைவரே இவரை அரசியலில் இழுத்துவிட்டார். வேறெதுவும் உலகை காக்கும் காரணிகள் இல்லை.

தலைவருக்கு முதுமையின் காரணமாகவும், தீராத விளையாட்டின் காரணமாகவும் உறுப்புகள் பழுதாக சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல, கிட்டத்தட்ட எல்லாத் தொண்டர்களும் அழுது புரள இந்த அம்மனி மட்டும், மத்தியத் தலைவருக்கு மிக உருக்கமாக “ காந்தியின் பூந்தியே, எங்க ஆளுக்கு பார்ட்ஸ் எதுமே வேலை செய்யல,அத்துமில்லாமல் ஸ்பேர் பார்ட்ஸ்சும் ஸ்டாக் இல்ல, இன்னிமே இந்தாளுனால ஒன்னியும் ஆவாது, அத்தால என்னயே தலிவராக்கனும்”ன்னு ஒரு கடிதம் எழுதுகிறார். இதை மறுக்கும் பித்தத்தின் பித்தங்களுக்கு விந்தியாவின் முத்தங்கள் பரிசு.

ஒரு வழியாக ஏதோ தேறி தலைவர் வருகிறார். இருந்தார். இறந்தார். ஆனால் ஒன்று பாருங்கள், இந்த தமிழர்கள் எப்பொழுதும் வெள்ளையாக இருந்தால்தான் நம்புவார்கள். “இவ வெள்ளையா இருக்கா, அதனால பொய் சொல்ல மாட்டா” என்று பித்துவம் பேசுவர். அதேதான் இங்கும் நடந்தது. இரண்டாகப் பிரிந்தது. இந்த புத்திகெட்ட கூமுட்டைகள் உண்மையை ஒதுக்கிவிட்டு பொய்யான மினுக்கியை ’தூக்கி’வைத்து ஆடினார்கள்,ஆட்டினார்கள்.

ஆனால் நடந்தது என்ன? பாவம் நேற்று பெய்த மழையில் பிறந்த காளான்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆசைப்பட்டால் விவரமானவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

வயதாகிவிட்டால் ஆட்டம் காட்ட தெம்மு இருக்காது என்று நினைத்தோ என்னவோ,தலைவருக்கு நெருக்கமாக இருந்த அத்தனை சீனியர்களுக்கும் கம்பல்சரி ரிட்டயர்மெண்ட் கொடுக்கப்பட்டு சிக்ஸ் பேக் நாட்டாமைகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

அதுவும் சில காலந்தான், ரொம்ப பெரிதாக இருந்தால் உத்திரத்துக்கு உதவாது என்பது போல தூக்கியும் எரியப்பட்டது.

பாவம் அந்த கூமுட்டை சீனியர்கள், கூன் விழுந்த காலத்தில் ஃபுட்போர்டு அடித்தும் அசைந்து கொடுக்கவில்லை. எப்பொழுதும் ரெண்டாம் தாரத்துக்கு மூத்த தாரத்து பிள்ளைகள் ஆகாமல்தானே போகும். ஆமாம் போனது.

இப்படியாக தலைவரின் அத்தனை தொண்டர்களையும் புதைத்துவிட்டு, ஒரு வீட்டுத்தொண்டர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது, அலங்கார அம்புஜம்.

யாருக்கும் யோகம் எப்படி வருமென்று தெரியாது. அப்படித்தான் வந்தது. பூந்தியின் பூலோக வாழ்கையின் முடிவில் அம்புஜத்தின் கிராப் கிர்ரடிக்குமென்று யாருக்குத் தெரியும். சும்மா சொல்லக்கூடாது, எம்மக்கள் பின் வாசலில் வருபவர்களை வரவேற்பதில் கில்லாடிகள். ஒன்னில்ல ரெண்டில்ல, அஞ்சு வருசம். நரக வாசம். ஆனாலும் சிரிச்சு சிரிச்சே அபாயமா ஓடிப்போச்சு.பின்ன என்னதான் செய்யுறது?

ஏழு கழுத வயசான ஒன்ன, பெக்காத புள்ளன்னு சொன்னா, மப்பும் மந்தாரமா இருந்தா சிரிச்சு தொலைக்கலாம். பசியும் பட்டினியுமா இருந்தா என்ன செய்யலாம்? கரிச்சுக் கொட்டினோம் கருமத்த. அதைவிட கல்யாணம் செஞ்சு வெச்சக் கொடுமைய பாக்காத வாலிபர்கள் புன்னியவான்கள். எம் கெட்ட நேரம், பார்த்து தொலைத்துவிட்டது.

விட்டதா சனியன், அதே கழுதை வயசான குழந்தைக்கு கஞ்சாவும் கொடுத்தாச்சு.

அரசியலுல அநாகரிக அரசியலுன்னு ஒன்னு இருக்குன்னு அந்த அஞ்சு வருசத்துலதான் எனக்கு தெரியவந்ததே. கலெக்டர் மூஞ்சியில ஆசிட் வீச்சு, ஏர்ப்போர்ட்ல மகளிரின் கரகாட்டம்,எதிரணி வக்கீலுக்கு வலைகாப்பு..,

நகைக்கடைக்காரர் பலி,இசையமைப்பாளர் வீடு பறிமுதல்,பத்திரிக்கைகாரர்களின் தலக்கரி, இப்படி வரிசைமுடியா வில்லங்கம்.

டப்புக்குள்ள யானை குளிச்சு பார்த்தது உண்டா? நான் கண்டதுண்டு. ஒன்றல்ல, இரண்டு யானை. கும்பகோணம். மகாமகம். பாவம் பல பிணங்கள். பரிகாராம்?

மக்களுக்கு வெருப்பென்றால், இப்படி அப்படி அல்ல. பல பகுதிகளில் உள்ளயே நுழைய முடியவில்லை. விரட்டப்பட்டனர். எனக்குத் தெரிந்து பல மந்திரிகளை மக்களே சிறையிட்டதை பழையப் பத்திரிக்கைகள் கிடைத்தால் படிக்கலாம்.

இன்னொன்று, அப்பொழுதும் இப்பொழுது இருக்கும் அத்தனைப் பிரச்சினைகளும் இருந்தது. காவிரியிலிருந்து,ஈழம் வரை அத்தனையும்.

என்னைப் பொருத்து, இதுதான் நம் இருண்ட காலம்.

இதில் எனக்கு பிடித்த விசயம் என்னவென்றால், பொட்டிக்கடை ஆத்துக்காரரை அந்தரத்தில் விட்டுவிட்டு, பொட்டிக்கடையை கக்கத்தில் வைத்துகொண்டதைத்தான்.

தொடரும்...

விஜயகாந்த்துக்கு வடிவேலு 'ஐடியா'!

ஏற்கனவே விஜயகாந்த,”கண்ணா லட்டு தின்ன ஆசையா”ன்னு கேட்டுகிட்டு இருந்த வடிவேலுக்கு, “கண்ணா இப்ப ரெண்டு லட்டு தின்ன ஆசையா”ன்னு கேக்க வெச்சுட்டார் க்வாட்டர் விஜயகாந்த். ஓவர் டூ தட்ஸ்தமிழ்.


சென்னை: நீ அடிச்சா மகாராஜா ஆகிடுவாங்கன்னு சொல்றியே, பேசாம உன்னோட கல்யாண மண்டபத்து உன் கட்சிக்காரங்கள வரிசையில நிக்க வச்சு ஆளுக்கு நாலு குத்து நங்கு நங்குன்னு குத்தி, எல்லோரையும் மகாராஜா ஆக்க வேண்டியதுதானே. அதுக்கு எதுக்குடா எலக்ஷன் என்று விஜயகாந்த்தை காட்டமாக கேட்டுள்ளார் நடிகர் வடிவேலு.


சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜே.அன்பழகனை ஆதரித்து வடிவேலு பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், பொது இடத்தில வச்சு தன்னோட தப்பை சுட்டிக் காட்டிய வேட்பாளரை நங்கு நங்குன்னு குத்துறியே. கேட்டா, என்கிட்ட குத்து வாங்கினா மகாராஜா ஆகிடுவான்னு சொல்ற. நான் சொல்றேன், பேசாம உன் கட்சிக்காரங்களை உன்னோட கல்யாண மண்டபத்துக்கு வர வச்சு வரிசையா நிக்க வச்சு ஆளுக்கு நாலு குத்து குத்து. எல்லாத்தையும் மகாராஜா ஆக்கி விட்டுப் போ.

அப்புறம் எதுக்குடா எலக்ஷனு. பேசாம கூட்டணிய கலைச்சுடு. பொது இடத்துல வச்சு நாலு பேரு பாக்கற மாதிரி நங்கு நங்குன்னு குத்துறான். இதை இந்த தேர்தல் அதிகாரிங்க பார்த்துக்கிட்டு என்ன செய்றாங்க. அந்தாளை கைது செய்ய வேண்டாமா.

இஸ்லாமியப் பெருமக்களை தனது படங்களில் தீவிரவாதிகளாகத்தான் காட்டுவார் விஜயகாந்த். தன்னை ஹீரோவாக காட்டிக்கொள்வார். இஸ்லாமியர்கள் மீது பாசமாக இருப்பது போல காட்டிக் கொள்ளும் அவர் தேர்தலில் மட்டும் ஏன் உரிய வகையில் சீட் கொடுக்கவில்லை.

தன்னோட கட்சி சார்பா போட்டியிடும் 41 வேட்பாளர்கள் பெயரையும், ஒரு பெயர் விடாம சரியா சொல்லட்டும் விஜயகாந்த். நான் இந்த பிரசாரத்தை விட்டே போய்டுறேங்க என்றார் வடிவேலு.

மறுபடியும் நான்,

ஹாஹா இதென்னமோ எனக்கும் சந்தேகமா இருக்கு.சரக்குக்கு ரொம்ப அடிமையாயிட்டாரோன்னு வருத்தமா இருக்கு. 40 நிமிடத்துக்கொரு முறை கட்டிங் போடனுமாமே? ஏதோ நல்லா இருந்தா சரி.

விஜயகாந்த்,அனேகமா தன்னோட மாமனார் வீட்டு கம்பல்சன்ல கட்சி ஆரம்பிச்சமாதி தெரியுது.இல்லன்னா இவ்ளோ நிதானம் தவற வாய்ப்பில்லை.பிரச்சாரத்தின் போது, விஜயகாந்தின் கையையும் காலையும் வேனுடன் கட்டிவிடும் யோசனையில் பிரேமலதாவும்,சுதீசும் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்வது நம்பும்படியாகவே இருக்கிறது.

மேலும் விசாரிக்கையில், வீட்டிலே பேச வேண்டியதை பிரேமலாதா முன்னிலையில் பதிவு செய்து, பிரச்சாரத்தின் போது அதை ஓடவிட்டு, விஜயகாந்த் வாயை மட்டும் அசைத்தால் என்ன? என்று யோசிப்பதாகவும் நம்பப்படுகிறது. வடிவேல் வாய் ரோலிங்கில் கண்டுபிடிப்பதில் கில்லாடி என்பதால் அதிலும் சிக்கலாகத்தான் உள்ளது.

இப்படியொரு இக்கட்டான நிலமை விஜயகாந்துக்கு, தர்மபுரி ரிலீஸின்போதுகூட இல்லை என்று நெருங்கிய வட்டாரம் காதைக் கடிக்கிறது.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்த எலக்சன் ரொம்ப தமாசாகத்தான் இருக்கும் போலிருக்கிறது.

Tuesday, March 29, 2011

வடிவேலு பிரச்சாரம்... வாக்காளர்களிடம் ஏக ரெஸ்பான்ஸ்!!

விஜயகாந்த் பேச்சு பல சமயம் மிக தடிப்பாகவே இருக்கும். இன்றுகூட ராமதாஸை ரத்தம் குடிக்கும் ஓநாய் என்று விளித்திருக்கிறார். இது ராமதாஸுக்கு பொருத்தமா? அல்லது இல்லையா? என்பது விடயமில்லை. ஆனால் ஒரு மோசமான அரசியலுக்கு இது அடிகோலும் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. சரி விசயத்துக்கு வருகிறேன். விஜயகாந்துக்கு ஏற்ற வடிவேலு பற்றிய செய்தி உங்களுக்காக. நன்றி:thatstamil

இதுவரை எத்தனையோ நடிகர்கள் தேர்தல் பிரச்சாரத்துக்குப் வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் கிடைக்காத உச்ச அந்தஸ்து, ஒருவருக்கு கிடைத்திருக்கிறது. அவர்தான் வடிவேலு!


திருவாரூரில் கலைஞர் முன்னிலையில் விஜயகாந்தை தாக்கி அவர் பிரச்சாரத்தை ஆரம்பித்தபோது, 'இதென்ன ஏகத்துக்கும் தனிப்பட்ட தாக்குதல் நடத்துகிறாரே' என சற்று முகம் சுளிக்கத்தான் செய்தார்கள். ஆனால் அடுத்தடுத்த ஊர்களில் அவர் பிரச்சாரம் செய்த விதம், மக்களை நகரவிடாமல் கட்டிப்போட்டது. வடிவேலு அடுத்துப் பேசும் இடம் எங்கே என விசாரிக்கும் அளவுக்கு ஆர்வமாகிவிட்டனர் மக்கள்.

சினிமாவில் ஹீரோவாக 'லெக்' பைட் போட்டுக் கொண்டிருந்த விஜயகாந்தை, அரசியலில் 'காமெடியன்' எனும் அளவுக்கு வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார் வடிவேலு.

துணை முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூரில், வடிவேலு பேச்சுக்கு ஏக வரவேற்பு. மருதமலை, கிரி போன்ற படங்களில் அவர் பேசிய சில நகைச்சுவை பஞ்ச்களை விஜயகாந்தைக் குறிவைத்து டைமிங்காக அவர் அடிக்க, மக்கள் சிரித்தனர்.

"எதையாவது திங்கணும்னு ஆசையாயிருந்தா கடைக்கு போய் ஒரு வடைய வாங்கித் திண்ணு, பன்னை வாங்கித் திண்ணு.." என்று மருதமலை படத்தில் அவர் பேசும் காட்சி ரொம்பப் பிரபலம். இன்றைய பிரச்சாரத்தில், ஒரு இடத்தில் விஜயகாந்தின் முதல்வர் பதவி கனவை விமர்சித்த வடிவேலு, "விஜயகாந்துக்கு முதல்வராகனும்னு ஆசை இருந்தா எங்கிட்டாவது ஒரு அஞ்சு கோடி பத்து கோடி கொத்து சினிமா எடுக்கச் சொல்லி அந்த வேசத்தை போட்டுக்கலாம்... அதை விட்டுப்புட்டு முதல்வராகராம்... இது நல்லாவா இருக்கு!" என்ற மருதமலை பாணியிலேயே பேச, கொளுத்தும் வெயிலென்றும் பாராமல் கைதட்டிச் சிரித்தனர் மக்கள்.

