A எனது நாட்குறிப்பு: தமிழினக் காவலர்கள் எங்கேப்பா?

Wednesday, April 27, 2011

தமிழினக் காவலர்கள் எங்கேப்பா?

தீண்டாமையின் பிடியில் சிக்கிய பள்ளி மாணவர்கள்: தினமும் ஒன்பது கி.மீ., நடந்து செல்லும் அவலம்


டி.என்.பாளையம்:தீண்டாமை கொடுமையால் அருகிலுள்ள பள்ளியில் பயில முடியாமல், 4.5 கி.மீ., தொலைவில் உள்ள பள்ளிக்கு செல்லும் பரிதாபமான நிலை, சத்தி அருகேயுள்ள கிராம குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளது.



சத்தி அருகே செண்பகப்புதூர் பஞ்சாயத்துக்குட்பட்டது குட்டை மேட்டூர் காலனி. இங்கு 100 குடும்பங்களை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அனைவருமே கூலித்தொழில் செய்து வரும் ஏழைகள்.இப்பகுதி மாணவர்கள் பள்ளிக்கல்வியை துவங்க வேண்டுமானால், 4.5 கி.மீ., தொலைவிலுள்ள நஞ்சப்பக்கவுண்டன் புதூர் நடுநிலைப்பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது.ஏன் இந்த கொடுமை; அருகில் ஏதும் பள்ளிகள் இல்லையா? என்ற கேள்வி எழுகிறது.காலனிக்கு அருகிலேயே 1.5 கி.மீ., தொலைவில் குண்டி பொம்மனூரில் யூனியன் நடுநிலைப் பள்ளி உள்ளது. ஆனால், அங்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த குழந்தைகளை சேர்க்க, ஜாதிக் கொடுமை குறுக்கே நிற்கிறது.



குண்டிபொம்மனூரில் பெரும்பான்மையாக வசிக்கும் மக்கள், தங்கள் ஊரில் உள்ள யூனியன் பள்ளியில், குட்டை மேட்டூர் காலனியை சேர்ந்த குழந்தைகள் கல்வி பயில, எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பல ஆண்டுகளாக தொடரும் இவர்களது எதிர்ப்பை சமாளிக்க முடியாமல், குட்டை மேட்டூர் காலனி மக்கள், வேறு வழியின்றி நஞ்சப்பக்கவுண்டன் புதூர் பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர். குழந்தைகளும் தினமும் ஒன்பது கி.மீ., பாத யாத்திரை செல்கின்றனர்.இப்பள்ளிக்கு செல்ல பிஞ்சு குழந்தைகள் நீண்ட தூரம் நடக்க வேண்டும் என்பதை விட, எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் சத்தி - கோவை தேசிய நெடுஞ்சாலை மற்றும் சத்தி - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையைக் கடப்பதுதான் பெரும் சோதனை.



அந்தளவுக்கு குண்டி பொம்மனூரில் தீண்டாமை கொடுமை நிலவுகிறது. இங்குள்ள நடுநிலைப்பள்ளியில் 70 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இவர்களில் 64 பேர் ஒரு சமூகத்தையும், ஆறு பேர் மற்றொரு சமூகத்தையும் சேர்ந்தவர்கள். தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எவரும் பல ஆண்டுகளாக பயின்றதில்லை என்பது இப்பள்ளியின் வரலாறு.



இப்பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், "குழந்தைகளை சேர்ப்பதில் நாங்கள் எந்த பாகுபாடும் பார்ப்பதில்லை. இங்கு நிலவும் எதிர்ப்பால், குட்டைமேட்டூர் காலனி மக்கள் இங்கு குழந்தைகளை சேர்ப்பதை நிறுத்திக் கொண்டனர்' என்றனர்.தங்கள் குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றி வெளிப்படையாக கூறவும், குட்டைமேட்டூர் காலனி மக்கள் தயங்குகின்றனர். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் 32 மாணவர்கள் இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளைக் கடந்து, நான்கரை கி.மீ., நடந்து, நஞ்சப்பகவுண்டன் புதூர் பள்ளிக்கு செல்வதை பார்க்க பரிதாபமாக உள்ளது.ஜாதிய ஒடுக்கு முறை பள்ளி செல்லும் மாணவர்களைக் கூட விட்டு வைக்கவில்லை என்பது வேதனைக்குரியது.


***

இந்தக் கொடுமை எங்கே நடக்குது? குண்டி பொம்மனூர். பேரே நாத்தமடிக்கையில வேற என்னத்த சொல்ல.

ங்கொய்யால இத ஒருத்தனும் கேக்கமாட்டான். இது இன்னக்கி நேத்து இல்லடி. தலைமுறை தலைமுறையா நடக்குது.இந்த பரதேசி நாய்கள் இதைக் கேக்கமாட்டானுங்க. ஏன்னா...? பாவம் இவிங்களுக்கென்ன வெளிநாட்டு பணமா கெடக்கு? ஒன்னுமில்லாதவனுங்கதான.


உள்ளூர்ல வெலை போகாத மாட்டுக்கு வெளியூர் சந்தைக் கேக்குது.

ச்சீமா(ன்)னிடர்களே... கொஞ்சம் இத்தயும் யோசிங்கப்பா.

4 comments:

http://urupudaathathu.blogspot.com/ said...

ச்சீமா(ன்)னிடர்கள் தான் வேண்டும் என்றில்லை, உங்களின் தமிழ் கொலைஞர் 5 ஆண்டுகள் என்ன புடுங்கிட்டு இருந்தாரா???

ஒரு அரசே இதை பற்றி நடவடிக்கை எடுக்க துப்பில்லாத போது எதுக்கு தனி நபர்களை பற்றி ஏச வேண்டும் ???

திருந்துங்கப்பா...

VJR said...

கரீக்கிட்டு அணிமா. ஆனால் தமிழ் உணர்வாளர்கள் இதைப்பற்றி ஏன் கேள்வி எழுப்பாமலே நழுவுகிறார்கள்? இவர்களையும் கொஞ்சம் கவனிக்க சொல்லுங்கப்பா.

bandhu said...

தமிழ் ஆர்வலர்களை விடுங்கள். இதை தடுக்க வேண்டிய அரசு ஐந்து வருடங்களாக என்ன பண்ணிக்கொண்டிருந்தது?

VJR said...

பந்து சார், என்ன சார் இது அஞ்சு வருசமாவா நடக்குது? தலைமுறை தலைமுறையாவுல்ல நடக்குது. ச்சும்மா சிலர் கண்ணுலயாச்சும் படட்டுமேன்னு இந்த பதிவு.

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.