A எனது நாட்குறிப்பு: விஜயகாந்த் வீட்டில்...

Wednesday, April 6, 2011

விஜயகாந்த் வீட்டில்...

விஜயகாந்த் வீட்டில் அப்படி என்னதான் பேசிக்கொ(ல்)கிறார்கள் என்று ஒட்டுக் கேட்டதில்...

சுதீஸ்:(ஹ(வி)ஸ்கி வாய்ஸில்)யெக்கா மாமாகிட்ட மலையேறிட்டு பிரச்சாரம் செய்யக்கூடாதுன்னு செப்புக்கா.

பிரேமலதா: யேய் நா எப்படிடா செப்பேது.

விஜயகாந்த்: நாக்கத் துருத்திக்கொண்டு “யே அங்க என்ன தனியா பேச்சு?”

பிரேமலதா: ஆமா அதுக்கொன்னும் கொரச்ச லேது. நாம இப்ப அதிமுக’கூட கூட்டணி. தெலுசுகாது.

விஜயகாந்த்: ஆங்ங்.. தெலுசு தெலுசு.

பிரேமலதா: பெறகு எதுக்கு அதிமுக கொள்கை ஜெயிலுலன்னு சொன்னீங்க?

விஜயகாந்த்: ஒரு ப்ளோவ்ல வந்துடுச்சு, இப்ப என்ன அதுக்கு?

சுதீஸ்: மா....மா. இப்ப என்ன அதுக்கா? அவன் அவன் காரித் துப்புறான். உசாரா பேசுங்க. கொஞ்ச நஞ்சம் ஓட்டுப் போட நெனச்சவனும் இப்ப தலை தெறிக்க ஓட்றானுங்க.

விஜயகாந்த்: யேமிரா செப்பேவு? வெளியப்போனா வடிவேலு ஏசுறான், ஊட்டுக்கு வந்தா நீங்க ஏசுறீங்க. இப்படி இருந்தா எக்கட்றா போயேது?

பிரேமலதா: எங்கயும் போக வேணாம். எலக்சன் முடியறவரைக்கு தண்ணியடிக்க வேண்டாம்.

விஜயகாந்த்: எப்படிம்மா? எப்படிங்றேன்? முடியுமா? முடியாது. ஒடம்பு நடுங்கிடும். பயம் எல்லாருக்கும் தெரிஞ்சுரும்.

பிரேமலதா: மண்ணாங்கட்டி. பயம் தெலுசுனா தெலுசிட்டு போகுது. இப்ப மூளையில்லன்னு தெரிஞ்சு போகுது.

விஜய்காந்த்: எதை வெச்சு சொல்ற?

சுதீஸ்: பின்ன? ஒரு மொற அடிச்சா மவராஜாய்டுவாங்றே. அப்புறம் அடிக்கவே இல்லேங்ற. இப்படியே போனா கட்சி காணாமப் போய்டும். இப்ப என்னா வேணும் உங்களுக்கு?

விஜயகாந்த்: நான் சி.எம் ஆவனும். ஆயி பாகிஸ்தான் பார்டர்ல போயி சண்ட போடனும், ரம் அடிக்கனும், ரம்மி பிடிக்கனும். இன்னும்....

சுதீஸ்: இன்னும்மா...? யெக்கா..... நீ தெய்வப் பிறவிக்கா. எப்படிக்கா? அட எட்டக்கா?

ராரா... பிரச்சாரத்துக்கு ராரா
போரா... பிந்தக்கு போரா...

1 comment:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.