திமுக, அதிமுக என்ற பேதமில்லாமல், அனைவருமே வடிவேலுவைப் பார்க்க வருகிறார்கள். அவர் பேச்சை ரசித்துக் கேட்கிறார்கள். 'யத்தா... நம்ம ஸ்டாலின் அய்யா மேல ஒரு மாசு மருவு சொல்ல முடியுமா... எவ்வளவு தங்கமான மனுசன். நீங்க போனாலும் வாசலுக்கு வந்து வரவேற்பாரு... அப்படி ஒரு மனுசன் ஜெயிச்சி ஆட்சிக்கு வந்தா நாடும் நல்லாருக்கும், உங்க தொகுதியும் நல்லாருக்கும். குடிகாரங்ககிட்ட நாட்ட கொடுத்துடாதீங்க, சொல்லிட்டேன்", என பெண்களிடம் அவர் பேசும் விதம் நன்றாகவே ஒர்க் அவுட்டாகிறது.

நடிகர்களின் பிரச்சாரத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் போதும், வடிவேலுவுக்குதான் முதலிடம் தருகிறது கலைஞர் தொலைக்காட்சி. வடிவேலு பேச்சை முழுவதுமாக காட்டிவிட்டுத்தான், மற்றவர்களின் பேச்சைக் காட்டுகிறார்கள்.

சினிமாவில் நம்பர் ஒன் காமெடியன்... அரசியலில் நம்பர் ஒன் பிரச்சாரகர் என்ற பெயரை குறுகிய காலத்தில் பெற்றுவிட்டார் வடிவேலு!

ஹா ஹா, சரியானப் போட்டி.

இறுகிய முகத்துடன் கிளம்பினார் ஜெ.- ஹா ஹா சிப்பு சிப்பா வருது.

திருச்சி, கரூர், பெரம்பலூரில் சுற்றுப்பயணம் ஓவர்:இறுகிய முகத்துடன் கிளம்பினார் ஜெ.,




திருச்சி:திருச்சி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை முடித்த ஜெயலலிதா, நேற்று இறுகிய முகத்துடன் திருச்சியில் இருந்து புறப்பட்டார்.சட்டசபை தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா போட்டியிடுவதையொட்டி, கடந்த 24ம் தேதி தன் தேர்தல் பிரசாரத்தை ஸ்ரீரங்கத்தில் துவங்கினார்.செல்லும் இடமெல்லாம் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தை பார்த்து, அவரது முகத்தில் உற்சாகம் குடி கொண்டது. மறுநாள், ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட மணிகண்டம் ஒன்றிய பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
ஒன்றிரண்டு இடங்கள் தவிர மற்ற இடங்களில் மக்கள் கூட்டம் இல்லாததைக் கண்டு உள்ளூர ஜெயலலிதா அதிருப்தி அடைந்தாலும், அவரின் சிரித்த முகம் மட்டும் மாறவே இல்லை.அன்றிரவு விழுந்த, "டோஸ்' காரணமாக, மறுநாள் பிரசார பணிகளை, விடிய, விடிய நிர்வாகிகள் செய்தனர். ஸ்ரீரங்கம் தொகுதியை சேர்ந்த அந்தநல்லூர் ஒன்றியப் பகுதிகளில் மக்கள் வெள்ளமென திரண்டிருந்தனர்.நான்காம் நாள் பிரசாரத்துக்கு, ஹெலிகாப்டர் மூலம் அவர் கரூர் சென்றார். அங்கிருந்து முசிறிக்கும், முசிறியில் இருந்து பெரம்பலூருக்கும் சென்றார். இருப்பினும், அப்பகுதிகளில் எதிர்பார்த்ததை விட மக்கள் கூட்டம் வெகுகுறைவாக இருந்தது. இதை கண்டு, ஜெயலலிதா அதிருப்தியடைந்தாலும், ஸ்ரீரங்கம் தொகுதியில் பேசாமல் விட்ட ஐந்து இடங்களில் சென்று பிரசாரம் செய்த பின்னரே, தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு திரும்பினார்.
நேற்று பிற்பகல் 2 மணிக்கு, கந்தர்வக்கோட்டை, தஞ்சை, குடந்தை பகுதிகளில் பிரசாரம் செய்ய, திருச்சி ஓட்டலில் இருந்து ஜெயலலிதா புறப்பட்டார். முதல் நாள் பிரசாரத்துக்கு கிளம்பிய போது இருந்த புன்னகை முகம் மாறி, நேற்று இறுகிய முகத்துடன் காணப்பட்டார்.அவரை பார்த்து கட்சி நிர்வாகிகள், "வருங்கால முதல்வர் வாழ்க' என்று உற்சாகமாக கோஷம் எழுப்பியும், அவரது முகத்தில் சிரிப்பு இல்லை. அவர்கள் பக்கம் திரும்பாமலேயே கும்பிடு போட்டுக் கொண்டே பிரசாரத்துக்கு கிளம்பி சென்றார்.

இது அம்மாவின் ஆசியோடும் அய்யா ராஜபக்சேவின் பேராசியோடும் விளையாடும் தினமலர் செய்திங்கோ.....

தினமலர் கருத்து கணிப்பு, திமுக கூட்டனி-174, அதிமுக கூட்டனி-60

தலைகீழ் விகிதங்கள்: கிராமப்புறங்களில் தி.மு.க.,; நகர்புறங்களில் அ.தி.மு.க., முன்னணி



தமிழகத்தில், காலம் காலமாக அரசியல் கட்சிகளுக்கு இருந்த ஓட்டு வங்கி, தற்போது தலைகீழாக மாறியுள்ளது. தி.மு.க.,வின் ஓட்டு வங்கியாக கிராமப்புறங்களும், அ.தி.மு.க., வின் நம்பிக்கைக் களங்களாக நகர்புறங்களும் மாறிவிட்டன.



அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., துவக்கியது முதல், தமிழகத்தில் கிராமப்புறங்களிலும், குடிசைப் பகுதிகளிலும் அக்கட்சிக்கு ஓட்டுகள் மொத்த மொத்தமாக கிடைத்து வந்தன. எம்.ஜி.ஆர்., இருந்த போதே, நகர்பகுதிகளிலும், படித்த மற்றும் நடுத்தர மக்களிடமும், தி.மு.க.,வுக்கு ஆதரவு இருந்தது. குறிப்பாக, தலைநகரான சென்னை, எப்போதும் தி.மு.க.,வின் கோட்டையாகவே திகழ்ந்தது. மூன்று தேர்தல்களில் தொடர்ந்து வென்ற எம்.ஜி.ஆரால் கூட இதை மாற்ற முடியவில்லை.



எம்.ஜி.ஆருக்கு பிறகும், கிராமப்புறங்கள் மற்றும் குடிசைப் பகுதிகளில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தொடர்ந்து நீடித்தது. எத்தனையோ பிளவுகள், இழப்புகளை சந்தித்தபோதும், "இரட்டை இலை' சின்னத்துக்கான ஓட்டு வங்கியை மாற்ற முடியவில்லை. அதே நேரத்தில் அரசு ஊழியர்கள், படித்தவர்கள், நடுத்தர மக்கள் போன்றோரின் ஆதரவு தி.மு.க.,வுக்குத் தொடர்ந்தது. 1991ல் ராஜிவ் கொலை என்ற அலை வீசியதால், சென்னையில் கூட தி.மு.க., தோல்வியைத் தழுவியது. ஆனாலும், தன் ஓட்டு வங்கியை தி.மு.க., தக்கவைத்துக் கொண்டது.



கடந்த, 2006 சட்டசபை தேர்தலுக்குப் பின், தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் ஓட்டு வங்கி நிலை தலைகீழாக மாறிவிட்டது. அந்த தேர்தலில், தி.மு.க.,வின் கோட்டையாகக் கருதப்பட்ட சென்னையில், மொத்தம் இருந்த 14 தொகுதிகளில், அ.தி.மு.க., ஏழு தொகுதிகளில் வென்றது. கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, பரிதி இளம்வழுதி போன்றோர் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இதேபோல, கோவை, மதுரை போன்ற படித்த மக்கள் அதிகம் வாழும் நகர்பகுதிகளிலும் அ.தி.மு.க.,வே அதிக இடங்களில் வென்றது. இதன் பின் நடந்த இடைத்தேர்தல்களில் மதுரை மத்தி, மேற்கு தவிர மற்ற அனைத்துமே கிராமப்புறங்களை உள்ளடக்கிய தொகுதிகளாக இருந்தன. இதனால், வாக்காளர்களை ஆளுங்கட்சி கவர்வதற்கு எளிதாக இருந்தது. ஆளுங்கட்சியும் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்தது.



தற்போதைய நிலையில், கிராமப்புறங்கள் மற்றும் குடிசைப் பகுதிகளில், தி.மு.க., அணிக்கு அதிக ஆதரவும், நடுத்தர மக்கள், படித்தவர்கள் மத்தியில் அ.தி.மு.க.,வுக்கு அதிக ஆதரவும் என, நிலைமை மாறியுள்ளது. இதை அறிந்துள்ள ஆளுங்கட்சியும், கிராமப்புற தொகுதிகளை நோக்கி படையெடுத்துள்ளது. தலைநகர் சென்னையில் ஐந்து தொகுதிகளை காங்கிரசுக்கும், பா.ம.க., மற்றும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு தலா ஒரு தொகுதியையும் தி.மு.க., விட்டுக்கொடுத்துள்ளது. முதல்வர், துணை முதல்வர், நிதியமைச்சர் போன்றவர்களே தொகுதி மாறியுள்ளனர். அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தேர்தல் களத்தில் இருந்தே ஒதுங்கிவிட்டார். அதேபோல, கிராமப்புற தொகுதியான ஆண்டிபட்டியில் போட்டியிட்ட ஜெயலலிதா, இம்முறை ஸ்ரீரங்கத்துக்கு மாறியிருப்பதும், படித்தவர்கள் மற்றும் மேல் ஜாதியினர் அதிகமுள்ள தொகுதி என்பதால் தான். இவ்வளவு ஆண்டுகளாக இருந்த ஓட்டு வங்கி, தலைகீழாக மாறியதற்கு, சில காரணங்கள் உள்ளன.



தி.மு.க., ஆட்சியில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, பொங்கல் பரிசு, இலவச வேட்டி, சேலை, குறைந்த விலையில் மளிகைப் பொருட்கள், இலவச காஸ், ஊரக வேலை உறுதித் திட்டம், இலவச "டிவி' போன்ற திட்டங்களின் பயனை ஏழைகளும், கிராமப்புறத்தினரும் அதிகம் அனுபவித்துள்ளனர். அதனால், அவர்களின் ஆதரவு தி.மு.க., பக்கம் இருக்கிறது. இவர்கள் யாரும், ஸ்பெக்ட்ரம் ஊழல், குடும்ப அரசியல், லஞ்ச விவகாரம் போன்றவை பற்றி கவலைப்படவில்லை. அதேநேரத்தில், படித்தவர்கள், நடுத்தர மக்கள், "ஸ்பெக்ட்ரம்' விவகாரம் பற்றி நன்கு அறிந்துள்ளனர். விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இவர்களது பார்வை, எதிர்க்கட்சியான அ.தி.மு.க., பக்கம் சென்றுள்ளது. இந்த தலைகீழ் மாற்றம், எந்த கூட்டணிக்கு சாதகமாக அமைகிறது என்பது, மே 13ல் தெரியும்.



எவ்வளவு தொகுதிகள்? : சென்னையில் 16, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, ஆலந்தூர், தாம்பரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பூர், ஸ்ரீரங்கம், பாளையங்கோட்டை, கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், ராஜபாளையம், கும்பகோணம் மற்றும் ஓசூர் உட்பட நகர்புற தொகுதிகள் மொத்தம், 60 இருக்கின்றன. மற்ற தொகுதிகள் அனைத்தும், பெரும்பான்மை கிராமப்புறங்களைக் கொண்டதாக இருக்கின்றன.

அதிமுக மற்றும் ராஜபக்சேவின் தீவிர ஆதரவு பத்திரிக்கையான தினமலரே இப்படி சொல்வதால் இதனை நிச்சயமாக நம்பலாம்.

ஜெயலலிதாவை தோற்கடிக்க வேறு யாரும் தேவையிலை, ஜெயலலிதாவே போதும்.

Monday, March 28, 2011

சாதனைகளைச் சொல்லிவிட்டேன், நன்றியை எதிர்பார்த்து நிற்கிறேன்:கலைஞர்.

சென்னை: நாடு நலம்பெற செய்துளள் சாதனைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறேன். அவர்கள் காட்டப்போகும் நன்றியை எதிர்பார்த்து நிற்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஜெயலலிதா தனது பிரசாரக் கூட்டங்களில் கடந்த 5 ஆண்டுகளில் தமிழக மக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதாகவும், எந்த நன்மையும் செய்யப்படவில்லை என்றும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த கருணாநிதி என்ன செய்தார் என்றும் கேட்டதாக ஏடுகளில் செய்தி வந்துள்ளது. எனவே, திமுக அரசு கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்ககு என்ன செய்தது என்றும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை மேற்கொண்டது என்றும் விளக்கி்க் கூறுகிறேன்.

ஏழை மக்களுக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வீதம் மாதம் 20 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. இதனால் மாதந்தோறும் ஒரு கோடியே 85 லட்சம் குடும்பங்கள் பயனடைகின்றன. குறைந்த விலையில் பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, மைதா கோதுமை வழங்கப்படுகிறதே, இது மக்களுக்கு செய்யப்பட்ட நன்மை இல்லையா? விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் நிறைவேற்றிய திட்டம் இல்லையா? மானிய விலையில் மளிகைப் பொருள்கள் என 50 ரூபாய்க்கு 10 சமையல் பொருள்கள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படுகின்றன.

22 லட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயக் குடும்பங்களுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி கடந்த ஐந்தாண்டு காலத்தில் செய்யப் பட்டிருக்கிறதே, ஜெயலலிதாவுக்கு இது மக்களுக்கு செய்யப்பட்ட நன்மையாகத் தெரியவில்லையா? 35 லட்சத்து 54 ஆயிரத்து 721 விவசாயிகளுக்கு 8 ஆயிரத்து 477 கோடியே 56 லட்சம் ரூபாய் பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இவைகள் எல்லாம் கடந்த ஐந்தாண்டு காலத்தில் கழக அரசில் செய்யப்பட்ட நன்மைகளா இல்லையா?

2005 2006ல் நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு விலை ரூபாய் 600; 2010 2011ல் சாதா ரக நெல் விலை 1050 ரூபாய்; சன்ன ரக நெல் விலை 1100 ரூபாய்; உழவர்களும், வாங்குவோரும் பயனடைய மீண்டும் புதுப்பொலிவுடன் 117 உழவர் சந்தைகள்; மேலும் புதிதாக 45 உழவர் சந்தைகள் அமைப்பு; பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் 2006ல் 50 சதவீத காப்பீட்டுத் தொகையை அரசே மானியமாக வழங்கி, ஊக்கப்படுத்தியதால் 2005 2006ல் ஒரு லட்சம் விவசாயிகள் பயனடைந்த நிலையில்; 2009 2010 ம் ஆண்டில் 9 லட்சத்து ஓராயிரத்து 643 விவசாயிகள் அரசின் மானிய உதவி பெற்றுப் பயிர்க் காப்பீடு செய்தனர். இதுவரை 9 லட்சத்து ஆயிரத்து 643 விவசாயிகளுக்கு 974 கோடி ரூபாய் இழப்பீடுத் தொகை வழங்கப்பட்டுள்ளது; இது மக்களுக்குச் செய்யப்பட்ட சாதனையா இல்லையா? கரும்பு விவசாயிகளுக்கு 2005 2006ல் டன் ஒன்றுக்கு வழங்கப்பட்ட விலை ரூ.1014; தற்போது டன் ஒன்றுக்கு ரூ.2000 வழங்கப்படுகிறது.

மாநிலத்திற்குள் பாயும் ஆறுகளை இணைக்கும் புரட்சிகரமான திட்டத்தின்கீழ் 189 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம்; 369 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாமிரபரணி கருமேனியாறு நம்பியாறு இணைப்புத் திட்டம்; விவசாயிகளுக்கு வழங்கும் சலுகைகளால் உணவு தானிய உற்பத்தி உயர்வு. விவசாயிகளைச் சுயஉதவிக் குழுக்களாக ஒருங்கிணைத்து சுழல்நிதி வழங்கும் திட்டத்தின்கீழ் 27 ஆயிரத்து 294 குழுக்கள் அமைக்கப்பட்டு, 27 கோடியே 29 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் சுழல்நிதியாக வழங்கப்பட்டு, 32 ஆயிரத்து 940 குழுக்களுக்கு 402 கோடியே 56 லட்சம் ரூபாய் பயிர்க் கடனாகவும் அளிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு இவைகள் எல்லாம் கடந்த ஐந்தாண்டு காலத்தில் செய்யப்பட்ட சாதனைகளாகத் தோன்றவில்லையா?

ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 494 கைத்தறி நெசவாளர்களுக்கும், 90 ஆயிரத்து 547 விசைத்தறி நெசவாளர்களுக்கும், சிறப்புத் தொகை செலுத்தி மின் இணைப்பு பெற்ற 2 லட்சத்து 39 ஆயிரத்து 511 விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம்; மேலும், 2 லட்சம் பம்ப் செட்களுக்கும் இலவச மின்சார இணைப்பு படிப்படியாக வழங்கிட ஆணையிடப்பட்டு வழங்கப்படுகிறது.

3742 கோடியே 42 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு கோடியே 72 லட்சத்து 80 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகள் வழங்க முடிவு செய்யப்பட்டு, இதுவரை ஒரு கோடியே 62 லட்சத்து 59 ஆயிரத்து 526 குடும்பங்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. 661 கோடி ரூபாய் செலவில் 29 லட்சம் குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புடன் இலவச எரிவாயு அடுப்புகள் வழங்கப்பட்டு உள்ளன;

ஒரு லட்சத்து 79 ஆயிரம் நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள் குடும்பங்களுக்கு 2 லட்சத்து 12 ஆயிரத்து 995 ஏக்கர் இலவச நிலம்; 8 லட்சத்து 29 ஆயிரத்து 236 ஏழைக் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா.

காமராஜர் பிறந்த நாளில் "கல்வி வளர்ச்சி நாள்'' என பள்ளிகளில், கல்வி விழா; 2 வயது முதல் 15 வயது வரை உள்ள 73 லட்சம் குழந்தைகள், மாணவ மாணவியருக்கு சத்துணவுடன் வாரம் 5 நாட்களும் முட்டைகள்; முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப் பழங்கள்; தமிழ் வழியில் பயிலும் 50 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவியர்க்கு அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் சிறப்புக் கட்டணங்களும், 11 லட்சம் மாணவ, மாணவியருக்கு 10, 12 ம் வகுப்புகளின் அரசுத் தேர்வுக் கட்டணங்களும் ரத்து.

பட்டப்படிப்பு பயிலும் 3 லட்சத்து 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவியரின் படிப்புக் கட்டணங்கள் ரத்து; 2010 2011 முதல் எம்.ஏ., எம்.எஸ்ஸி. வகுப்புகளுக்கும் படிப்புக் கட்டணங்கள் ரத்து. படிப்பைத் தொடர இயலாமல் இடையில் நிறுத்திய ஏழை மாணவர்களில் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் வேலை வாய்ப்புகளுக்கேற்ற தொழிற் பயிற்சிகளைச் சமுதாயக் கல்லூரிகள் மூலம் பெற, ஒரு கோடி ரூபாய் செலவில் திறந்த நிலைப் பல்கலைக் கழகம் மூலம் தலா ஆயிரம் ரூபாய் உதவித் தொகை; ஆண்டுதோறும் 24 லட்சத்து 82 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கும், 4 லட்சத்து 35 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ்; ஏழை மகளிர்க்கு பட்டப்படிப்பு வரை வழங்கப்பட்ட இலவசக் கல்வி, முதுகலைப் பட்டப் படிப்பு வரை நீட்டிப்பு.

தொழிற்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ரத்து. பட்டதாரிகள் இல்லாக் குடும்பங்களிலிருந்து தொழிற் கல்லூரிகளில் சேரும் முதல் மாணவர் அல்லது முதல் மாணவிக்கு கல்விக் கட்டணம் 20 ஆயிரம் ரூபாய் ரத்து; "மாவட்டத்திற்கொரு மருத்துவக் கல்லூரி'' கோட்பாட்டின்படி விழுப்புரம், திருவாரூர், தருமபுரி, சிவகங்கை, பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள்; அரசு பொறியியல் கல்லூரிகள் இல்லா திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, அரியலூர், திருக்குவளை, ராமநாதபுரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் புதிதாக அரசு பொறியியல் கல்லூரிகள். நூறாண்டு கனவை நனவாக்கிச் "செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்'' சென்னையில் அமைப்பு.

நலிந்த கலைஞர்களுக்கான நிதியுதவித் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட நிதியுதவி மாதம் 500 ரூபாய் என்பது 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது. 2006க்குப்பின் புதிதாக 2500 நலிந்த கலைஞர்களுக்குத் தலா ஆயிரம் ரூபாய் வீதம் உதவித் தொகை வழங்க அனுமதிக்கப்பட்டு இதுவரை 9 ஆயிரத்து 563 கலைஞர்கள் இத்திட்டத்தின்கீழ் பயன் பெற்றுள்ளனர்.

4724 திருக்கோவில்களில் 523 கோடி ரூபாய் செவில் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன;

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவித் திட்டம் உட்பட அனைத்துத் திருமண உதவித் திட்டங்களின் நிதியுதவி 10 ஆயிரம் ரூபாய் என்பது 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு; 4 லட்சத்து 67 ஆயிரத்து 419 ஏழைப் பெண்களுக்கு 882 கோடியே 6 லட்சம் ரூபாய் நிதியுதவி; ஏழைக் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தலா 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி திட்டத்தின்கீழ் 25 லட்சத்து 76 ஆயிரத்து 612 ஏழை மகளிர்க்கு மொத்தம் 1389 கோடியே 42 லட்சம் ரூபாய் நிதியுதவி; 50 வயது கடந்து திருமணமாகாமல் வறுமையில் வாடும் 12 ஆயிரத்து 904 ஏழைப் பெண்களுக்கு மாதம் 500 ரூபாய் உதவித் தொகை; "வருமுன் காப்போம் திட்டம்'' மீண்டும் செயல் படுத்தப்பட்டு 18 ஆயிரத்து 742 மருத்துவ முகாம்களில் ஒரு கோடியே 77 லட்சத்து 5 ஆயிரத்து 85 பேர் ஏழை எளியோர் பயன்;

தமிழகத்தில் உள்ள 1,421 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும்; புதிதாக உருவாக்கப்பட்ட 116 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தலா மூன்று செவிலியர்களைப் பணியமர்த்தி 24 மணிநேரமும் மருத்துவ சேவை அளிப்பதால், அங்கு 2005 2006ல் நடைபெற்ற மகப்பேறுகளின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 532 என்பது, 2009 2010ல் 2 லட்சத்து 98 ஆயிரத்து 853 ஆக, மூன்று மடங்கு உயர்ந்து கிராமப்புற மகளிர் மகிழ்ச்சியாக இருக்கிறார்களே, அது ஐந்தாண்டு கால சாதனையாக அம்மையாருக்குத் தெரியவில்லையா?

குழந்தைகள் உயிர் காத்திட மூடிய அறுவை சிகிச்சைக்கு 20 ஆயிரம் ரூபாய்; சாதாரண திறந்த அறுவை சிகிச்சைக்கு 50 ஆயிரம் ரூபாய்; கடினமான திறந்த அறுவை சிகிச்சைக்கு ஒரு லட்சம் ரூபாய் என அரசு நிதி உதவி வழங்கப்படுகிறது. 21.11.2007ல் தொடங்கப்பட்ட இளம் சிறார் இருதய அறுவை சிகிச்சைத் திட்டம், 3.6.2008ல் தொடங்கப் பட்ட பள்ளிச் சிறார் இருதய அறுவை சிகிச்சைத் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களின்கீழ் 3264 சிறார்க்கு 17 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் புகழ்வாய்ந்த 28 தனியார் மருத்துவ மனைகளின் மூலம் இருதய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு, குழந்தைச் செல்வங்களின் அரிய உயிர்கள் பாதுகாக்கப் பட்டுள்ளன.

கிராமப்புற ஏழைகளுக்கும் உடனடி மருத்துவ வசதி கிடைக்கச் செய்திட 445 ஊர்திகளுடன் கூடிய அதிநவீன "அவசர கால மருத்துவ ஊர்தி 108 சேவைத் திட்டம்''தமிழகம் முழுவதும் நடை முறை; 8 லட்சத்து 8 ஆயிரத்து 907 பேர் பயன்; அரசு ஊழியர்களுக்கு புதிய "மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்''; "உயிர்காக்கும் உயர்சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்''; இதுவரை 2 லட்சத்து 55 ஆயிரத்து 744 ஏழை மக்களுக்கு 667 கோடி ரூபாய் செலவில் உயிர்காக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளன.

ஏறத்தாழ 2 லட்சத்து 35 ஆயிரத்து 464 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் 62 ஆயிரத்து 349 கோடி ரூபாய் முதலீட்டிலான 27 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்; 24 அரசாணைகள் மூலம் 51 புதிய தொழிற்சாலைகள் அமைக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளில் இதுவரை 12 தொழிற் சாலைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன. 4 லட்சத்து ஓராயிரத்து 704 படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 284 கோடி ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது; ஏறத்தாழ 5 லட்சத்து 5 ஆயிரத்து 314 இளைஞர்களுக்கு அரசு அலுவலகங்களில் புதிய வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன;

ஆதரவற்ற முதியோர், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை மாதம் 200 ரூபாய் என்பது 1.9.2006ல் 400 ரூபாய் எனவும், 24.11.2010 முதல் 500 ரூபாய் என மேலும் உயர்த்தப்பட்டு, மொத்தம் 23 லட்சத்து 71 ஆயிரத்து 370 பேர் மாதம் 500 ரூபாய் வீதம் உதவித்தொகை பெறுகின்றனர். இந்த உதவித் தொகை மாதம் 750 ரூபாயாக உயர்த்தப்படும் என தற்போது தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்குப் பராமரிப்பு உதவித் தொகை மாதம் 200 ரூபாய் என்பது 500 ரூபாய் என உயர்த்தப்பட்டு, 2006 முதல் ஆண்டுதோறும் 10 ஆயிரம் கடும் மாற்றுத் திறனாளிகள் பயன்;

1989ல் தர்மபுரி மாவட்டத்தில் கழக அரசு தொடங்கிய மகளிர் திட்டத்தின் மூலம் இதுவரை உருவாக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களின் எண்ணிக்கை 5,54,538. இக்குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த கடன் 9 ஆயிரத்து 32 கோடி ரூபாய். 2006க்குப்பின் 26 லட்சத்து 94 ஆயிரம் மகளிர் உறுப்பினரைக் கொண்ட ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 493 புதிய மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு; 1068 கோடி ரூபாய் அளவுக்கு பொருளாதாரக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. 2,81,883 மகளிர் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுழல் நிதி 281 கோடியே 88 லட்சம் ரூபாய்.

மகளிர் சுய உதவிக் குழுக்களைப் போலவே 2006க்குப்பின் 19 ஆயிரத்து 885 இளைஞர் சுயஉதவிக் குழுக்களும், 30 ஆயிரம் நகர்ப்புற சுயஉதவிக் குழுக்களும், 11 ஆயிரத்து 155 விவசாயிகள் கூட்டுப் பொறுப்புக் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டு நிதியுதவிகள் வழங்கப் படுகின்றன.

நிதிநிலையில் நலிந்த 30 நகராட்சிகளிலும் தலா 75 லட்சம் ரூபாய் செலவில் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன; மாநகராட்சி, நகராட்சிகளின் நிதிநிலை மேம்பட்டு மக்களுக்கு வசதிகள் செய்திட அவை அரசுக்கு செலுத்த வேண்டிய 793 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி;

12 ஆயிரத்து 94 கோடி ரூபாய்ச் செலவில் 57 ஆயிரத்து 787 கிலோ மீட்டர் நீளச் சாலைகளில் மேம்பாட்டுப் பணிகளும் பராமரிப்புப் பணிகளும் நிறைவேற்றப் பட்டன; 4 ஆயிரத்து 730கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் இருவழித் தடங்களாக அகலப் படுத்தப்பட்டுள்ளன; தமிழகத்தில் உள்ள சாலைகளில் 1046 பாலங்கள் மற்றும் 3800 மிகச் சிறுபாலங்கள் 881 கோடி ரூபாய்ச் செலவில் கட்டப் பட்டுள்ளன; தமிழகத்தில் உள்ள 4,676 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகளில் 3,226 கி.மீ நீளச் சாலைகள் 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டு உள்ளன;

தலவரி, தலமேல்வரி, தண்ணீர்த் தீர்வை அனைத்தும் ரத்து; நிலவரி, ஏக்கர் ஒன்றுக்குப் புன்செய் நிலங்களுக்கு 15 ரூபாய் என்பது 2 ரூபாய் என்றும், நன்செய் நிலங்களுக்கு 50 ரூபாய் என்பது 5 ரூபாய் என்றும் பெயர் அளவிற்கு மட்டுமே வசூலிக்க அரசு ஆணை;

ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி ஆகிய 4 நகராட்சிகள் மாநகராட்சிகளாக நிலை உயர்த்தப்பட்டுள்ளன. அரியலூர், திருப்பூர் புதிய மாவட்டங்கள் உதயம்;

இஸ்லாமியர் சமுதாயம் மேன்மை பெற 3.5 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு; அருந்ததியர் சமூகத்தின் அவலம் தீர 3 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு; சமத்துவ சமுதாயம் காணும்நோக்கில் அனைத்துச் சாதியாரும் அர்ச்சகராகும் சட்டம் நிறைவேற்றப்பட்டு பல்வேறு சாதிகளையும் சார்ந்த 216 பேருக்கு அர்ச்சகர் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. அனைத்து சாதியினரும் ஒரே இடத்தில் வசிக்க ஏற்கனவே உருவாக்கப் பட்டுள்ள 145 பெரியார் நினைவு சமத்துவபுரங்களுடன் மேலும் 95 சமத்துவ புரங்கள் அமைத்து 240 சமத்துவபுரங்களையும் தந்தை பெரியார் திருவுருவச் சிலைகளுடன் நிர்மாணிக்கும் திட்டம் நடைமுறை; 95 சமத்துவ புரங்களில் இதுவரை 65 சமத்துவபுரங்கள் திறப்பு; 30 சமத்துவபுரங்கள் அமைக்கும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.

சென்னை கோட்டூர்புரத்தில் உலகத் தரத்திலான 181 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான "அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்'' திறப்பு; ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டமன்ற தலைமைச்செயலக வளாகம் திறந்து சாதனை; 100 கோடி ரூபாய் செலவில் அடையாறு தொல்காப்பியர் பூங்கா திட்டம்; சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் 8 கோடி ரூபாய் செலவில் உலகத்தரத்திலான "செம்மொழிப் பூங்கா''திறப்பு;

சென்னை குடிநீர் பற்றாக்குறையை தீர்த்திட, வட சென்னை மீஞ்சூரில் "கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்'' நிறைவேற்றப்பட்டு திறப்பு; மத்திய அரசு அனுமதித்துள்ள 908 கோடி ரூபாய் நிதியுதவியுடன் தென் சென்னையில் நெம்மேலியில் "கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்;'' ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கி நிதி உதவியுடன் 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் "மெட்ரோ ரெயில் திட்ட'' அமைப்புப் பணிகள் நடைபெறுகின்றன; 1929 கோடி ரூபாய் மதிப்பீட்டில், "ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்;''630 கோடி ரூபாய்ச் செலவில், "ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றம்;''

சென்னைத் துறைமுகத்திலிருந்து மதுரவாயல் வரை 1,655 கோடி ரூபாய் மதிப்பீட்டில், "பறக்கும் சாலைத் திட்டம்;'' வேகமாக உருவாகி வருகிறது. மத சுதந்திரம் பேண "கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் ரத்து;'' "மூன்றாவது காவல் ஆணையம்'' மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பூர்ணலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்டு, அது வழங்கிய 444 பரிந்துரைகளில் இதுவரை 278 பரிந்துரைகள் நடைமுறை; 2 லட்சத்து 12 ஆயிரத்து 981 சத்துணவுப் பணியாளர்கள் பயன்பெற காலமுறை ஊதியம்; ஓய்வூதியம்;

டெஸ்மா, எஸ்மா சட்டங்களை நீக்கி அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பறிக்கப்பட்ட சலுகைகளைகள் மீண்டும் வழங்கப்பட்டு, 1.1.2006 முதல் தமிழகத்தில் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 155 கோடியே 79 லட்சம் ரூபாய் கூடுதல் செலவில் 6வது ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதன்காரணமாக, 11 ஆயிரத்து 93 கோடி ரூபாய் அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு நிலுவைத் தொகையாக அனுமதிக்கப்பட்டு புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது.

ஏறத்தாழ 2 லட்சம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பயன்பெறும்வகையில் 200 கோடி ரூபாய் கூடுதல் செலவில் ஒரு நபர் குழு பரிந்துரை நடைமுறை; ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை நீக்கி 163 கோடி ரூபாய்ச் செலவில் கூடுதல் சலுகைகள்; 2.73 லட்சம் ஆசிரியர்கள் பயன். அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத அலுவலர்கள், அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்களில், மாற்றுத் திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ஊர்திப்படி 300 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கிட ஆணை;

21 லட்சம் குடிசை வீடுகளை 6 ஆண்டுகளில் கான்கிரீட் வீடுகளாக மாற்றும் "கலைஞர் வீடு வழங்கும் திட்டம்'' என்னும் புரட்சிகரமான திட்டம். நடப்பாண்டில் ஒரு வீட்டிற்கு 75 ஆயிரம் ரூபாய் மானியம் வீதம் 2,250 கோடி ரூபாய்ச் செலவில் 3 லட்சம் வீடுகளைக் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டு, பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்குரிய பணி ஆணைகள் வழங்கப்பட்டன. இத்திட்டத்தின்கீழ் முதல் வீடு கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வல்லம்படுகை கிராமத்தில் 9.10.2010 அன்று பயனாளிக்கு வழங்கப்பட்டது. இதுவரை 75 ஆயிரம் கான்கிரீட் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 31.3.2011க்குள் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கான்கிரீட் வீடுகளும், 15.4.2011க்குள் 2 லட்சம் கான்கிரீட் வீடுகளும் கட்டி முடிக்கப்படும். இதுவரை இத்திட்டத்திற்கு 1082 கோடி ரூபாய் அரசு செலவிட்டுள்ளது.

மேலும் 12 லட்சம் பயனாளிகளுக்கு தகுதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டமாக மேலும் 3 லட்சம் குடிசைகள் இத்திட்டத்தின்கீழ் கான்கிரீட் வீடுகளாகக் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டு 2011 பிப்ரவரியில் பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கான அரசு மானியம் 75 ஆயிரம் ரூபாய் என்பது ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப் பட்டுள்ளது.

இன்னும் துறைவாயிலாக கழக அரசின் ஐந்தாண்டு காலச் சாதனைகளையும் பட்டியலிடுவதென்றால் இடம் போதாது என்பதால் அந்தப் பட்டியலை நிறுத்தி விட்டேன். தற்போது கடந்த ஐந்தாண்டுகளில் எந்தச் சாதனையும் செய்யப்படவில்லை என்று தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேசப்படுவதால் ஒட்டுமொத்த சாதனைகள் சிலவற்றை அவர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் ஞாபகப்படுத்துவதற்காக இதனைத் தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

கடந்த 5 ஆண்டுகளில் என்ன சாதனைகள் புரிந்தோம் என்பதை எடுத்துச் சொல்லிவிட்டேன். இதையெல்லாம் அனுபவிக்கும் தமிழ்நாட்டு மக்கள் காட்டப்போகும் நன்றியினை எதிர்பார்த்து நிற்கின்றேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி:thatstamil

Vikatan Poll
வாக்குகளாக மாறக் கூடிய தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியிருப்பது...
திமுக. 54.83 %
அதிமுக. 45.17 %

இது கொசுறு.

Wednesday, January 12, 2011

ஏழை வாக்காளனும் ஸ்பெக்ட்ரமும்

எலெக்சன் வந்துகொண்டே இருக்கிறது. தினசரிகளும், வாராந்தரிகளும் எல்லாம் தெரிந்த கடவுள்களாக கதைவிட்டு காசு பார்க்கின்றனர். நிரம்பப் படித்தவர்கள் செய்திகளுக்குள் தலையைவிட்டுக்கொண்டு கருத்து சொல்லவும் காசு கேட்கிறார்கள். கொஞ்சம் நஞ்சம் படித்தவர்கள் தெரியாததையும் தெரிந்தது போல கெட்டுகெதரில் பேசிக்கொண்டோ, இணையத்தில் அரட்டிக்கொண்டோ இருக்கிறார்கள். வெளிநாட்டில் வேலை செய்யும் வீரதீர இளைஞர்களோ சுட்டும் சுடாமலும் மேதாவித்தனமாக தனிராஜ்யமாக கருத்துகளை அள்ளித்தெளிக்கிறார்கள். விசயம் தெரிந்த சில வேகமான இளைஞர்களோ அவனும் கொள்ளையன், இவனும் கொள்ளையன், அதோ அவளும் கொள்ளைக்கார்யென அனைவரையும் முச்சந்தியில் நிறுத்த முனையச் செய்து, எந்த ஒரு யோக்கியவானையும் காட்ட மறுக்கிறார்கள்.

மேலே சொன்ன இவர்களுக்கும் எலக்சனுக்கும் என்ன சம்மந்தம். ஒரு மண்ணும் இல்லை. மண் சாலையில் வாகனம் போகும்பொழுது புறப்படும் தூசு போன்றவர்கள். வாகனம் சென்றதும் அடங்கிவிடும். அதாவது, இவர்கள் மாடு ஒன்னுக்குப்போவது போல் பேசிக்கொண்டு இருப்பார்களேயொழிய ஓட்டுப்போட போகமாட்டார்கள்.

ஆனால் இந்த ஏழை வாக்காளன் இருக்கானே அதாங்க, எங்கும் நிறைந்து இருக்கும் தினக்கூலிகள், அவர்களுக்கு ஸ்பெக்ட்ரமும் தெரியாது ஃபோர்பர்சும் தெரியாது.

ஆனாக் கண்டிப்பா ஓட்டு மட்டும் போட்றுவாங்க. யாருக்கு? அதான் இப்போதைய முக்கியக் கேள்வி. பதிரிக்கைகள் ஆயிரம் கணித்தாலும், அதையெல்லாம் மண்ணாக்கிவிட்டு மகுடம் ஏற்ற வைக்கப்போவது இந்த ஏழை வாக்காளந்தான். விழும் ஓட்டில் 90 சதவீதம் படிக்காத, இல்லை படித்த ஆனால் பத்திரிக்கை படிக்காத ஏழை வாக்காளனுடையது.

அவன் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கும்? ஒரு மண்ணும் இல்லை. இன்று வேலைக்கு சென்றால் மூன்று வேலை சாப்பாடு. அது மட்டும்ந்தான். அதுவும் அந்த ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாயில் வாங்கி, ஓசி ஸ்டவ்வில், ஈசி கேசில் சமைத்துவிட்டு, ஆறமர்ந்து 14 இஞ்ச் கலர் டிவியில் மானாட மயிலாட பாக்கும்போது கடவுளே கருணாநிதின்னு சொல்லாம இருப்பாங்களான்னு தெரியல. கண்டிப்பா சொல்லுவாங்க. ஆமாம், பசி அவ்வளவு வலிமையானது. அந்த வலி பெரியளவுக்கு குறைஞ்சு இருக்கிறத, கிராமங்களப் பாக்கும்போது தெளிவாத் தெரியுது.

நான் சிறுவனாக இருந்தபோது இருந்த ஏழைத்தோற்றம் இப்பொழுது இல்லை. கோவனத்துடன் ஒரு ஏழையப் பார்ப்பது அருகிவிட்டது. கிட்டத்தட்ட எல்லோரும் நல்லுடை உடுத்தி, மூவேளை உண்டு, மொபைலோடு வலம் வருவது கண்ணுக்கு குளிர்ச்சி. தானா உருவான வளர்ச்சின்னு சொன்னாலும், கடவுள் கருணாநிதி கொடுத்தார்ன்னு ஒருவேள சொல்லிக்கொள்ளலாம்.அது ஓட்டாவும் மாறலாம்.

கொஞ்சம் நஞ்சம் ஏழை விவசாயிகள் இன்னும் கடனவுடன வாங்கி, இன்னும் விவசாயம் செய்யுறான்னா, கண்டிப்பா போனமுறை போல இம்முறையும் கலைஞர் தள்ளுபடி செய்வாருன்னு நம்பிக்கையா இருக்கலாம்.அதுபோக பயிர் இன்ஸ்சூரன்ஸ் கொடுத்து விளையாமப் போனாலும் காசுடான்னு சொல்ல வெச்ச கலஞருன்னு நினைக்கலாம். ஆக, விவசாயும் கலைஞருக்கு ஓட்டு போடலாம்.

இதுவரைக்கும் செருப்பு தச்சுகிட்டு எம்ஜியார் பின்னாடி ஓடிகிட்டு இருந்த அருந்ததியருக்கு உள் ஒதுக்கீட்ல ஒளியேத்தி, செருப்பு பிஞ்சா தூக்கிதான் போடனுமுன்னு நிலமைக்கு கொண்டுவந்த கலைஞருக்கு அவங்களும் ஓட்ட ஓங்கிப்போடலாம்.

காய்ச்சல் வந்தாலும், ஹார்ட் அட்டாக் வந்தாலும் கிராமத்து அனுபவ வைத்தியர்கிட்ட போனது நின்னு, தூக்குடா அப்பல்லோவுக்கு, கலைஞர் காப்பீடு இருக்குன்னு சொல்லவெச்ச கலைஞருக்கு ஏழைபாளைகள் ஓட்டுப்போடலாம்.

கூப்பிட்ட உடனே ஓடோடிவர்ற 108, மத்ய சர்க்காரு தந்ததாதா, இல்ல மாநில சர்க்கார் தந்ததான்னு யோசிக்க எல்லாம் நேரமில்லாம, கடவுள் கருணாநிதிதான் அனுப்பிச்சாருன்னு ஓட்டப்போடலாம்.

ரெண்டு ஏக்கர் நெலம் எல்லாருக்கும் கெடச்சதாங்றது முக்கியமில்ல, அதில இருக்கிற ஊழலும் முக்கியமில்ல. கெடச்சதா? ஆமா கெடச்சது. அப்ப கலைஞருக்கு ஓங்கிக் குத்துன்னு சொல்லலாம்.

கூரைவீடெல்லாம் காரை வீடாச்சு. இன்னும் ஆகும். கெடச்சவங்க கலைஞருக்கு ஓட்டப்போடலாம். அதுல கவுன்சிலருக்கு கொடுத்த முவ்வாயிரத்தப்பத்திக் கவலையில்லை.

வீட்ல சும்மா இருந்த பெண்களுக்கு குழுமம் அமைச்சு, உதவித் தொகை கொடுத்து பாக்குற கிராமங்களெல்லாம் பெண்கள் சுய உதவிக்குழுன்னு சொல்ல வெச்சதுக்கு தாய்க்குலங்களும் ஓட்டுகள அள்ளி வீசலாம்.

இந்த ஏழை வாக்காளனத் தவிர, அரசாங்க ஊழியர் கதையை சொல்லவும் செய்யனுமா? அவங்களுக்கு எப்பவுமே கலைஞர்தான் தோஸ்த். போக்குவரத்து சங்கத் தேர்தல பார்த்தது ஞாபகம் இல்லன்னா, கேட்டுத் தெரிஞ்சுக்கலாம்.

இப்படி இண்டு இடுக்கு இல்லாம கலைஞர் நுழைஞ்சுட்டார்ன்னுதான் தோனுது.

இந்த கண்டிப்பா ஓட்டுப்போடும் ஏழைகளுக்கு, ஸ்பெக்ட்ரமும் தேவையில்ல. ஈழமும் தேவையில்ல. ஓட்டுக்கு கொடுக்கப்படும் பணத்தின் வரலாறும் தேவையில்லை.

ஆனா ஓட்டு மட்டும் போட நிச்சயமா வரிசையில நிப்பான்.

ஆனால் அதுல ஊழல், இதுல ஊழல்ன்னு மாஞ்சு மாஞ்சு பேசியும் எழுதியும் திரியும் மேதாவிகளுக்கு, தேர்தல் தினம் ஒரு அரசாங்க விடுமுறை,அவ்வளவே.

கூட்டணி இப்படியென்றால்...

தி.மு.க + காங் + பா.ம.க = 174 இடங்கள்

அ.தி.மு.க + தே.மு.தி.க + ம.தி.மு.க + கம்யூனிஸ்ட் = 60

ஒருவேளை காங்கிரஸ் இடம் மாறினால், தி.மு.க வுக்கு 10 இடங்கள் மட்டுமே இழப்பு. பா.மா.கா வும் தடமாறினால் இன்னொரு 10 இடங்கள் இழப்பு. நிச்சயமாக கலைஞருக்கு இன்னொரு முறையும் மகுடம் தவறப்போவதில்லை இந்த ஏழை வாக்காளனால். இல்லை இல்லை இந்த படித்த ஓட்டுப் போடாத வாக்காளனால்.